Quantcast
Channel: Tamil Brahmins - 1,8,12,13,14,16,18,19,20,21,24,25,26,27,28,29,30,31,32,33,34,35,36,37,38,39,40,41,43,44,49,50,51,52,53,54,55,57,58,59,60,61,62,63,65,68,69,70,73,74,75,76,78,79,80,81,82,83,84,85,86,87,88,89,92,93,94,95,96,97,98,100,101,102
Viewing all articles
Browse latest Browse all 5709

Quotable Quotes Part II

$
0
0
#1462 to #1466

#1462. மெய்த்தவம்

விரும்பிநின் றேசெயின் மெய்த்தவ ராகும்
விரும்பிநின் றேசெயின்மெய்யுரை யாகும்
விரும்பிநின் றேசெயின் மெய்த்தவ மாகும்
விரும்பிநின் றேசெயின் விண்ணவ னாகுமே.


மதி, கதிரவன், அக்கினிகளைச் சிரசில் கொண்டு சேர்க்கும் யோகத்தை விருப்பத்துடன் செய்பவர் மெய்த்தவர் ஆவர். இங்ஙனம் விரும்பிச் செய்பவரின் உரை மெய்யுரை ஆகும். இங்ஙனம் விரும்பிச் செய்பவரின் தவம் மெய்த்தவம் ஆகும். இங்ஙனம் விரும்பிச் செய்பவன் தேவனாகி விடுவான்.
சிவ வடிவம் பெற்றவன் பிரணவ தேசிகன் என்ற பெயர் பெறுவான். இதுவே ஒரு மனிதன் ஒரு தேவ உடல் பெறுவது ஆகும்.

#1463. உடலின் வெம்மை சிவனே

பேணிப் பிறவா உலகு அருள் செய்திடும்;
காணின் தனது கலவியுளே நிற்கும்
நானின் நரக வழிக்கே வழி செய்யும்
ஊனில் சுடும் அங்கி உத்தமன் தானே.


உடலின் வெப்பமாக இருந்து வருவது சிவனே! அது ஆண் பெண் கொள்ளும் உறவில் அக்கினி மண்டலத்தில் மேலும் விளக்கம் அடையும். இதை மேலே எழும்படிச் செய்தால் மீண்டும் பிறவி இல்லாத ஒளி உலகினை அடைவிக்கும். நாணம் கொண்டு இதைச் செய்யத் தவறினால், அதுவே நம்மை நரகத்தில் செலுத்தி, மீண்டும் மீண்டும் வந்து உலகில் பிறக்கச் செய்யும்.

#1464. அத்தனிடம் அன்புறுவர்!

ஒத்தசெங் கோலா ருலப்பிலி மாதவர்
எத்தனை ஆயிரம் வீழ்ந்தனர் எண்ணிலி
சித்தர்கள் தேவர்கள் மூவர் பெருமையாய்
அத்த னிவனென்றே அன்புறு வார்களே.


இந்த உண்மையை அறியாமல் எத்தனையோ செங்கோல் அரசர்களும் , மாதவம் புரிந்த முனிவர்களும் அழிந்து பட்டனர்! இந்த யோகத்தை அறிந்த சித்தரும், தேவரும், மூவரும் தலைவன் சிவன் என்று அறிந்து கொண்டு அவன் மேல் அன்பு செய்வார்கள்.

#1465. அன்பு வைத்தேன்

யோகிக்கு யோகாதி மூன்றுஉள கொண்டு உற்றோர்
ஆகத் தகுகிரியாதி சரியையாம்
தாகத்தை விட்ட சரியை ஒன்றாம், ஒன்றுள்
ஆதித்தன் பத்தியுள் அன்புவைத் தேனே.


யோகம், கிரியை, சரியை என்ற மூன்று நெறிகள் மூலம் யோகியர் மேன்மை அடைவர். கிரியையில் சரியையும், சரியையில் கிரியையும், ஆசைகள் அற்ற சரியையும் உயர்ந்த பயன் தருபவை. உடலில் கதிரவ மண்டலத்தில் உள்ள கதிரவன், சிரசில் ஒளிமண்டலத்தில் சிவசூரியனாக விளங்குவான். அவனிடம் நான் அன்பு கொண்டேன்.

#1466. தீட்சையும் பயனும்

யோகச் சமயமே யோகம் பலவுன்னல்
யோக விசேடமே அட்டாங்க யோகமாம்
யோக நிர்வாணமே உற்ற பரோதயம்
யோக அபிடேகமே ஒண் சித்தி யுற்றலே.

யோக நெறியில் சமய தீட்சை பலவேறு யோக நெறிகளைக் குறித்து சிந்தித்தல் ஆகும்.
யோக நெறியில் சிறந்த தீட்சை அட்டாங்க யோக நெறியில் நிற்பது ஆகும்.
யோக நெறியில் நிர்வாண தீட்சை பராசக்தியின் தரிசனம் பெறுவது ஆகும்.
யோக நெறியில் அபிடேகம் ஒளி மிகுந்த சித்திகளை பெறுவது ஆகும்.

பல வகை யோகங்கள்:
அட யோகம், ராஜ யோகம், இலய யோகம், மந்திர யோகம், குண்டலினி யோகம், சிவ யோகம் முதலியவை.

Viewing all articles
Browse latest Browse all 5709

Trending Articles