19. திருக்கோவில் இழிவு
19. திருக் கோவில் இழிவு
கோவிலுக்குச் செய்யும் இழிவுகளால் விளையும் கேடு!
#515 to #517
#515. தாவர லிங்கம்
தாவர லிங்கம் பறித்தொன்றில் தாபித்தால்
ஆவதன் முன்னே யரசு நிலை கெடுஞ்
சாவதன் முன்னே பெருநோய் அடுத்திடுங்
காவலன் பேர் நந்தி கட்டுரைத் தானே.
சிவலிங்கம் சிவபெருமானுடைய அருவுருவத் திருமேனி ஆகும். ஓரிடத்தில் அமைக்கப் பட்டுள்ள ஒரு லிங்கத்தைப் பெயர்த்து வேறு இடத்தில் வைத்தால் ஆகாது. அவ்வாறு செய்ய எண்ணினால் அது நிகழும் முன்பே அந்த நாட்டின் ஆட்சி அழிந்து போகும். லிங்கத்தைப் பெயர்த்தவனை அவன் இறக்கும் முன்பே தொழுநோய் வந்து பற்றும். இதை உலகுக்கு உரைத்தவன் உலகின் காவலனான சிவபெருமான்.
#516. கோவில் மதில்
கட்டுவித் தார்மதில் கல்லொன்று வாங்கிடில்
வெட்டுவிக் கும் அபிடேகத் தரசரை
முட்டுவிக் கும்முனி வேதியராயினும்
வெட்டுவித் தேவிடும் விண்ணவ னாணையே.
கோவில் மதிலின் ஒரு கல்லைப் பெயர்த்து எடுத்தால் அதன் தீமைப்பயன் முடி சூடிய மன்னனையே வெட்டி வீழ்த்தி விடும். முனிவர்களின் செய்கின்ற தவம் பயன் தராமல் தடுக்கும். அவ்வாறு கல்லைப் பெயர்த்துப் பறித்தவன் அந்தணன் ஆயினும் அவனையும் வெட்டி வீழும்படிச் செய்யும். இது சிவ பெருமானின் ஆணை ஆகும்.
#517. பூசைகள் தவறக் கூடாது
ஆற்றரு நோய்மிக் கவனி மழையின்றிப்
போற்றரு மன்னரும் போர்வலி குன்றுவர்
கூற்றுதைத் தான்றிருக் கோவில்க ளெல்லாஞ்
சாற்றிய பூசைகள் தப்பிடிற் றானே.
காலனைக் காலால் உதைத்தவன் சிவபெருமான். அவன் திருக் கோவில்களில் மறைகள் விதித்தபடி பூசைகள் நடைபெற வேண்டும். அங்ஙனம் பூசைகள் நிகழவில்லை என்றால் குணப்படுத்த முடியாத பல வியாதிகள் தோன்றும். பருவத்தே மழை பொழியாது பொய்க்கும். மன்னனின் போர் ஆற்றல் குறைந்து விடும்.
19. திருக் கோவில் இழிவு
கோவிலுக்குச் செய்யும் இழிவுகளால் விளையும் கேடு!
#515 to #517
#515. தாவர லிங்கம்
தாவர லிங்கம் பறித்தொன்றில் தாபித்தால்
ஆவதன் முன்னே யரசு நிலை கெடுஞ்
சாவதன் முன்னே பெருநோய் அடுத்திடுங்
காவலன் பேர் நந்தி கட்டுரைத் தானே.
சிவலிங்கம் சிவபெருமானுடைய அருவுருவத் திருமேனி ஆகும். ஓரிடத்தில் அமைக்கப் பட்டுள்ள ஒரு லிங்கத்தைப் பெயர்த்து வேறு இடத்தில் வைத்தால் ஆகாது. அவ்வாறு செய்ய எண்ணினால் அது நிகழும் முன்பே அந்த நாட்டின் ஆட்சி அழிந்து போகும். லிங்கத்தைப் பெயர்த்தவனை அவன் இறக்கும் முன்பே தொழுநோய் வந்து பற்றும். இதை உலகுக்கு உரைத்தவன் உலகின் காவலனான சிவபெருமான்.
#516. கோவில் மதில்
கட்டுவித் தார்மதில் கல்லொன்று வாங்கிடில்
வெட்டுவிக் கும் அபிடேகத் தரசரை
முட்டுவிக் கும்முனி வேதியராயினும்
வெட்டுவித் தேவிடும் விண்ணவ னாணையே.
கோவில் மதிலின் ஒரு கல்லைப் பெயர்த்து எடுத்தால் அதன் தீமைப்பயன் முடி சூடிய மன்னனையே வெட்டி வீழ்த்தி விடும். முனிவர்களின் செய்கின்ற தவம் பயன் தராமல் தடுக்கும். அவ்வாறு கல்லைப் பெயர்த்துப் பறித்தவன் அந்தணன் ஆயினும் அவனையும் வெட்டி வீழும்படிச் செய்யும். இது சிவ பெருமானின் ஆணை ஆகும்.
#517. பூசைகள் தவறக் கூடாது
ஆற்றரு நோய்மிக் கவனி மழையின்றிப்
போற்றரு மன்னரும் போர்வலி குன்றுவர்
கூற்றுதைத் தான்றிருக் கோவில்க ளெல்லாஞ்
சாற்றிய பூசைகள் தப்பிடிற் றானே.
காலனைக் காலால் உதைத்தவன் சிவபெருமான். அவன் திருக் கோவில்களில் மறைகள் விதித்தபடி பூசைகள் நடைபெற வேண்டும். அங்ஙனம் பூசைகள் நிகழவில்லை என்றால் குணப்படுத்த முடியாத பல வியாதிகள் தோன்றும். பருவத்தே மழை பொழியாது பொய்க்கும். மன்னனின் போர் ஆற்றல் குறைந்து விடும்.