Quantcast
Channel: Tamil Brahmins - 1,8,12,13,14,16,18,19,20,21,24,25,26,27,28,29,30,31,32,33,34,35,36,37,38,39,40,41,43,44,49,50,51,52,53,54,55,57,58,59,60,61,62,63,65,68,69,70,73,74,75,76,78,79,80,81,82,83,84,85,86,87,88,89,92,93,94,95,96,97,98,100,101,102
Viewing all articles
Browse latest Browse all 5709

திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்

$
0
0


திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்


திருக்குருகூர் என்ற திருத்தலத்தில் நம்மாழ்வார் அவதரித்தார். அத்தலத்திற்கு அருகில் உள்ள திருக்கோளூரில் மதுரகவியாழ்வார் தோன்றினார். சைவத்தில், வேளாளர் குலத்தில் தோன்றிய திருநாவுக்கரசரை, வேதியர் குலத்தில் பிறந்த அப்பூதியடிகள் குருநாதராகக் கொண்டார். அது போல், வைணவத்தில், வேதியர் குலத்தவராகிய மதுரகவி ஆழ்வார், வேளாளர் குலத்தில் தோன்றிய நம்மாழ்வாரை, குருநாதராகக் கொண்டார். திருக்கோளூரில் வைத்தமாநிதிப் பெருமாள் என்ற பெயருடன் திருமால் எழுந்தருளியுள்ளார். உடையவராகிய இராமானுஜர் வைத்தமாநிதிப் பெருமாளை, சேவிக்கத் திருக்கோளூருக்கு எழுந்தருளினார்.


இராமானுஜர் ஊருக்குள் நுழைந்த நேரத்தில், ஒரு பெண்மணி திருக்கோளூரை விட்டு வெளியேறிக்கொண்டிருந்தாள். அவளைக் கண்ட இராமானுஜர், “தாயே! அடியேன் ஊருக்குள் வரும்பொழுது, தாங்கள் ஏன் வெளியேறுகிறீர்கள்?” என்றார். “சுவாமி! தங்களைப் புறக்கணிக்கும் நோக்கம் எதுவும் எனக்கில்லை” என்றாள் அப்பெண்மணி.
காலந்தோறும் தோன்றிய திருமாலடியார்கள் போல், தான் எதனையும் சாதித்து விடவில்லை என்றும், அவர்கள் செய்தவை மகத்தானவை என்றும் கூறினாள். அத்துடன், அவர்களுடைய செயற்கரிய செயல்களைப் பட்டியலிட்டுக் கூறினாள். இராமாயணம், மகாபாரதம், பாகவதம், ஆழ்வார்களின் வரலாறுகள் ஆகியவற்றில் குறிப்பிடப்படும் சான்றோர்கள் செய்த எண்பத்தோரு அருஞ்செயல்களைக் கவிதை வடிவில் கூறினாள்.


அத்தகைய சான்றோர்கள் செய்தது போன்ற செயல்கள் எதனையும் தான் செய்யவில்லையே என்ற ஏக்கத்தை அக்கவிதை அடிகளில் வெளிப்படுத்தினாள். மிகச் சிறந்த திருத்தலமாகிய திருக்கோளூரில், தான் தொடர்ந்து வசிக்கத் தகுதியற்றவள் என்று குறிப்பிட்ட அப்பெண்மணி, அதனால்தான் அவ்வூரை விட்டு வெளியேறுவதாகக் கூறினாள். வயலில் கிடக்கும் முயல் புழுக்கையைப் போல், தான் திருக்கோளூரில் பயனற்றவளாக இருப்பதாகக் கூறினாள்.


இராமானுஜரும் திருக்கோளூர்ச் சான்றோர்களும் அப்பெண்மணியின் ஞானத்தையும், பணிவையும் கண்டு வியந்தனர். அப்பெண்மணியை இராமானுஜர் தன்னுடன் அழைத்துச் சென்று, வைத்தமாநிதிப் பெருமாளைச் சேவிக்கச் செய்தார். அப்பெண்மணியின் இல்லத்திற்கும் இராமானுஜர் எழுந்தருளித் திருவமுது செய்தார்.


அப்பெண்மணியை, ‘திருக்கோளூர், பெண்பிள்ளை’ என்று குறிப்பிடுவர். அவள் இயற்றிய நூலை, ‘திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்’ என்று போற்றுகின்றனர். திருமாலடியார்களின் செயற்கரிய செய்லகளை இரண்டிரண்டு அடிகளில் குறிப்பிட்டுப் பாடியுள்ளார். அவற்றுள் இதிகாச புராண வரலாறுகள் அடங்கியுள்ளன. ஒவ்வொரு வரலாற்றிலும் ஒவ்வொரு ரகசியம் (மறைபொருள்) அடங்கியுள்ளது.

அவற்றை இந்த புஸ்தகத்தில் காணலாம்

திருக்கோளூரம்மாள் வார்த்தை

Viewing all articles
Browse latest Browse all 5709

Trending Articles