Quantcast
Channel: Tamil Brahmins - 1,8,12,13,14,16,18,19,20,21,24,25,26,27,28,29,30,31,32,33,34,35,36,37,38,39,40,41,43,44,49,50,51,52,53,54,55,57,58,59,60,61,62,63,65,68,69,70,73,74,75,76,78,79,80,81,82,83,84,85,86,87,88,89,92,93,94,95,96,97,98,100,101,102
Viewing all articles
Browse latest Browse all 5709

Quotable Quotes Part II

$
0
0
#1443 to #1446

5. சரியை
பலத் திருத் தலங்களுக்குச் சென்று சிவனைப் புகழ்ந்து படுவதும், அவனைக் கோவில்களுக்குச் சென்று வழிபடுவதும் சரியை என்று கூறப்படும்.


#1443. சரியை உயிர்நெறி ஆகும்

நேர்ந்திடு மூல சரியை நெறியிதென்று
ஆய்ந்திடும் காலாங்கி கஞ்ச மலையமான்
ஓர்ந்திடும் கந்துரு கேண்மின்கள் பூதலத்து
ஓர்ந்திடும் சுத்த சைவத் துயிரதே.


காலாங்கி, கஞ்ச மலையமான், கந்துரு என்னும் மாணவர்களே கேளுங்கள்! வீடு பேற்றை அடைவதற்கு முதல் அங்கமான சரியை, சுத்த சைவர்களுக்கு உயிரைப் போன்று மிகவும் உயர்ந்தது ஆகும்.

#1444. சிவ பூசை

உயிர்க்கு உயிராய் நிற்றல் ஒண் ஞான பூசை,
உயிர்க்குஒளி நோக்கல் மகாயோக பூஜை,
உயிர்பெறும் ஆவாகனம் புறப்பூசை
செயிற்கு அடை நேசம் சிவபூசை யாமே.

உயிரின் உயிராக இறைவன் இருப்பதை அறிந்து கொள்ளுதல் சிறந்த ஞான பூசை.
உயிருக்கு ஒளி தருபவன் இறைவன் என்று அறிந்து கொள்ளுதல் உயர்ந்த யோக பூசை.
இறைவனைப் பிராணப் பிரதிட்டையாகச் செய்து அன்போடு வழிபடுவது புற பூசை.
வெளியே செய்யும் சிவனின் புறபூசை பின்னர் ஞானபூசையின் வாயிலாக அமையும்.

#1445. நெஞ்சமே அவன் ஆலயம்

நாடும் நகரமும் நற்றிருக் கோயிலும்
தேடித் திரிந்து சிவபெரு மானென்று
பாடுமின் பாடிப் பணிமின் பணிந்தபின்
கூடிய நெஞ்சத்துக் கோயிலாய்க் கொள்வனே.


நாடுகள், நகரங்கள், நல்ல திருக்கோவில்கள் இவற்றைத் தேடிச் செல்லுங்கள். சிவன் வீற்றிருக்கும் தலங்களைப் பாடுங்கள். பாடி அன்புடன் வணங்குங்கள். வணங்கிய அன்பரில் நெஞ்சத்தையே தன் ஆலயமாகக் கொண்டு சிவன் அங்கே விருப்புடன் உறைவான்.

#1446. பக்தி செய்யும் வகைகள்

பத்தர் சரியை படுவோர், கிரியையோர்
அத்தகு தொண்டர் அருள் வேடத்து ஆகுவோர்
சுத்த இயமாதி சாதகர் தூயோகர்
சித்தர் சிவஞானம் செய்து எய்து வோர்களே.


கோவிலில் வழிபாடுகள் செய்து சரியை நெறியில் நின்று சிவனிடம் பக்தி செய்பவர் பக்தர்.
கிரியை வழியில் நின்று சிவ சாதனங்களை அணிந்து கொண்டு சிவ வேடம் தாங்குபவர் தொண்டர்.
அட்டாங்க யோக நெறிகளை உணர்ந்தோ கொண்டு அந்தத் தூய நெறியில் நிற்பவர் தூய யோகியர்.
சிவத்தைத் தனக்குள்ளேயே கண்டு கொண்டு அதனுடன் ஒன்றி நிற்பவர் அனைவரிலும் சிறந்த சித்தர்.

Viewing all articles
Browse latest Browse all 5709

Trending Articles