Quantcast
Channel: Tamil Brahmins - 1,8,12,13,14,16,18,19,20,21,24,25,26,27,28,29,30,31,32,33,34,35,36,37,38,39,40,41,43,44,49,50,51,52,53,54,55,57,58,59,60,61,62,63,65,68,69,70,73,74,75,76,78,79,80,81,82,83,84,85,86,87,88,89,92,93,94,95,96,97,98,100,101,102
Viewing all articles
Browse latest Browse all 5709

Quotable Quotes Part II

$
0
0
#285 to #289

#285. அன்பினால் காணலாம்

கண்டேன் கழல்தரு கொன்றை யினான்அடி,
கண்டேன் கரிஉரி யான்தன் கழல்இணை
கண்டேன் கமல மலர்உறை வான்அடி
கண்டேன் கழல் அது என் அன்பினுள் யானே.


கண்டேன் தன் திருவடிகளைத் தரும் கொன்றை மலர் சூடியவன் இணையடி!
கண்டேன் கரிய ஆணவ யானையின் தோலை அணிந்து கொண்டவன் கழலடி!
கண்டேன் மூலாதாரத்தில் உள்ள தாமரையில் உறைவும் சிவன் திருவடி!
அவன் கழல்கள் என் அன்பினுள் விளங்குவதை நான் கண்டேன்!

#286. அன்பனை அறிகிலர்!


நம்பனை நானா விதப் பொருள் ஆகும்என்று
உம்பரில் வானவர் ஓதும் தலைவனை
இன்பனை இன்பத்து இடை நின்ற இரதிக்கும்
அன்பனை யாரும் அறியகிலாரே.


நம்புவதற்கு உரியவன் சிவபெருமான். நானாவிதப் பொருட்களாகத் திகழ்பவனும் அவனே. வானுலகத் தேவர்கள் போற்றும் தலைவன் அவனே. இன்பமே வடிவான பெருமான் அவனே. ஜீவர்களின் இன்பத்தில் மகிழும் அன்பனும் அவனே. யாருமே இத்தகைய இறைவனை அறியவில்லை.

#287. யாம் அறிவோம் என்பர்!


முன்பு பிறப்பும் இறப்பும் அறியாதார்
அன்பு இல் இறைவனை யாம் அறிவோம் என்பர்;
இன்பப் பிறப்பும் இறப்பும் இல்லான் நந்தி
அன்பில் அவனை அறியகிலாரே.


இன்பத்தினால் வந்த பிறப்பு இல்லாதவன் ஈசன். இறப்பு என்பதும் இல்லாதவன் நம் ஈசன், பிறப்பும் இறப்பும் இல்லாத ஞானியர் இங்ஙனம் கூறுவர். அன்புடன் வழிபட்டு யாம் இறைவனை அறிந்துள்ளோம் என்பர். அப்படி இருந்த போதிலும் மற்றவர்கள் ஈசனை உணர்ந்து தங்கள் பிறப்பு இறப்பைப் போக்கிக் கொள்ள வில்லையே.

#288. ஈசன் ஈட்டி நின்றானே!


ஈசன் அறியும் இராப் பகலும் தன்னைப்
பாசத்துள் வைத்துப் பரிவு செய்வார்களை
த்
தேசு உற்று இருந்து செயல் அற்று இருந்திடில்
ஈசன் வந்து எம் இடை ஈட்டி நின்றானே.


இரவும் பகலும் தன்னிடம் மிகுந்த அன்பு செய்பவரை நன்றாக அறிவான் நம் சிவபெருமான். அவனுடைய ஒளியைப் பெற்று அந்த ஒளியிலேயே இருந்து கொண்டு தனக்கென்று எந்தச் செயலும் இல்லாது இருந்தோம் என்றால் இறைவன் நம்மிடம் வந்து எழுந்தருள்வான்; எப்போதும் பிரியாமல் நம்முடன் தங்குவான்.

#289. மஞ்சனம்


விட்டுப் பிடிப்பதென் மேதகு சோதியைத்
தொட்டுத் தொடர்வன் தொலையாப் பெருமையை
எட்டும் என் ஆருயிராய் நின்ற ஈசனை
மட்டுக் கலப்பது மஞ்சனம் ஆமே.


மேலான ஒளிவடிவான ஈசனை விட்டு விடுவது ஏன்? மீண்டும் சென்று இறைவனைப் பிடிப்பது ஏன்? நான் அவனை உறுதியாகப் பற்றிக் கொண்டு தொடர்வேன். என்றும் குறையாத பெருமையைப் பெறுவேன். என் உயிரில் கலந்து விளங்குகின்ற ஈசனுடன் நான் இனிதாகக் கலப்பதே மஞ்சனம் என்னும் நீராடல் ஆகும்.

Viewing all articles
Browse latest Browse all 5709

Trending Articles