Quantcast
Channel: Tamil Brahmins - 1,8,12,13,14,16,18,19,20,21,24,25,26,27,28,29,30,31,32,33,34,35,36,37,38,39,40,41,43,44,49,50,51,52,53,54,55,57,58,59,60,61,62,63,65,68,69,70,73,74,75,76,78,79,80,81,82,83,84,85,86,87,88,89,92,93,94,95,96,97,98,100,101,102
Viewing all articles
Browse latest Browse all 5709

Quotable Quotes Part II

$
0
0
#356 to #358

#356. நீக்கம் அற நிறைவான்

அப்பரிசே அயன் மால் முதல் தேவர்கள்
அப்பரிசே அவர் ஆகிய காரணம்
அப்பரிசு அங்கியுல நாளும் உள்ளிட்டு
அப்பரிசு ஆகி அலர்ந்திருந்தானே.

நான்முகனும் திருமாலும் தேவர்களும் அத்தன்மையைப் பெறக் காரணம் ஆவான் சிவபெருமான். அக்கினிக் கலையில் நீக்கம் அற நிறைந்திருக்கும் சிவன் அந்த அக்கினிக் கலையை உள்ளே விளங்கச் செய்வான்.

#357. விரைந்து அருள்வான்


அலர்ந்திருந்தான் என்று அமரர் துதிப்பக்
குலம் தரும் கீழ் அங்கி கோளுற , நோக்கிச்
சிவந்த பரம் இது சென்று கதுவ
உவந்த பெருவழி ஓடி வந்தானே.

சிவபெருமானே எங்கும் நீக்கமற நிறைந்துள்ளவன். இந்த உண்மையை உணர்ந்த வானவர்கள் அவனிடம் வேண்டினர். அப்போது ஆறு ஆதாரங்களில் கீழாக உள்ள மூலாதாரத்தில் உள்ள
அக்கினிக் கலை மேலே எழுந்தது. சுழுமுனை வழியே சஹஸ்ரதளத்தைச் சென்று பற்றியது அச் சிவந்த ஒளி. அப்போது சிறந்த வழிபாடு இதுவே என்று விரைந்து வந்து அருள் செய்தான் சிவபெருமான்.

#358. நல்லவர்கள் ஆயினர்


அரி, பிரமன், தக்கன், அருக்கனுடனே
வருமதி, வாலை ,வன்னி நல் இந்திரன்
சிரம், முகம், நாசி, சிறந்தகை, தோள் தான்
அரன் அருளின்றி அழிந்த நல்லோரே.

திருமால், நான்முகன், தக்கன், சூரியன், சந்திரன், நாமகள், அக்கினி, இந்திரன் என்பவர் தலை, முகம், மூக்கு, கை, தோள் என்பனவற்றைச் சிவன் அருள் பெறாததால் இழந்தனர். பின்னர் சிவன் அருள் பொருந்தியதால் அவர்கள் நல்லவர்கள் ஆயினர்.

Viewing all articles
Browse latest Browse all 5709

Trending Articles