அதிமுகவில் இருந்து முன்னாள் டிஜிபி நடராஜ் நீக்கத்துக்கு இதுதான் காரணமா?
சென்னையில் வெள்ள பாதிப்பு குறித்த விவாதங்கள் சில நாட்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சி ஒன்று நடத்திய. இதில் அதிமுக சார்பில் முன்னாள் சென்னை மாநகர கமிஷனர் ஆ.நடராஜ் பங்கேற்றார். அப்போது நடராஜ் பேசியது இதோ...
இங்கே அதிகாரம் பரவலாக்கபடவில்லை. எல்லா அதிகாரமும் முதல்வர் கையில் உள்ளது. அவர் கண்ணசைவுக்கு அதிகாரிகள் காத்திருந்ததே இந்த பெரும் சேதத்துக்கு காரணமாக அமைந்து விட்டது.
கீழ்மட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடத்தான் தலைமை செயலர் இருக்கிறார். ஆனால் புதிதாக அவருக்கு ஆலோசனை வழங்க ஒருவர் வந்து, அவர் எல்லா தேவைக்கும் முதல்வர் உத்தரவிற்கு காத்திருந்தது இந்த பெரும் சேதத்துக்கு காரணம்.
முன்பெல்லாம் அணையை பொதுப் பணித்துறை அதிகாரிகள் திறந்து விடுவார்கள். இப்பொழுது "மாண்புமிகு தமிழக முதல்வர் புரட்சித் தலைவி அம்மாவின் ஆணைக்கினங்க"ன்னு யார் யாரோ திறங்குறாங்க. அவர்களுக்காக காத்திருந்ததும் இந்த பெரும் சேதத்துக்கு காரணம்.
மொத்தத்தில் அரசு நிர்வாகம் சரியாக செயல்படாததே இந்த பெரும் சேதத்துக்கு காரணம். இவைதான் அவர் அடுக்கிய குற்றச்சாட்டுகள்.
Read more at:
http://www.vikatan.com/news/tamilnad...yalalithaa.art