ஸ்ரீமதுரகாளி தாயே அம்மா உந்தன் மலரடியே சரணம்
நாமெல்லாரும் இப்பிறவியில் நம்மை ஈன்றெடுத்த தாயாரை அம்மா என்கிறோம். நூறு வயது வரை வாழ்ந்தாலும் இப்பிறவிக்கு ஒரு தாயார்தான். அடுத்த பிறவியில் யாருடைய வயிறோ? யாரை நாம் அம்மா என அழைத்தபடி எவள் பின்னால் ஓடுவோமோ? அதை யாராலும் அறிய முடியாது. ஆனால் எத்தனையெத்தனை பிறவி எடுத்தாலும் நமக்கென ஒரு தாய் நிரந்தரமாய் இருக்கிறாள். கண்ணையும், கருத்தையும் நம் மீதே பதித்தபடி. அவளை நாம் அழைக்கக் கூடத் தேவையில்லை. தானே வந்து உதவுவாள். அவள் யார்?
அவள் தான் சிறுவாச்சூர். ஆம் ஸ்ரீமதுரகாளி அம்மன் தான். அகில உலக அன்னைக்கு பக்தர்கள் பல உண்டு உலகத்தவரின் நம்பிக்கைக்கு கலங்கரை விளக்காக ஆங்காங்கு சக்தி பீடங்கள் விளங்கி வருகின்றன. அவ்வாறு உலக மக்களால் போற்றப்படும் தலங்களில் குறிப்பிடும்படியான ஒன்றாக விளங்கி வருகிறது அருள்மிகு தேவி ஸ்ரீமதுரகாளிஅம்மன் திருத்தலம் .
தமிழ்நாட்டில் புகழ்பெற்று விளங்கும் சக்தித் திருத்தலங்களில் மகிமை மிக்கது இத்திருத்தலம். தாய்! ஒரு குழந்தை காணும் முதல் முகம்! அந்தத் தாய் தன் குழந்தையிடம் அளப்பரிய அன்பு கொண்டவள். எனவே குழந்தைகள் அன்னையைத்தான் முதலில் நாடும். தனக்குத் தேவையானவற்றை அன்னையிடம் கூறி அவள் மூலம் பெறுவதே குழந்தையின் இயல்பு. அதே போல ஆண்டவனின் அருளை நாடுவோர் முதலில் அன்னையை நாடுவர். அம்மை மனம் கனிந்தால் அப்பனின் அருள் எளிதில் கிடைக்கும். அந்த அன்னை எண்ணிலா வடிவங்களில், எண்ணிலாப் பெயர்களில் எண்ணிலாத் திருக்கோவில்களில் ஆட்சி செலுத்திக் கொண்டிருக்கிறாள்.
ஏழை, பணக்காரன் படித்தவன் முதல் பாமரன் வரை அவள் பாதம் காண ஓடி வருவர். அனைவருக்கும் அருளும் அன்பு தெய்வம் அவள்! குறை தீர்க்கும் கற்பகவல்லி! நிறை வாழ்வு நல்கும் நாயகி! அகில உலகமும் காக்கும் அந்த அன்பு அன்னையைத் தொழுவோம்! அனைத்து அருளும் பெறுவோம்.
நாமெல்லாரும் இப்பிறவியில் நம்மை ஈன்றெடுத்த தாயாரை அம்மா என்கிறோம். நூறு வயது வரை வாழ்ந்தாலும் இப்பிறவிக்கு ஒரு தாயார்தான். அடுத்த பிறவியில் யாருடைய வயிறோ? யாரை நாம் அம்மா என அழைத்தபடி எவள் பின்னால் ஓடுவோமோ? அதை யாராலும் அறிய முடியாது. ஆனால் எத்தனையெத்தனை பிறவி எடுத்தாலும் நமக்கென ஒரு தாய் நிரந்தரமாய் இருக்கிறாள். கண்ணையும், கருத்தையும் நம் மீதே பதித்தபடி. அவளை நாம் அழைக்கக் கூடத் தேவையில்லை. தானே வந்து உதவுவாள். அவள் யார்?
அவள் தான் சிறுவாச்சூர். ஆம் ஸ்ரீமதுரகாளி அம்மன் தான். அகில உலக அன்னைக்கு பக்தர்கள் பல உண்டு உலகத்தவரின் நம்பிக்கைக்கு கலங்கரை விளக்காக ஆங்காங்கு சக்தி பீடங்கள் விளங்கி வருகின்றன. அவ்வாறு உலக மக்களால் போற்றப்படும் தலங்களில் குறிப்பிடும்படியான ஒன்றாக விளங்கி வருகிறது அருள்மிகு தேவி ஸ்ரீமதுரகாளிஅம்மன் திருத்தலம் .
தமிழ்நாட்டில் புகழ்பெற்று விளங்கும் சக்தித் திருத்தலங்களில் மகிமை மிக்கது இத்திருத்தலம். தாய்! ஒரு குழந்தை காணும் முதல் முகம்! அந்தத் தாய் தன் குழந்தையிடம் அளப்பரிய அன்பு கொண்டவள். எனவே குழந்தைகள் அன்னையைத்தான் முதலில் நாடும். தனக்குத் தேவையானவற்றை அன்னையிடம் கூறி அவள் மூலம் பெறுவதே குழந்தையின் இயல்பு. அதே போல ஆண்டவனின் அருளை நாடுவோர் முதலில் அன்னையை நாடுவர். அம்மை மனம் கனிந்தால் அப்பனின் அருள் எளிதில் கிடைக்கும். அந்த அன்னை எண்ணிலா வடிவங்களில், எண்ணிலாப் பெயர்களில் எண்ணிலாத் திருக்கோவில்களில் ஆட்சி செலுத்திக் கொண்டிருக்கிறாள்.
ஏழை, பணக்காரன் படித்தவன் முதல் பாமரன் வரை அவள் பாதம் காண ஓடி வருவர். அனைவருக்கும் அருளும் அன்பு தெய்வம் அவள்! குறை தீர்க்கும் கற்பகவல்லி! நிறை வாழ்வு நல்கும் நாயகி! அகில உலகமும் காக்கும் அந்த அன்பு அன்னையைத் தொழுவோம்! அனைத்து அருளும் பெறுவோம்.