Quantcast
Channel: Tamil Brahmins - 1,8,12,13,14,16,18,19,20,21,24,25,26,27,28,29,30,31,32,33,34,35,36,37,38,39,40,41,43,44,49,50,51,52,53,54,55,57,58,59,60,61,62,63,65,68,69,70,73,74,75,76,78,79,80,81,82,83,84,85,86,87,88,89,92,93,94,95,96,97,98,100,101,102
Viewing all articles
Browse latest Browse all 5709

Quotable Quotes Part II

$
0
0
#1411. வானவரும் வந்து வணங்குவர்

விளங்கிடும் வானிடை நின்றவை எல்லாம்
வணங்கிடும் மண்டலம் மன்னு யிராக,
நலம் கிளர் நன்மைகள் நாரணன் ஒத்துச்
சுணங்கிடை நின்று, அவை சொல்லலும் ஆமே.


சாதனையாளரை மண்ணில் வாழ்பவர்கள் மட்டுமின்றி விண்ணில் வாழும் உயிர்களும் வந்து வணங்கி நிற்கும். திருமாலைப் போன்று ஒருவர் பெரும் இன்பங்களைப் பற்றித் துன்பங்கள் நிறைந்த ஓர் இடத்தில் இருந்து சொல்ல முடியாது அல்லவா?

#1412. பூமேல் வரும் பொற்கொடி


ஆமே அதோமுகம், மேலே அமுதமாய்த்
தானே உகாரம் தழைத்து எழுஞ் சோமனும்,
கா மேல் வருகின்ற கற்பகம் ஆனது,
பூமேல் வருகின்ற பொற்கொடி யானதே.


மூலாதாரத்தில் கீழே நோக்குபவளாக இருந்தவள் குண்டலினி சக்தி. பின்னர் அவள் உகாரத்துடன் பொருந்தி இடை நாடியில் விளங்கினாள். பின்பு ஒளியாக எழுந்து மேலே சென்று சகசிர தளத்தை அடைந்தாள். அங்கு நிலைபெற்றாள். சீவன் எண்ணும் எண்ணங்களை நிறைவு செய்யும் கற்பகத் தரு ஆனாள். அனைத்து சித்திகளையும் நல்கிடும் இலக்குமி தேவியும் அவளே ஆவாள்.

#1413. ஆங்காரம் நீங்கிவிடும்


பொற்கொடி யாளுடன் பூசனை செய்திட
அக்களி ஆகிய ஆங்காரம் போயிடும்,
மற்கடம் ஆகிய மண்டலம் தன்னுள்ளே
பிற்கொடி ஆகிய பேதையைக் காணுமே.


பொற்கொடி போன்ற பராசக்தியை பூசியுங்கள். அப்போது உங்கள் அகங்காரம் நீங்கி விடும். நிலை பெற்று விளங்கும் பரமாகாயத்தில் பின்னியகொடி போன்ற இந்த மின்னல் கொடியாளைக் காணலாம்.

#1414. மண்ணுலகம் ஒரு திலகம்


பேதை இவளுக்குப் பெண்மை அழகு ஆகும்,
தாதை இவளுக்குத் தாணுவுமாய் நிற்கும்,
மாது ஐ அவளுக்கு மண்ணும் திலகமாய்க்
கோதையர் சூழக் குவிந்த இடம் காணுமே.


பெண்மையே பராசக்திக்கு அழகு ஆகும். சிவபெருமானே இவளுக்குத் தந்தை ஆவான். பரந்து, விரிந்த இந்த மண்ணுலகு பராசக்தியின் சிறு திலகம் போன்றது. பல சக்தியர் சூழ்ந்திருக்க இவள் மேலே ஒரு குவிந்த இடத்தில் இருப்பாள்.

#1415. பரந்த இதழ் பங்கயம்


குவிந்தனர் சக்தியர் முப்பத் திருவர்
நடந்தனர் கன்னிகள் நாலெண்மர் சூழப்
பரந்த இதழ் ஆகிய பங்கயத் துள்ளே
இருந்தனர் காணும் இடம் பல கொண்டே


கன்னியராகிய சக்தியர் முப்பத்திருவர் உள்ளனர். பரவிய இதழ்களைக் கொண்ட சகசிரதளத்தில் பராசக்தி பல இடங்களைத் தனதாக்கிக் கொண்டாள்.

Viewing all articles
Browse latest Browse all 5709

Trending Articles