Quantcast
Channel: Tamil Brahmins - 1,8,12,13,14,16,18,19,20,21,24,25,26,27,28,29,30,31,32,33,34,35,36,37,38,39,40,41,43,44,49,50,51,52,53,54,55,57,58,59,60,61,62,63,65,68,69,70,73,74,75,76,78,79,80,81,82,83,84,85,86,87,88,89,92,93,94,95,96,97,98,100,101,102
Viewing all articles
Browse latest Browse all 5709

Sreeman NArAyaNeeyam

$
0
0
த3ச’கம் 86 ( 9 to 11)

யுத்3தா4தௌ3 தீர்த்த2 கா3மீ
ஸ க2லு ஹலத4ரோ நைமிச’ க்ஷேத்ர மிச்சன்
அப்ரதயுத்தா2யி ஸூதக்ஷய க்ருத3த2 ஸுதம்
தத்பதே3 கல்பயித்வா |
யக்ஞாக்4னம் வல்வலம் பர்வணி பரித3லயன்
ஸ்நாத தீர்த்தோ2 ராணாந்தே
ஸம்ப்ராப்தோ பீ4ம து3ர்யோத4ன ரணம்
அச’மம் வீக்ஷ்ய யாத: புரீ தே || (86 – 9)


மகா பாரத யுத்தத்தின் ஆரம்பத்திலேயே பலராமன் தீர்த்த யாத்திரை சென்று விட்டான். நைமிசாரண்யத்துக்கு பலராமன் சென்ற போது சூத பௌராணிகர் தன் ஆசனத்தில் இருந்து எழுந்து அவனுக்கு மரியாதை செய்யவில்லை. கோபம் அடைந்த பலராமன் அவரைக் கொன்றுவிட்டு அவருடைய பிள்ளையை அவர் இடத்திற்கு நியமித்தான். பர்வ காலங்களில் யாகங்களைக் கெடுத்து வந்த பல்வலன் என்ற அசுரனைக் கொன்றான். தீர்த்த ஸ்நானத்தை முடித்துக் கொண்டு யுத்த முடிவில் திரும்பி வந்தான். பீமன், துரியோதனன் இவர்கள் இடையே நடந்த கதாயுத யுத்தம் முடிவடையாததைக் கண்டு தங்கள் நகரமாகியத் துவாரகைக்குத் திரும்பிச் சென்றான்.

ஸம்ஸுப்த த்3ரௌபதே3ய க்ஷபண ஹததி4யம்
த்3ரௌணி மேத்ய த்வது3க்தயா
தன்முக்தம் ப்3ராஹ்ம மஸ்த்ரம் ஸமஹ்ருத
விஜயோ மௌலிரத்னம் ச ஜஹ்ரே |
உச்சித்யை பாண்டவானாம் புனரபி ச விச’த்
யுத்தரா கர்ப்ப4 மஸ்த்ரே
ரக்ஷன்னங்கு3ஷ்ட2 மாத்ர: கில ஜட2ர மகா3ச்’
சக்ரபாணி விபோ4 த்வம் || (86 – 10)


தூங்கிக் கொண்டிருந்த திரௌபதியின் பிள்ளைகளைப் புத்தி கெட்ட அஸ்வத்தாமன் கொன்று விட்டான். அவன் விடுத்த பிரம்மாஸ்திரத்தைத் தங்கள் கட்டளைப் படி அர்ஜுனன் உப சம்ஹாரம் செய்துவிட்டான். அஸ்வத்தாமன் தலையில் இருக்கும் மணியையும் அகற்றிவிட்டான். பாண்டவர்களின் குலத்தையே நாசம் செய்வதற்காக அஸ்வத்தாமன் விடுத்த அஸ்த்திரம் உத்தரையின் கர்ப்பதில் புகுந்து விட்டது. அப்போது தாங்கள் கட்டைவிரல் அளவு சரீரம் உடையவராகக் கையில் சுதர்சனத்துடன் உத்தரையின் கர்ப்பத்தில் புகுந்து சிசுவைக் காப்பாற்றினீர்கள் அல்லவா?

த4ர்மௌக4ம் த4ர்மஸூனோ: அபி4த3த4த்3
அகி2லம் ச2ந்த ம்ருத்யுஸ் ஸ பீ4ஷ்ம:
த்வாம் பச்’யன் ப4க்தி பூ4ம்னைவ ஹி ஸபதி3
யயௌ நிஷ்கல ப்3ரஹ்ம பூ4யம் |
ஸம்யாஜ்யாதாச்’வ மேதை4ஸ்த்ரிபி4:அதி மஹிதைர்
த4ர்மஜம் பூர்ண காமம்
ஸம்ப்ராப்தோ த்3வாரகாம் த்வம் பவனபுரபதே
பாஹிமாம் ஸர்வ ரோ3கா4த் || (86 – 11)


தான் விரும்பிய போது மரணம் அடையும் வரத்தைப் பெற்றிருந்தார் பீஷ்மர். அவர் தர்ம புத்திரனுக்குத் தர்மங்களை எல்லாம் உபதேசம் செய்தார். தங்களையும் நேரில் தரிசனம் செய்து தன் பக்தியின் மேன்மையால் நிர்குண பிரம்ம பாவத்தை அடைந்தார். பிறகு தன் அபீஷ்டங்கள் அனைத்தும் நிறைவேறிய தர்ம புத்திரனுக்காக மூன்று அச்வ மேத யாகங்களைச் செய்விதீர்கள் ஹே குருவாயூரப்பா! அப்படிப் பட்ட தாங்கள் என்னை எல்லா வியாதிகளிலிருந்தும் காப்பாற்ற வேண்டும்.

Viewing all articles
Browse latest Browse all 5709

Trending Articles