Anti-NEET protests by students and youth outfits continue....
நீட் எதிர்ப்பு: தமிழகம் முழுவதும் நாளுக்கு நாள் வலுக்கும் மாணவர் குரல்
![]()
நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கக் கோரியும் மாணவி அனிதாவின் மரணத்துக்கு நீதி விசாரணை வேண்டும் என்பதை வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் மாணவர்களின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.
மருத்துவப் படிப்புக்காக உச்ச நீதிமன்றம் வரை சென்று போராட்டத்தில் ஈடுபட்ட அரியலூர் மாணவி அனிதா கடந்த 1-ம் தேதி தற்கொலை செய்துகொண்டார். அதைத் தொடர்ந்து நீட் தேர்வுக்கு தடை விதிக்க வேண்டும்; மாணவி அனிதாவின் மரணத்துக்கு நியாயம் வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
இன்றும் (புதன்கிழமை) தலைநகர் சென்னை உட்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டம் நடைபெற்று வருகிறது.
சென்னையில்...
சென்னை ராயப்பேட்டையில் உள்ள புதுக்கல்லூரி மாணவர்கள் ஆயிரக்கணக்கானோர் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கையில் பதாகைகளுடன் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று அவர்கள் கோஷமிட்டனர்.
சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் நேற்று (செவ்வாய்க்கிழமை) வகுப்புகளைப் புறக்கணித்து, கல்லூரி வாயிலில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். அதன் நீட்சியாக இன்றும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் அனைவரும் வாயில் கருப்புத் துணியைக் கட்டி அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நுங்கம்பாக்கம் பிரதான சாலையில் போராட்டம் நடைபெறுவதால் அங்கே போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
Read more at: http://tamil.thehindu.com/tamilnadu/article19629048.ece
நீட் எதிர்ப்பு: தமிழகம் முழுவதும் நாளுக்கு நாள் வலுக்கும் மாணவர் குரல்
நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கக் கோரியும் மாணவி அனிதாவின் மரணத்துக்கு நீதி விசாரணை வேண்டும் என்பதை வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் மாணவர்களின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.
மருத்துவப் படிப்புக்காக உச்ச நீதிமன்றம் வரை சென்று போராட்டத்தில் ஈடுபட்ட அரியலூர் மாணவி அனிதா கடந்த 1-ம் தேதி தற்கொலை செய்துகொண்டார். அதைத் தொடர்ந்து நீட் தேர்வுக்கு தடை விதிக்க வேண்டும்; மாணவி அனிதாவின் மரணத்துக்கு நியாயம் வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
இன்றும் (புதன்கிழமை) தலைநகர் சென்னை உட்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டம் நடைபெற்று வருகிறது.
சென்னையில்...
சென்னை ராயப்பேட்டையில் உள்ள புதுக்கல்லூரி மாணவர்கள் ஆயிரக்கணக்கானோர் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கையில் பதாகைகளுடன் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று அவர்கள் கோஷமிட்டனர்.
சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் நேற்று (செவ்வாய்க்கிழமை) வகுப்புகளைப் புறக்கணித்து, கல்லூரி வாயிலில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். அதன் நீட்சியாக இன்றும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் அனைவரும் வாயில் கருப்புத் துணியைக் கட்டி அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நுங்கம்பாக்கம் பிரதான சாலையில் போராட்டம் நடைபெறுவதால் அங்கே போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
Read more at: http://tamil.thehindu.com/tamilnadu/article19629048.ece