#2973 to #2976
#2973. பிணக்கு அறுத்தானே!
என்நெஞ்சம் ஈசன் இணையடி தாம் சேர்ந்து
முன்னம்செய்து ஏத்த முழுதும் பிறப்பறும்
தன்நெஞ்சம் இல்லாத் தலைவன் தலைவிதி
பின்னம்செய்து என்னைப் பிணக்கறுத் தானே.
என் நெஞ்சம் ஈசனின் இணையடிகளைச் சேர்ந்தது. அந்தத் திருவடிகளைப் போற்றி புகழ்ந்தால் பிறவியும் அதற்கு உரிய காரணங்களும் கெட்டுவிடும். தனக்கு என்று ஓர் உள்ளம் இல்லாதவன் சிவன். நான்முகன் எழுதிய தலை எழுத்தையே மாற்றிக் கெடுப்பவன் சிவன். தத்துவங்களுடன் போராடிய என் நிலையைக் கெடுத்து என் பிணக்கை மாற்றிவிட்டான்.
#2974. முன் வந்த துன்பம் வணக்கலுற்றேன்
பிணக்கறுத் தான்பிணி மூப்பறுத்து எண்ணும்
கணக்கறுத் தாண்டவன் காண்நந்தி என்னைப்
பிணக்கறுத்து என்னுடன் முன்வந்த துன்பம்
வணக்கலுற் றேன்சிவன் வந்தது தானே.
என் உள்ளத்தில் பொருந்தி என் பிணக்கினை அறுத்தவன் சிவன்; நோயற்ற உடல் தந்து நரை, திரை, முதுமை இல்லாமல் காலஎல்லையைக் கடந்து வாழுமாறு செய்து காலக் கணக்கை அறுத்தவன் சிவன். நான் என்னைத் தொடர்ந்து வந்த வினைகளைக் கெடுத்தேன். அப்போது சிவம் மேலும் பிரகாசித்தான்!
#2975. அவன் வந்து என்னுள் அகப்பட்டான்!
சிவன்வந்து தேவர் குழாமுடன் கூடப்
பவம்வந் திடநின்ற பாசம் அறுத்திட்டு
அவன்எந்தை ஆண்டருள் ஆதிப் பெருமான்
அவன்வந்தென் னுள்ளே அகப்பட்ட வாறே
தேவர்கள் குழாத்துடன் வந்து சிவன் என் உள்ளத்தில் நிலை பெற்றான். சீவனின் பிறவிக்கு காரணம் ஆகிய பாசத் தளைகளை சிவன் அறுத்துக் களைந்தான். அறியாமை என்னும் இருளை போக்கி என்னை ஆண்டு அருளினான். சிவன் என் சிந்தையில் வந்து புகுந்து என்னை ஆட்கொண்டவிதம் இதுவே ஆகும்.
#2976. கரும்பு கசந்தது! தேன் புளித்து!
கரும்பும் தேனும் கலந்ததோர் காயத்தில்
அரும்பும் கந்தமும் ஆகிய ஆனந்தம்
விரும்பியே உள்ளம் வெளியுறக் கண்டபின்
கரும்பும் கைத்தது தேனும் புளித்ததே.
சீவனுக்கு கரும்பு போன்றது காமம். தேனைப் போன்றது காமச் சுவை. இவை பொருந்தியுள்ளன சீவனின் உடலில்! அரும்பி மணக்கும் சிவானந்தத்தை நாடிச் சீவன், உடல் இயல்புகளைக் கடந்து தன் உணர்வை மேலே செலுத்திச் சிவானந்தத்தைச் சுவைத்தால், அப்போது சீவனுக்குக் கரும்பு போன்ற காமமும் கசக்கும். தேன் போன்ற காமச் சுவையும் புளிக்கும்!
#2973. பிணக்கு அறுத்தானே!
என்நெஞ்சம் ஈசன் இணையடி தாம் சேர்ந்து
முன்னம்செய்து ஏத்த முழுதும் பிறப்பறும்
தன்நெஞ்சம் இல்லாத் தலைவன் தலைவிதி
பின்னம்செய்து என்னைப் பிணக்கறுத் தானே.
என் நெஞ்சம் ஈசனின் இணையடிகளைச் சேர்ந்தது. அந்தத் திருவடிகளைப் போற்றி புகழ்ந்தால் பிறவியும் அதற்கு உரிய காரணங்களும் கெட்டுவிடும். தனக்கு என்று ஓர் உள்ளம் இல்லாதவன் சிவன். நான்முகன் எழுதிய தலை எழுத்தையே மாற்றிக் கெடுப்பவன் சிவன். தத்துவங்களுடன் போராடிய என் நிலையைக் கெடுத்து என் பிணக்கை மாற்றிவிட்டான்.
#2974. முன் வந்த துன்பம் வணக்கலுற்றேன்
பிணக்கறுத் தான்பிணி மூப்பறுத்து எண்ணும்
கணக்கறுத் தாண்டவன் காண்நந்தி என்னைப்
பிணக்கறுத்து என்னுடன் முன்வந்த துன்பம்
வணக்கலுற் றேன்சிவன் வந்தது தானே.
என் உள்ளத்தில் பொருந்தி என் பிணக்கினை அறுத்தவன் சிவன்; நோயற்ற உடல் தந்து நரை, திரை, முதுமை இல்லாமல் காலஎல்லையைக் கடந்து வாழுமாறு செய்து காலக் கணக்கை அறுத்தவன் சிவன். நான் என்னைத் தொடர்ந்து வந்த வினைகளைக் கெடுத்தேன். அப்போது சிவம் மேலும் பிரகாசித்தான்!
#2975. அவன் வந்து என்னுள் அகப்பட்டான்!
சிவன்வந்து தேவர் குழாமுடன் கூடப்
பவம்வந் திடநின்ற பாசம் அறுத்திட்டு
அவன்எந்தை ஆண்டருள் ஆதிப் பெருமான்
அவன்வந்தென் னுள்ளே அகப்பட்ட வாறே
தேவர்கள் குழாத்துடன் வந்து சிவன் என் உள்ளத்தில் நிலை பெற்றான். சீவனின் பிறவிக்கு காரணம் ஆகிய பாசத் தளைகளை சிவன் அறுத்துக் களைந்தான். அறியாமை என்னும் இருளை போக்கி என்னை ஆண்டு அருளினான். சிவன் என் சிந்தையில் வந்து புகுந்து என்னை ஆட்கொண்டவிதம் இதுவே ஆகும்.
#2976. கரும்பு கசந்தது! தேன் புளித்து!
கரும்பும் தேனும் கலந்ததோர் காயத்தில்
அரும்பும் கந்தமும் ஆகிய ஆனந்தம்
விரும்பியே உள்ளம் வெளியுறக் கண்டபின்
கரும்பும் கைத்தது தேனும் புளித்ததே.
சீவனுக்கு கரும்பு போன்றது காமம். தேனைப் போன்றது காமச் சுவை. இவை பொருந்தியுள்ளன சீவனின் உடலில்! அரும்பி மணக்கும் சிவானந்தத்தை நாடிச் சீவன், உடல் இயல்புகளைக் கடந்து தன் உணர்வை மேலே செலுத்திச் சிவானந்தத்தைச் சுவைத்தால், அப்போது சீவனுக்குக் கரும்பு போன்ற காமமும் கசக்கும். தேன் போன்ற காமச் சுவையும் புளிக்கும்!