ஒரு கோலாகலக் கல்யாணம் - பகுதி 11
ராஜ குமாரி போல, கற்கள் பதித்த பட்டு உடையில்
தேஜஸுடன் மணமகள் பல்லக்கிலே அமர - அந்த
நான்கு பலசாலிகள் தம் வலிய தோள்களில் ஏந்த,
நல்ல அலங்காரத்துடன் கஜராஜி முன்னே செல்ல,
இரு வெண் குதிரைகள் சிங்கார உருவில் தொடர,
இரு கிலோமீட்டர் தூரத்திலுள்ள ஆலயம் செல்லத்
திரண்டனர் அனைவரும், மிகுந்த எதிர்பார்ப்புடன்!
திருவிழா போல அங்கிருந்த சாலை விளங்கியது!
மாப்பிள்ளை உபசரிப்பு ஆலயத்தில் முடிந்த பின்பு,
மாப்பிள்ளையும் மணமகளும் ரதத்தில் அமர்ந்திட,
வண்ண விளக்குகள் ரதத்தில் அழகாக ஒளிர்ந்திட,
வாண வேடிக்கைகள் அமர்க்களமாகத் துவங்கிட,
ஆகாயம் வண்ணத் தீப் பொறிகளாலே நிறைந்திட,
பாவாடை தாவணியிலே குமரிப் பெண்கள் சிலர்
பாரம்பரியக் கோலாட்டம் ஆடி வந்திட, ஆங்கில
பாண்டு வாத்தியங்கள் முழங்கிட, குதிரைகளின்
முன்னங்கால்களில் சலங்கை ஒலித்திட, நாங்கள்
இன்னும் வேண்டும் என்று விரும்புமாறு, பாண்டு
இசையின் தாளத்துக்கேற்ப அவை குதித்து ஆடிட,
இளமையான மணமக்களும் ரதத்திலே வந்தனர்!
தொடரும் ................![]()
ராஜ குமாரி போல, கற்கள் பதித்த பட்டு உடையில்
தேஜஸுடன் மணமகள் பல்லக்கிலே அமர - அந்த
நான்கு பலசாலிகள் தம் வலிய தோள்களில் ஏந்த,
நல்ல அலங்காரத்துடன் கஜராஜி முன்னே செல்ல,
இரு வெண் குதிரைகள் சிங்கார உருவில் தொடர,
இரு கிலோமீட்டர் தூரத்திலுள்ள ஆலயம் செல்லத்
திரண்டனர் அனைவரும், மிகுந்த எதிர்பார்ப்புடன்!
திருவிழா போல அங்கிருந்த சாலை விளங்கியது!
மாப்பிள்ளை உபசரிப்பு ஆலயத்தில் முடிந்த பின்பு,
மாப்பிள்ளையும் மணமகளும் ரதத்தில் அமர்ந்திட,
வண்ண விளக்குகள் ரதத்தில் அழகாக ஒளிர்ந்திட,
வாண வேடிக்கைகள் அமர்க்களமாகத் துவங்கிட,
ஆகாயம் வண்ணத் தீப் பொறிகளாலே நிறைந்திட,
பாவாடை தாவணியிலே குமரிப் பெண்கள் சிலர்
பாரம்பரியக் கோலாட்டம் ஆடி வந்திட, ஆங்கில
பாண்டு வாத்தியங்கள் முழங்கிட, குதிரைகளின்
முன்னங்கால்களில் சலங்கை ஒலித்திட, நாங்கள்
இன்னும் வேண்டும் என்று விரும்புமாறு, பாண்டு
இசையின் தாளத்துக்கேற்ப அவை குதித்து ஆடிட,
இளமையான மணமக்களும் ரதத்திலே வந்தனர்!
தொடரும் ................
