Quantcast
Channel: Tamil Brahmins - 1,8,12,13,14,16,18,19,20,21,24,25,26,27,28,29,30,31,32,33,34,35,36,37,38,39,40,41,43,44,49,50,51,52,53,54,55,57,58,59,60,61,62,63,65,68,69,70,73,74,75,76,78,79,80,81,82,83,84,85,86,87,88,89,92,93,94,95,96,97,98,100,101,102
Viewing all articles
Browse latest Browse all 5709

Think or sink!

$
0
0
வள்ளுவர் வழி வாழும் பெண் இவள்! :hail:
(ஒரு மர்மயோகி கர்மயோகியாகிய கதை இது) :rolleyes:

பெற்ற தாயைப் பேணிக் காக்கவில்லை - ஆனால்
மற்றவள் தாயைத் தன் தலை மேல் தங்குகிறான்.

உற்றம் சுற்றத்தினருக்கு இடம் இல்லை - அவன்
உள்ளத்திலும் அல்லது வாழுகின்ற இல்லத்திலும்!

ஒரு நாள் கூட விருந்தினராக இருக்க விடாதவன்
ஆறு நாட்கள் மற்றவர் வீட்டில் இருப்பது எப்படி?

கூடப் பிறந்தவர்கள் குப்பைக் கூடையில் - ஆனால்
மோடிக்கு மயங்கும் நாகம் மச்சான் மச்சினிகளுக்கு!

ரத்தம் நீரை விட அடர்த்தியோ இல்லையோ - அவன்
மொத்தமாக விலைபோய் வெகு நாட்களாகி விட்டன.

"நக்குண்டார் நாவெழார்!" என்பது ஒரு பழமொழி.
"சிக்குண்டார் சீரழிவார்!" இது அங்கை நெல்லிக்கனி.

கொட்டிக் கொட்டிப் புழுவைக் குளவியாக்குமாம் குளவி!
கொட்டிக் கொட்டிப் புலியை எலியாக்கி விட்டாள் மனைவி.

வெளியே புலி! வீட்டில் எலி!! வெளியே தெரிந்தால் கிலி!!!
வெளியே தெரியாமல் இருப்பதற்காகப் பகீரதப் பிரயத்தனம்!!!

ஒரு பானை சோறுக்கு ஒரு சோறு பதம் அல்லவா - அவளின்
ஒரு நாள் நடவடிக்கை உண்மையை உணர்த்தும் உலகுக்கு!

வந்த இடத்தில் பத்து மணி வரை நாணமின்றி உறங்குபவள்
சொந்த இடத்தில் எத்தனை மணிக்கு எழுவாள் தெரியாதா??

விக்கிரமாதித்தன் வேதாளம் கதை ஒன்றில் வரும்
சிக்கலற்ற சொகுசான வாழ்க்கை என்ன என்பது!

"மனம் போல உண்டுவிட்டு படுக்கையில் மறிந்து
தினம் போல உறங்கிக் கழிப்பது!" என்ற தத்துவம்.

பூத உடல் பூதகியாகி விட்டால்
ன்னும் வசதி!
பூச்சாண்டி காட்டியே வாழ்வைக் கழித்து விடலாம்!

தற்காத்துத் தற்கொண்டார் பேணி தகை சான்ற
சொற்காத்து சோர்விலாள் பெண் என்னும் குரள்.

தற்காத்துக் கொள்ளல் = மேனி வாடாமல் பார்த்துக் கொள்வது :couch2:
தற்கொண்டார் பேணி = தன் பிறந்த வீட்டை முன்னிலைப் படுத்துவது :croc:

தகை சான்ற சொல் = தன் தாய் அன்றாடம் இடும் ஆணைகள் :blah:
சோர்விலாள் = வேலை செய்பவளுக்குத் தானே சோர்வு வரும்! :rolleyes:

குரள் வழி நடக்குக் இந்தப் பெண்களிடம் இருந்து விலகித்
தூர இருப்பது உடலுக்கும், மனதுக்கும் நலம் பயக்கும்:bolt:

குயிலும், காகமும் ஒரே கூட்டில் இருந்தால்.....!
'லார்க்'கும், 'ஔலும்' ஒரே வீட்டில் இருந்தால்....!

பொறுமை எல்லை மீறாமல் அடக்குவது - உடலில்
பெருக்கிவிடும் நல்லவர்களின் ரத்த அழுத்தத்தை! :mad2:

ஆடும் வரை ஆடுவாள் - ஆடவன் தாங்கும் வரையில்!!!
ஆட்டம் என்ன ஆகும் - ஆடவன் இல்லாது போனால் ???

Viewing all articles
Browse latest Browse all 5709

Trending Articles