Quantcast
Channel: Tamil Brahmins - 1,8,12,13,14,16,18,19,20,21,24,25,26,27,28,29,30,31,32,33,34,35,36,37,38,39,40,41,43,44,49,50,51,52,53,54,55,57,58,59,60,61,62,63,65,68,69,70,73,74,75,76,78,79,80,81,82,83,84,85,86,87,88,89,92,93,94,95,96,97,98,100,101,102
Viewing all articles
Browse latest Browse all 5709

Quotable Quotes Part II

$
0
0
9. ஏரொளிச் சக்கரம்

9. ஏரொளிச் சக்கரம்
ஏர் ஒளிச் சக்கரம் = எழுச்சி கொண்டு உடலில் மேல் முகமாக நோக்கும் ஒளி வடிவான சக்கரம்.
மூலாதாரத்தில் உள்ள அக்கினி எலாவற்றையும் தனக்குள் அடக்கிக் கொண்டு பரந்து ஒன்றாகி நிற்பது.


#1255 to #1259

#1255. மையத்தில் தீ மயமான சிவன்

ஏர் ஒளி உள் எழு தாமரை நால் இதழ்;
ஏர் ஒளி விந்துவினால் எழுநாதமாம்;
ஏர் ஒளி அக்கலையெங்கும் நிறைந்தபின்
ஏர் ஒளிச் சக்கர அந்நடு வன்னியே.


மூலாதாரத்தில் தோன்றி எழும் ஒரு நான்கு இதழ்த் தாமரை. அது ஒளி மிகுந்தது. தூல விந்து மாற்றம் அடைந்து மேலே எழுந்து சிரசை அடையும் போது அதன் ஒளி சிரசில் நாதமாக மாறிவிடும். அதன் கலை முழுவதுமாக எழுந்த பிறகு அதன் மையத்தில் தீ வடிவாகச் சிவம் விளங்கும்.

#1256. சிரசில் அமையும் சக்கரம்


வன்னி எழுத்து அவை மாபலம் உள்ளன;
வன்னி எழுத்து அவை வான் உற ஓங்கின;
வன்னி எழுது அவை மாபெருஞ் சக்கரம்,
வன்னி எழுத்து இடுவாறு அது சொல்லுமே.


மூலாதாரத்தில் உள்ள நான்கு இதழ்த் தாமரையில் உள்ள நான்கு எழுத்துகள் ‘வ’, ‘ச’, ‘ஷ’, ‘ஸ’. அவை வானளாவி ஓங்கி நிற்பவை. அவை அங்கு வலிமை வாய்ந்த சக்கரமாக அமைகின்றன. அதை நான் இப்போது கூறுவேன்.

#1257. நூற்று நாற்பத்து நான்கு சக்திகள்


சொல்லிய விந்துவும் ஈராறு நாதமாம்;
சொல்லிடும் அப்பதி அவ்வெழுத்து ஆவன
சொல்லிடும் நூறொடு நாற்பத்து நால் உரு
சொல்லிடு சக்கரமாய் வரும் மேலதே.


வீரியமாகக் கீழே இருந்த விந்து மாற்றி அமைக்கப்படும் போது பன்னிரண்டு கலைகளைக் கொண்ட கதிரவனாகச் சிரசில் விளங்கும். மூலாதாரத்தில் இருந்த அக்கினியாகிய ‘வ’, ‘ச’, ‘ஷ’, ‘ஸ’ என்னும் நான்கும் மூலாதாரத்தில் இருந்து இடைகலை , பிங்கலை, சுழுமுனை என்னும் மூன்று நாடிகளின் வழியே மேலே செல்லும். அவை அங்கு நூற்று நாற்பத்து நான்கு சக்திகளாக மாறித் தலையின் வட்ட வடிவத்தில் அமையும்.

#1258. பூமித் தத்துவம்


மேல்வரும் விந்துவும் அவ்வெழுத்து ஆய்விடும்
மேல்வரும் நாதமும் ஓங்கும் எழுத்துடன்
மேல்வரும் அப்பதி அவ்வெழுத்தே வரின்
மேல்வரும் சக்கர மாய்வரும் ஞாலமே.


மேல் நோக்கி வரும் விந்துவும் ‘அம்’ என்ற அந்த எழுத்து ஆகிவிடும். அதை விளக்கச் சந்திர மண்டலம் தலை மேல் அமையும். அதன் ஒளியுடன் அங்கு நாதமும் ஓங்கி நிற்கும். தலயின் மேல் சந்திர மண்டலம் சிறப்பாக அமைந்து விட்டால் அங்கு பூமித் தத்துவம் நுண்மையாக அமையும்.

#1259. நுண்மையே பருமையாக மாறிவிடும்


ஞாலம் அது ஆக விரிந்தது சக்கரம்;
ஞாலம் அது ஆயிடும் விந்துவும் நாதமும்;
ஞாலம் அது ஆயிடும் அப்பதி யோசனை;
ஞாலம் அது ஆக விரிந்தது எழுத்தே.


மேலே விளங்குகின்ற நூற்று நாற்பத்து நான்கு அறைகளையுடைய மண்டலமே உலகமாக விரிவடையும். அதில் விளங்குகின்ற நாதமே உலகமாக விரிவடையும். அது இறைவனின் சங்கற்பத்தால் உலகமாக விரிவடையும். சூரிய சந்திர மண்டலங்களில் உள்ள நுட்பமான ஒலியே இந்தப் பருவுலகமாக விரிவடையும்.

Viewing all articles
Browse latest Browse all 5709

Trending Articles