#476 to #478
#476. உயிருக்கு உயிராவர்
வகுத்த பிறவியின் மாது நல்லாளும்
தொகுத் திருள் நீக்கிய சோதியவனும்
பகுத்துணர்வு ஆகிய பல்லுயிர் எல்லாம்
வகுத்து உள்ளும் நின்றதோர் மாண்பது ஆமே.
சீவனின் வினைகளுக்கு ஏற்ப அதன் பிறவி அமைக்கப் படுகின்றது. அந்தப் பிறவியில் சக்தி தேவியும், இருளை நீக்கும் சோதியாகிய சிவனும் அந்த சீவனின் உயிருக்கு உயிராக இருப்பர். மேலும் பலவகை உயிர்களுக்குப் பலவகை உணர்வுகளை வகுத்து வகை செய்வர்.
#477. உயிர் ஒளி மயமானது!
மாண்பது வாக வளர்கின்ற வன்னியைக்
காண்பது ஆண் பெண் அலி எனும் கற்பனை
பூண்பது மாதா பிதா வழி போலவே
ஆம்பதி செய்தான்; அச்சோதிதன் ஆண்மையே.
பெருமையுடன் வளரும் அந்த உயிர் ஆணுமல்ல; பெண்ணுமல்ல; அலியுமல்ல. அப்படி எண்ணுவது வெறும் கற்பனை ஆகும். அது தன் பெற்றோரின் தன்மைகளுடன் விளங்கும். அத்தகைய உயிருக்கு ஏற்றவாறு உடலைப் படைப்பது சிவபெருமானின் ஆற்றல் ஆகும்
#478. ஆண், பெண் உருவாவது
ஆண் மிகில் ஆண் ஆகும் பெண் மிகில் பெண் ஆகும்
பூண் இரண்டு ஒத்துப் பொருந்தில் அலியாகும்
தாண் மிகும் ஆயின் தரணி முழுது ஆளும்
பாணவம் மிக்கிடில் பாய்ந்ததும் இல்லையே.
ஆண் பெண் கூடும் போது ஆண் பண்பு அதிகமாக இருந்தால் அந்த உயிர் ஆணாகும். பெண் தன்மை மிகுந்திருந்தால் அந்த உயிர் பெண் ஆகும். ஆண் பெண் பண்புகள் சரி சமம் ஆனால் அந்த உயிர் அலியாகும். ஆள்வினை மிகுந்து இருந்தால் சிறந்த சிசு பிறக்கும். அது வளர்ந்து உலகை ஆளும். தாழ்வு மனப்பான்மை இருந்தால் சுக்கிலம் பாயாது.
#476. உயிருக்கு உயிராவர்
வகுத்த பிறவியின் மாது நல்லாளும்
தொகுத் திருள் நீக்கிய சோதியவனும்
பகுத்துணர்வு ஆகிய பல்லுயிர் எல்லாம்
வகுத்து உள்ளும் நின்றதோர் மாண்பது ஆமே.
சீவனின் வினைகளுக்கு ஏற்ப அதன் பிறவி அமைக்கப் படுகின்றது. அந்தப் பிறவியில் சக்தி தேவியும், இருளை நீக்கும் சோதியாகிய சிவனும் அந்த சீவனின் உயிருக்கு உயிராக இருப்பர். மேலும் பலவகை உயிர்களுக்குப் பலவகை உணர்வுகளை வகுத்து வகை செய்வர்.
#477. உயிர் ஒளி மயமானது!
மாண்பது வாக வளர்கின்ற வன்னியைக்
காண்பது ஆண் பெண் அலி எனும் கற்பனை
பூண்பது மாதா பிதா வழி போலவே
ஆம்பதி செய்தான்; அச்சோதிதன் ஆண்மையே.
பெருமையுடன் வளரும் அந்த உயிர் ஆணுமல்ல; பெண்ணுமல்ல; அலியுமல்ல. அப்படி எண்ணுவது வெறும் கற்பனை ஆகும். அது தன் பெற்றோரின் தன்மைகளுடன் விளங்கும். அத்தகைய உயிருக்கு ஏற்றவாறு உடலைப் படைப்பது சிவபெருமானின் ஆற்றல் ஆகும்
#478. ஆண், பெண் உருவாவது
ஆண் மிகில் ஆண் ஆகும் பெண் மிகில் பெண் ஆகும்
பூண் இரண்டு ஒத்துப் பொருந்தில் அலியாகும்
தாண் மிகும் ஆயின் தரணி முழுது ஆளும்
பாணவம் மிக்கிடில் பாய்ந்ததும் இல்லையே.
ஆண் பெண் கூடும் போது ஆண் பண்பு அதிகமாக இருந்தால் அந்த உயிர் ஆணாகும். பெண் தன்மை மிகுந்திருந்தால் அந்த உயிர் பெண் ஆகும். ஆண் பெண் பண்புகள் சரி சமம் ஆனால் அந்த உயிர் அலியாகும். ஆள்வினை மிகுந்து இருந்தால் சிறந்த சிசு பிறக்கும். அது வளர்ந்து உலகை ஆளும். தாழ்வு மனப்பான்மை இருந்தால் சுக்கிலம் பாயாது.