Quantcast
Channel: Tamil Brahmins - 1,8,12,13,14,16,18,19,20,21,24,25,26,27,28,29,30,31,32,33,34,35,36,37,38,39,40,41,43,44,49,50,51,52,53,54,55,57,58,59,60,61,62,63,65,68,69,70,73,74,75,76,78,79,80,81,82,83,84,85,86,87,88,89,92,93,94,95,96,97,98,100,101,102
Viewing all articles
Browse latest Browse all 5709

Sreeman NArAyaNeeyam

$
0
0
த3ச’கம் 75 ( 6 to 10)

கம்ஸ வத4ம்

சாணுரோ மல்லவீரஸ் தத3னு
ந்ருப கி3ரா முஷ்டிகோ முஷ்டிசா’லி
த்வாம் ராமனஞ்சாபி4 பேதே3 ஜட ஜடிதி
மிதோ2 முஷ்டிபாதாதி ரூக்ஷம் |
உத்பாதா பாதனாகர்ஷண விவித4
ரணான்யாஸதாம் தத்ர சித்ரம்
ம்ருத்யோ: ப்ராகே3வ மல்ல ப்ரபு4
ரகமத3யம் பூ4ரிசோ’ ப3ந்த3 மோக்ஷான் || (75 – 6 )


அதன் பின்னர் கம்சனின் கட்டளைப்படி மல்ல வீரனான சாணூரன் , முஷ்டி யுத்தத்தில் திறமை வாய்ந்த முஷ்டிகன் பலராமனையும், சட சட என்ற சத்தத்துடன், முஷ்டியைக் கொண்டு இடித்து பயங்கரமாக எதிர்த்தனர் அல்லவா? உந்தி எறிவது, கீழே தள்ளுவது, பிடித்து எழுப்புவது போன்ற பலவித போர்களிளும் சரியே மல்லர்களின் அரசனான சாணூரன் அவன் மரணத்திற்கு முன்பே பலமுறை பந்தங்களையும் மோக்ஷங்களையும் (கட்டுதலையும் , விடுதலையையும் ) அடைந்தான் அல்லவா?( 75 – 6)

ஹா தி4க் கஷ்டம் குமாரௌ ஸுலலித
வபுஷௌ மல்ல வீரௌ கடோ2ரௌ
ந த்3ரக்ஷ்யாமோ வ்ரஜாமஸ்த்வரிதமிதி
ஜனே பா4ஷமாணே ததா3னீம் |
சாணூரம் தம் கரோத்3ப்4ராமண
விக3லத3ஸும் போத2யாமாஸி தோர்வ்யாம்
பிஷ்டோSபூ4ன் முஷ்டிகோSபி
த்3ருதமத2 ஹலினா நஷ்டசி’ஷ்டைர் த3தா4வே || ( 75 – 7)


“கஷ்டம்! கஷ்டம்! குழந்தைகள் ஆகிய ராம, கிருஷ்ணர்கள் கோமள சரீரம் உடையவர்கள்! மல்ல வீரர்கள் இருவரும் மிகவும் முரடர்கள்! சமம் இல்லாதவர்களின் போரை நாம் காண வேண்டாம்! விரைவாக நாம் வெளியேறிவிடுவோம்!” என்று என்று ஜனங்கள் பேசிக் கொண்டிருந்தனர். அந்தத் தருணத்தில் கையில் பிடித்துச் சுழற்றியதால் முற்றிலுமாக உயிர் இழந்துவிட்ட சாணூரனைத் தரையில் ஓங்கி அடித்தீர்கள் அல்லவா? அதன் பின்னர் முஷ்டிகனும் பலராமனால் நசுக்கபட்டான். இறந்தவர்களைத் தவிர மற்ற அனைவரும் விரைந்து ஓடினார்கள் அல்லவா? ( 75 – 7 )

கம்ஸஸ்ஸம்வார்ய தூர்யம் க2லமதி
ரவித3ன் காத்ய மார்யான் பித்ரூம்ஸ்தான்
ஆஹந்தும் வ்யாப்த மூர்தேஸ் தவ ச
ஸமசி’ஷத்3தூ3ரமுத் ஸாரணாய|
ருஷ்டோ து3ஷ்டோக்தி பி4ஸ்த்வம்
க3ருட3 இவ கி3ரிம் மஞ்ச மஞ்சன்னுத3ஞ்சத்
க2ட்க3 வ்யாவல்க3 து3ஸ்ஸங்க்3ரஹமபி ச
ஹ்டாத் ப்ராக்3ரஹீ ரௌக்3ராஸேனிம் || ( 75 – 8 )


துர்புத்தியுடைய அந்தக் கம்சன் பேரிகையை நிறுத்தச் செய்தான். என்ன செய்வது என்று அறியாமல் சாதுக்களாகிய நந்தன், வாசுதேவன், உக்ர சேனன் முதலியவர்களைக் கொல்லவும், எங்கும் நிறைந்துள்ள தங்களை வெகு தூரத்துக்கு விரட்டவும் கட்டளையிட்டான். தீய சொற்களால் கோபமடைந்த தாங்கள், கருடன் மலைமீது பாய்வதுபோல சிம்மாசனத்தின் மீது பாய்ந்தீர்கள். வாளை உயர எடுத்து வீசுவதால் பிடிக்க முடியாதவனாக இருந்தும் கூட அந்தக் கம்சனை பலாத்காரமாகப் பிடித்தீர்கள் அல்லவா?
( 75 – 8)

ஸத்3யோ நிஷ்பிஷ்ட ஸந்தி4ம் பு4வி
நரபதி மபாத்ய தஸ்யோபரிஷ்டாத்
த்வய்யா பாத்யே ததை3வ த்வதுபரி
பதிதா நாகினாம் புஷ்ப வ்ருஷ்டி:|
கிம் கிம் ப்3ரூமஸ் ததா3னீம் ஸததமபி
பி4யா த்வத்3 க3தாத்மா ஸ பே4ஜே
ஸாயுஜ்யம் த்வ்த்3வதோ4த்தா2 பரம பரமியம்
வாஸனா காலநேமே: || ( 75 – 9)

அப்போதே சந்திபந்திகள் நொறுங்கின. கம்சனைத் தரையில் தள்ளித் தாங்களும் அவன் மேல் விழ, தேவர்கள் பூமாரி பெய்தனர். பரமாத்மனே என்னவென்று கூறுவேன்? இடைவிடாத பயத்தினால் தங்கள் மீது இடைவிடாது மனத்தைச் செலுத்திய அந்தக் கம்சனும் அப்போதே சாயுஜ்யத்தை அடைந்துவிட்டான். இவ்விதம் சாயுஜ்யத்தை அடையக் காரணம் காலநேமியை தங்கள் கொன்றதால் உண்டான முன் ஜன்ம வாசனைதான். ( 75 – 9)

தத்3 ப்3ராத்ரூ நஷ்ட பிஷ்ட்வா த்3ருதமத2
பிதரௌ ஸன்னமன்னுக்3ரஸேனம்
க்ருத்வா ராஜான் முச்சைர் யது3குலம்
அகி2லம் மோத3யன் காமதா3னை:|
ப4க்தானா முத்தமஞ்சோத்3த4வம்
அமர கு3ரோ ராப்த நீதிம் ஸகா2யம்
லப்3த்4வா துஷ்டோ நக3ர்யாம்
பவன புரபதே ருந்தி4 மே ஸர்வ ரோக3ன் || ( 75 – 10
)

குருவாயூரப்பா! அதன் பிறகு விரைவாக கம்சனின் தம்பிகளான எட்டுப் பேர்களையும் கொன்று, தாய் தந்தையாராகிய தேவகி வசுதேவரை வணங்கி, உக்ரசேனரை அரசராக்கி, யதுகுலத்தவர் எல்லோருக்கும் அவர்கள் விரும்பியவற்றைக் கொடுத்து, மனங்களை மகிழ்வித்து, பக்தர்களில் சிறந்தவரும் தேவகுருவும் ஆகிய பிருஹச்பதியிடம் இருந்து நீதி சாஸ்த்திரம் கற்றவரான உத்தவரையும் தோழராக அடைந்து, மிகவும் சந்தோஷம் அடைந்தவராக, மதுராபுரியில் வசித்து வந்த தாங்கள் எனது வியாதிகளை எல்லாம் அகற்ற வேண்டும். ( 75 – 10)

Viewing all articles
Browse latest Browse all 5709

Trending Articles