மார்கழி வழிபாடு : திருப்பாவை – திருவெம்பாவை -16
![]()
மார்கழி மாதத்தில் ஆண்டாள் பாடிய திருப்பாவையையும், மாணிக்கவாசகர் பாடிய திருவெம்பாவையையும் உங்கள் இனிய குரலில் பாடி மகிழுங்கள்
திருப்பாவை
பாடல் 16
நாயகனாய் நின்ற நந்தகோபனுடையகோயில் காப்பானே! கொடித்தோன்றும் தோரணவாயில் காப்பானே! மணிக்கதவம் தாள்திறவாய்ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறைமாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்துாயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்வாயால் முன்னமுன்னம் மாற்றாதே யம்மா! நீநேய நிலைக்கதவம் நீக்கேலோரெம்பாவாய்.
பொருள்: எங்களுடைய தலைவனாய் இருக்கிற நந்தகோபனின் திருமாளிகையை பாதுகாக்கும் காவலனே! கொடிகள் கட்டிய வாசல் காவலனே! ஆயர்குல கன்னியரான எங்களுக்காக இந்த மாளிகைக் கதவைத் திற. மாயச்செயல்கள் செய்பவனும், கரிய நிறத்தவனுமான கண்ணன் எங்களுக்கு ஒலி எழுப்பும் பறை (சிறுமுரசு) தருவதாக நேற்றே சொல்லியிருக்கிறான். அதைப் பெற்றுச்செல்ல நாங்கள் நீராடி வந்திருக்கிறோம். அவனைத் துயிலெழுப்பும் பாடல்களையும் பாட உள்ளோம். 'அதெல்லாம் முடியாது' என உன் வாயால் முதலிலேயே சொல்லி விடாதே. மூடியுள்ள இந்த நிலைக்கதவை எங்களுக்கு திறந்து விடு.
திருவெம்பாவை
பாடல் 16
முன்னிக்கடலை சுருக்கி எழுந்துடையாள்என்னத் திகழ்ந்து எம்மை ஆளுடையாள்மின்னிப் பொலிந்து எம்பிராட்டி திருவடிமேல்பொன்னம் சிலம்பின் சிலம்பித் திருப்புருவம்என்னச் சிலை குலவி நந்தம்மை ஆளுடையாள்தன்னில் பிரிவிலா எம்கோமான் அன்பர்க்குமுன்னியவள் நமக்கு முன்சுரக்கும் இன்னருளேஎன்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய்
பொருள்: மேகமே ! இந்தக் கடலிலுள்ள நீர் முழுவதையும் குடித்து, ஆவியாக்கி வாவனம் நோக்கிச் சென்று அங்கே தங்கியிருக்கிறாய். உன் தோற்றம் எங்கள் சிவனின் துணைவியான உமாதேவியாரின் கரிய நிறத்தை ஒத்திருக்கிறது. உன்னில் இருந்து கிளம்பிய மின்னல் ஒளி அம்பிகையின் சிறிய இடையை ஒத்துள்ளது. நீ இடியாக இடித்தது தேவியின் திருவடியில் உள்ள பொன் சிலம்பு ஒலித்தது போல் உள்ளது. நீ வீசும் வானவில் அம்பிகையின் எழில்மிகு புருவத்தை ஒத்துள்ளது. எங்களை ஆட்கொண்ட அம்பிகை பாகனான சிவபெருமானுடைய பக்தர்களுக்காக முதலில் நீ மழையைப் பொழிய வேண்டும். அதன் பிறகு எங்களுக்காகவும் பொழிவாயாக.
நன்றி: தினமலர் /http://www.dinamalar.com/news_detail.asp?id=1680330

மார்கழி மாதத்தில் ஆண்டாள் பாடிய திருப்பாவையையும், மாணிக்கவாசகர் பாடிய திருவெம்பாவையையும் உங்கள் இனிய குரலில் பாடி மகிழுங்கள்
திருப்பாவை
பாடல் 16
நாயகனாய் நின்ற நந்தகோபனுடையகோயில் காப்பானே! கொடித்தோன்றும் தோரணவாயில் காப்பானே! மணிக்கதவம் தாள்திறவாய்ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறைமாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்துாயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்வாயால் முன்னமுன்னம் மாற்றாதே யம்மா! நீநேய நிலைக்கதவம் நீக்கேலோரெம்பாவாய்.
பொருள்: எங்களுடைய தலைவனாய் இருக்கிற நந்தகோபனின் திருமாளிகையை பாதுகாக்கும் காவலனே! கொடிகள் கட்டிய வாசல் காவலனே! ஆயர்குல கன்னியரான எங்களுக்காக இந்த மாளிகைக் கதவைத் திற. மாயச்செயல்கள் செய்பவனும், கரிய நிறத்தவனுமான கண்ணன் எங்களுக்கு ஒலி எழுப்பும் பறை (சிறுமுரசு) தருவதாக நேற்றே சொல்லியிருக்கிறான். அதைப் பெற்றுச்செல்ல நாங்கள் நீராடி வந்திருக்கிறோம். அவனைத் துயிலெழுப்பும் பாடல்களையும் பாட உள்ளோம். 'அதெல்லாம் முடியாது' என உன் வாயால் முதலிலேயே சொல்லி விடாதே. மூடியுள்ள இந்த நிலைக்கதவை எங்களுக்கு திறந்து விடு.
திருவெம்பாவை
பாடல் 16
முன்னிக்கடலை சுருக்கி எழுந்துடையாள்என்னத் திகழ்ந்து எம்மை ஆளுடையாள்மின்னிப் பொலிந்து எம்பிராட்டி திருவடிமேல்பொன்னம் சிலம்பின் சிலம்பித் திருப்புருவம்என்னச் சிலை குலவி நந்தம்மை ஆளுடையாள்தன்னில் பிரிவிலா எம்கோமான் அன்பர்க்குமுன்னியவள் நமக்கு முன்சுரக்கும் இன்னருளேஎன்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய்
பொருள்: மேகமே ! இந்தக் கடலிலுள்ள நீர் முழுவதையும் குடித்து, ஆவியாக்கி வாவனம் நோக்கிச் சென்று அங்கே தங்கியிருக்கிறாய். உன் தோற்றம் எங்கள் சிவனின் துணைவியான உமாதேவியாரின் கரிய நிறத்தை ஒத்திருக்கிறது. உன்னில் இருந்து கிளம்பிய மின்னல் ஒளி அம்பிகையின் சிறிய இடையை ஒத்துள்ளது. நீ இடியாக இடித்தது தேவியின் திருவடியில் உள்ள பொன் சிலம்பு ஒலித்தது போல் உள்ளது. நீ வீசும் வானவில் அம்பிகையின் எழில்மிகு புருவத்தை ஒத்துள்ளது. எங்களை ஆட்கொண்ட அம்பிகை பாகனான சிவபெருமானுடைய பக்தர்களுக்காக முதலில் நீ மழையைப் பொழிய வேண்டும். அதன் பிறகு எங்களுக்காகவும் பொழிவாயாக.
நன்றி: தினமலர் /http://www.dinamalar.com/news_detail.asp?id=1680330