The following is a FB post from a noted Tamil Scholar Arumugam Kr on this subject and I producing it as it is .
ஆகமங்கள் சைவ ஆகமங்கள், வைணவ ஆகமங்கள், சாக்த ஆகமங்கள் என்று பிரியும்.
இவற்றில் வைணவ ஆகமங்கள் வைகானச ஆகமங்கள், பாஞ்சராத்திர ஆகமங்கள் என்று பிரியும்.
வைகானசம் வைதிக மரபுக்கு வால் பிடிப்பது. வைகானசந்தான் வழிவழி மரபினர் மட்டுமே பூசாரிகளாக இருக்கவேண்டும் என்று சொன்னது. வைணவன் என்பவன் கருவிலேயே உருவாகிறவன் என்றது. garbha vaishnava janmaanaam. உறுப்பினர் அட்டை வாங்கிப் புதிதாக யாரும் வைணவராகிவிட முடியாது; வைணவன் ஆவதென்பது பிறப்பிலேயே வாய்த்திருக்க வேண்டும் என்பது வைகானசம். அருச்சனைப் பொழுதுகளில் அது பச்சைப் பசுங்கொண்டலே பின்செல்லத் துணிந்த பிரபந்தப் பைந்தமிழ் பாடாது. மாறாக இருக்கு வேதமும் கறுத்த யசுர் வேதமும் பாடும். யாகஞ் செய்யும்.
இராமாநுசர் வந்தார். யாராகப் பிறந்தாலும், ‘அடியரில் குடிமை இல்லா அயல் சதுப்பேதிமாரில், குடிமையில் கடைமைப்பட்ட குக்கரிற் பிறப்பரேலும், முடியினில் துளபம் வைத்த’ பெருமாளின் அடிசூடி, வைணவப் பதம் பெறலாம் என்று வகை செய்தார். ‘புது வைணவன் பட்டை பட்டையா நாமம் போடுறான் பாரு’ என்ற சொல் வழக்கிற்கும் வகை செய்தார்.
புது வைணவர்களின் கோவில் நுழைவிற்கு இடைஞ்சலாக இல்லாத வகையில் வைகானச ஆகம வழிபாட்டு முறையைச் ‘சற்றே விலகியிரும் பிள்ளாய்’ என்று தள்ளிவைத்தார். அதற்குப் பதிலாக, புதியவர்களுக்கும் இடம் தருகிற பாஞ்சராத்திர ஆகம வழிபாட்டு முறையைக் கோவில்களுக்குள் புகுத்தினார்.
‘திராவிட சம்பிரதாயம்’ எனப்படும் பாஞ்சராத்திர ஆகம வழிபாட்டு முறை தமிழையும் பிறரையும் உடன் அழைத்துக்கொண்டு ஆலயப் பிரவேசம் செய்தது.
எனவே ஆகம விதி முறைகளை மாற்ற முடியாது என்பதில்லை. இராமாநுசர் மாற்றியிருக்கிறார். தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையும் நோக்காது மக்களை மட்டுமே நோக்கித் திண்மையாகச் செயல்படுவது என்று ஒரு தலைமை தீர்மானித்துவிட்டால் எதையும் மாற்றலாம் என்பதற்கு இராமாநுசர் காட்டு.
நல்லவேளை! இராமாநுசர் காலத்தில் வைணவப் பட்டர்கள் வழக்குத் தொடுக்கவும் இல்லை. திக்கற்றுத் தீர்ப்புகள் வழங்க அப்போது நீதிமன்றங்களும் இல்லை.
ஆகமங்கள் சைவ ஆகமங்கள், வைணவ ஆகமங்கள், சாக்த ஆகமங்கள் என்று பிரியும்.
இவற்றில் வைணவ ஆகமங்கள் வைகானச ஆகமங்கள், பாஞ்சராத்திர ஆகமங்கள் என்று பிரியும்.
வைகானசம் வைதிக மரபுக்கு வால் பிடிப்பது. வைகானசந்தான் வழிவழி மரபினர் மட்டுமே பூசாரிகளாக இருக்கவேண்டும் என்று சொன்னது. வைணவன் என்பவன் கருவிலேயே உருவாகிறவன் என்றது. garbha vaishnava janmaanaam. உறுப்பினர் அட்டை வாங்கிப் புதிதாக யாரும் வைணவராகிவிட முடியாது; வைணவன் ஆவதென்பது பிறப்பிலேயே வாய்த்திருக்க வேண்டும் என்பது வைகானசம். அருச்சனைப் பொழுதுகளில் அது பச்சைப் பசுங்கொண்டலே பின்செல்லத் துணிந்த பிரபந்தப் பைந்தமிழ் பாடாது. மாறாக இருக்கு வேதமும் கறுத்த யசுர் வேதமும் பாடும். யாகஞ் செய்யும்.
இராமாநுசர் வந்தார். யாராகப் பிறந்தாலும், ‘அடியரில் குடிமை இல்லா அயல் சதுப்பேதிமாரில், குடிமையில் கடைமைப்பட்ட குக்கரிற் பிறப்பரேலும், முடியினில் துளபம் வைத்த’ பெருமாளின் அடிசூடி, வைணவப் பதம் பெறலாம் என்று வகை செய்தார். ‘புது வைணவன் பட்டை பட்டையா நாமம் போடுறான் பாரு’ என்ற சொல் வழக்கிற்கும் வகை செய்தார்.
புது வைணவர்களின் கோவில் நுழைவிற்கு இடைஞ்சலாக இல்லாத வகையில் வைகானச ஆகம வழிபாட்டு முறையைச் ‘சற்றே விலகியிரும் பிள்ளாய்’ என்று தள்ளிவைத்தார். அதற்குப் பதிலாக, புதியவர்களுக்கும் இடம் தருகிற பாஞ்சராத்திர ஆகம வழிபாட்டு முறையைக் கோவில்களுக்குள் புகுத்தினார்.
‘திராவிட சம்பிரதாயம்’ எனப்படும் பாஞ்சராத்திர ஆகம வழிபாட்டு முறை தமிழையும் பிறரையும் உடன் அழைத்துக்கொண்டு ஆலயப் பிரவேசம் செய்தது.
எனவே ஆகம விதி முறைகளை மாற்ற முடியாது என்பதில்லை. இராமாநுசர் மாற்றியிருக்கிறார். தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையும் நோக்காது மக்களை மட்டுமே நோக்கித் திண்மையாகச் செயல்படுவது என்று ஒரு தலைமை தீர்மானித்துவிட்டால் எதையும் மாற்றலாம் என்பதற்கு இராமாநுசர் காட்டு.
நல்லவேளை! இராமாநுசர் காலத்தில் வைணவப் பட்டர்கள் வழக்குத் தொடுக்கவும் இல்லை. திக்கற்றுத் தீர்ப்புகள் வழங்க அப்போது நீதிமன்றங்களும் இல்லை.