Quantcast
Channel: Tamil Brahmins - 1,8,12,13,14,16,18,19,20,21,24,25,26,27,28,29,30,31,32,33,34,35,36,37,38,39,40,41,43,44,49,50,51,52,53,54,55,57,58,59,60,61,62,63,65,68,69,70,73,74,75,76,78,79,80,81,82,83,84,85,86,87,88,89,92,93,94,95,96,97,98,100,101,102
Viewing all 5709 articles
Browse latest View live

உங்கள் வீட்டு பூஜை அறை எப்படி அமைக்க வேண்

$
0
0
உங்கள் வீட்டு பூஜை அறை எப்படி அமைக்க வேண்டும்





மனதிற்கு நிம்மதியை தருவது ஆண்டவன் சன்னிதி. அது போலவே ஒரு வீட்டில் உள்ள பூஜை அறையும். அது எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சில முக்கிய குறிப்புகள் வருமாறு.

ஒரு வீட்டில் பூஜை அறை வட கிழ க்கில் அல்லது வடக்கில் அல்லது கிழக்கில் அமைக்கப்பட வேண்டும். பெரிய வீடாக இருந்தால் வீட்டின் மையப் பகுதியில் பூஜை அறை அமைக்கலாம்.

ஒரு பெரிய வீட்டில் இரண்டு தளங்கள் இருந்து எல்லோரும் அந்த வீட்டில் ஒரு குடும்பமாக வசித்தால் அவற்றில் தரை தளத்தில் பூஜை அறை இருக்க வேண்டும்.

பூஜை அறையில் கடவுளின் படம் அல்லது உருவம் கிழக்கு திசை பார் த்து இருக்க வேண்டும். அதாவது நாம் வணக்கும் போது கடவுளின் படங்கள் கிழக்கு பார்த்து இருக்க வேண்டும். மேற்கு நோக்கியும் இருக்கலாம்.


பூஜை அறையின் வழிபடும் பகுதியில் வட கிழக்கு மூலையில் ஒரு பித்த ளை சொம்பில் அல்லது டம்ப்ளரில் நீர் பிடித்து வைக்க வேண்டும். இந்த நீரை தினமும் மாற்ற வேண்டும்.

தென் – கிழக்கு மூலையில் குத்து விளக்கை வைத்து விளக்கேற்ற வேண்டும்.
முக்கியமாக கவனிக்க வேண்டிய து, பூஜை அறையில் இறந்து போன முன்னோர்களின் புகைப் படங்களை வைக்கக் கூடாது.

பூஜை அறையை குப்பைகள் இன் றி சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
பூஜை அறை சுவர்களின் வண்ணம் வெள்ளை அல்லது இள மஞ்சள் அல்லது நீல நிறத்தில் இருக்க வேண்டும்.பூஜை அறையை வழிபடுவதற்கு, தியானம் செய்வதற்கு மட்டும் பயன் படுத்த வேண்டும்.

சில வீடுகளில் இடப் பற்றாக்குறை கார ணமாக படுக்கை அறை அல்லது சமை யல் அறை சுவர்களில் உள்ள அல மாரிக ளை பூஜை அறையாக பயன் படுத்துவது ண்டு. அப்படி இருந்தால் வழி படும் நேரம் தவிர அந்த அலமாரியை மூடி வைக்க வேண்டும். அதாவது கதவு இருந்தால் அதை அடைத்து வைக்க வேண்டும். அப்படி இல்லா விட்டால் துணித் திரை கொண்டு மூடி வைக்க வேண்டும். சில சமயங்களில் கதவு உள்ள மரப் பெட்டிகளில் கடவுள் படங்களை வைத்து வழி படுவதும் உண்டு. இதை சமையல் அறையின் வட கிழக்கு மூலையில் வைக் கலாம்.

கழிப்பறையின் சுவர்களில் உள்ள அலமாரிகளில் மேற்கண்டவாறு பூஜை அறை அமைக்கக் கூடாது. அதை கண்டி ப்பாக தவிர்க்க வேண்டும்.
பூஜை அறைக்கு இரண்டு கதவுகள் இருக்க வேண்டும். அவை வெளிப் புற மாக திறக்கும்படி இருக்க வேண்டும்.

ஒரு பூஜை அறை மாடிப்படிகளின் கீழ் அமைந்து இருக்கக் கூடாது.
பூஜை அறையில் மந்திர உச்சாடனங் களை தினமும் ஒன்றிரண்டு தடவை ஒலிபரப்பாகும்படி செய்ய வேண்டும் அல்லது நாமும் வாய் விட்டு உச்சாடனம் செய்யலாம். இது வீட்டில் நேர்மறை எண் ணங்களை கொண்டு வரும்.

அனைத்தையும் விட பூஜை அறையில் மனதை ஒருமுகப் படுத்தி, தீர்க்கமாக நமது பிரார்த்தனையை கடவுளிடம் முன் வைக்க வேண்டும். அது ஒரு நிமிடம் நீடித்தாலும் கூட போதுமானது.

???????????? ?????????: ?????? ?????? ???? ??? ?????? ?????? ???????? ?????? ?????????


கோவில்களில் மஹா கும்பாபிஷேகம் எதற்காக ந&

$
0
0
கோவில்களில் மஹா கும்பாபிஷேகம் எதற்காக நடத்துகிறார்கள் ?






இறைவன் ஜோதி வடிவானவன். பஞ்ச பூத சக்திகளையும் தன்னுள்ளே அடக்கி ஆள்பவன். தன்னுடைய சக்தியை நிலைபெறச்செய்து தன்னை நம்பி வருவோர்க்கெல்லாம் அருள் பாலிக்கிறான். அதற்காக, எல்லா இடங்களிலும் வியாபித்திருக்கும் இறை சக்தியை ஈர்த்து சேர்த்து மூலஸ்தானத்தில் நிலைப்படுத்த வழிபாட்டுத்தலமாக உருவாக்குகிறார்கள்.



இக்கலியுகத்தில் பிறவி எடுத்த நாம், பிறவிப்பயன் அடைய வேண்டும் என்று நம் முன்னோர்கள், ரிஷிகள், ஞானிகள் இவர்களைக்கொண்டு பூஜைகள், விரதங்கள், யாகங்கள், தான தர்மங்கள் ஆகியன செய்து மனிதன் தெய்வத்தன்மை அடைந்து வாழ்வாங்கு வாழ வழி வகுத்துள்ளார்கள்.



அதில் மிகவும் முக்கியமான ஒன்று ஆலயம் கட்டுதல், ஆலயத் திருப்பணி செய்தல் என்பதாகும். இவை ஆபர்தம், அனாவர்தம், புனராவர்தனம், சுந்தரிதம் என நான்காக பிரிக்கப்படும்.


வேத, ஆகம, சிற்ப,சாஸ்திர முறைப்படி கருங்கற்களைக் கொண்டு ஆலயம் கட்டி அதில் யந்திர ஸ்தாபனம் செய்து தெய்வ உருவங்களை பிரதிஷ்டை செய்கிறார்கள்.


ஆலயத்தின் கருவறையில் பிரதிஷ்டை செய்யப்படும் மூர்த்திகள் மந்திர வடிவமாக இருந்து ஆன்மாக்களுடைய கர்மாக்களையும், மாயைகளையும் போக்கி அருள் பாலிக்கின்றனர்.


மந்திர ஒலிக்கு ஆற்றல் அதிகம். மந்திரங்களில் சிறந்த மந்திரமாக கருதப்படும் காயத்ரீ மந்திரத்தின் சக்தி, ஒலிக்கப்படும் இடத்திலிருந்து ஆயிரம் மீட்டர் தொலைவு வரை வியாபித்திருக்குமாம். பெரிய மகான் ஆக இருந்தாலும் ஆலய வழிபாடு செய்ய வேண்டும் என்று கூறுவர்.


கல்லினால் வடிவமைத்த தெய்வ திருவுருவங்களை தானியவாசம், ஜலவாசம் செய்வார்கள். தங்கம், வெள்ளி அல்லது செம்பு தகட்டில் மந்திரங்களை எழுதி, நாற்பத்தெட்டு (48) நாட்கள் முறைப்படி வழிபாடுகள் செய்து அவற்றை தெய்வ சிலைகளை பிரதிஷ்டை செய்யும் இடத்தில் பதிய வைப்பார்கள்.


கல்லினாலும், மண்ணினாலும், உலோகங்களாலும் மனிதனால் உருவாக்கப்பட்ட தெய்வ உருவங்களுக்கு சக்தியை உண்டு பண்ணுவதற்காக செய்யப்படும் பல வித யாகங்க்களுள் ஒன்று தான் கும்பாபிஷேகம். இதற்காக வேதத்தில் சிறந்தவர்களும், சிவா பூஜையில் தன்னை அர்பணித்துக் கொண்டவர்களும் தேவையான யாக குண்டங்களை அமைப்பார்கள்.


இனிய மந்திரங்களை ஓதி யாகத்தில் அக்கினி வளர்த்து அரிய வகை மூலிகைகள் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை அக்கினியில் சேர்த்து அதில் தோன்றும் ஜோதியை கும்பத்தில் சேர்ப்பார்கள்.


தெய்வ சக்திகள் உருவேற்றப்பட்ட காச தீர்த்தங்களால் சிலைகளுக்கு அபிஷேகம் செய்து கருவறையில் யந்திரங்கள் பதித்து சிலைகளை பிரதிஷ்டை செய்வார்கள். கோபுரத்தின் மேலுள்ள கலசங்களுக்கும் உயிரூட்டப்பட்ட சக்தி வாய்ந்த கலச தீர்த்தங்களால் அபிஷேகம் செய்யப்படும்.


சைவர்கள் மகா கும்பாபிஷேகம் என்றும் வைணவர்கள் மகா சம்ப்ரோக்ஷணம் என்றும் கூறுவர்.


ஆகம விதிப்படியும், சாஸ்திர முறைப்படியும் தெய்வ உருவங்களில் சக்தியையும், கோபுர கலசத்தில் உருவேற்றிய சக்தியையும், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊக்கப்படுத்தி மனித வாழ்க்கை மேம்படுவதற்காக நடைபெறுவதே மகா கும்பாபிஷேகம். மகா கும்பாபிச்கேகதன்று முப்பத்து முக்கோடி தேவர்களும் நமக்கு ஆசி வழங்குவார்கள் என்பது ஆன்றோர் வாக்கு.


கும்பாபிஷேகத்தன்று வணங்க முடியாதவர்கள் அதனைத் தொடர்ந்து நடைபெறும் 48 நாள் மண்டல பூஜையில் கலந்து கொண்டு கடவுளை வணங்கினாலும் இறைவன் திருவருள் நிரம்ப துணை செய்யும்.


பழமை வாய்ந்த கோயில் கோபுரங்களை தரிசனம் செய்யும்போதும், கோயிலுக்குள் நாம் நுழையும் போதும், ஓர் அற்புதமான சக்தி நம் உடலில் ஊடுருவிச்செல்வதை பலர் உணர்ந்திருக்கலாம்.

பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஆலய மகா கும்பாபிஷேகத்தில் உடலால், மனத்தால், பொருளால் உதவி செய்வது, கும்பாபிஷேகம் காண்பது, அதில் பங்கு கொள்வது என்பது வாழ்நாளில் கிடைப்பதற்கரிய ஒரு வாய்ப்பாகும். இந்த அறிய வாய்ப்பினை நழுவ விடாமல் பயன்படுத்தி கொள்பவர்கள், வாழ்நாளில் சகல விதமான வேண்டுதல்களும் நிறைவேற்றப்பட்டு, பொருளாதார முன்னேற்றத்துடன், குடும்ப ஒற்றுமையுடன், மன மகிழ்ச்சியுடன், இறைவன் திருவருள் கூடி வர வாழ்வார்கள் என்பது நம்பிக்கை.


குலம் தழைக்க, வளம் பெருக, நலம் சிறக்க, அனைத்து ஆலய கும்பாபிஷேகத்திலும் முடிந்த வரை பங்கு பெறுவோம், பயன் பெறுவோம், நலன் பெறுவோம்.

???????????? ?????????: ??????????? ??? ????????????? ??????? ??????????????? . . . ! ! !





How important is to match horoscopes before Marriage ?

$
0
0
How important is to match horoscopes before Marriage ?



I have seen marriages conducted after horoscope matching, after children are born, due to many reasons couples break; one may say proper Josier ( horoscope reading expert ) was not consulted.

Recently i have attended a marriage ( Parents made horoscope matching ) but just after the marriage, the girl refused t o live the boy even though she agreed to marry the boy earlier

Love marriages are never put into such scanners; There are cases of marriages without horoscope matching and the couple live happily without breaking.

Members, please share your views on this


Thanks

திருமங்கையாழ்வார்

$
0
0
திருமங்கையாழ்வார்




பிறந்த இடம் : திருக்குறையலூர் ( நாகப்பட்டினம் மாவட்டமசீர்காழி அருகில்)
தந்தை : ஆலிநாடுடையார்
தாய் : வல்லித்திரு அம்மையார்
பிறந்த காலம் : எட்டாம் நூற்றாண்டு நளஆண்டு கார்த்திகை மாதம்
நட்சத்திரம் : கார்த்திகை (பவுர்ணமி திதி)
கிழமை : வியாழன்
எழுதிய நூல் : பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், திருஎழுகூற்றிருக்கை, பெரிய திருமடல்,சிறிய திருமடல்.
பாடிய பாடல் : 1253
சிறப்பு : திருமாலின் சார்ங்கம் என்ற வில் லின் அம்சமாக பிறந்தவர், மன்னனாகப் பிறந்து பக்தி மார்க்கத்தில்திளைத்தவர்.

பெற்றோர்கள் இவருக்கு நீலன் என்று பெயரிட்டனர். இவரது வீரத்தில் மகிழ்ந்த மன்னன், நீலனை தன் படைத்தளபதி ஆக்கியதுடன், திருவாலி நாட்டின் மன்னனாகவும் ஆக்கினான். அமங்கலை என்ற தேலோக கன்னி, கபில முனிவரின் சாபத்தால் பூமியில் குமுதவல்லி நாச்சியார் என்ற பெயரில் வளர்ந்து வந்தாள்.

இவளது புகழையும், அறிவையும் கேள்விப்பட்ட திருமங்கைஆழ்வார் இவளைத்திருமணம் செய்ய விரும்பினார். விஷ்ணுவின் பக்தையான குமுதவல்லியோ தன்னை திருமணம் செய்ய வேண்டுமானால் தினமும் ஆயிரத்தெட்டு வைணவர்களுக்கு அமுது படைக்க வேண்டும் என்ற நிபந்தனை விதித்தாள்.

நிபந்தனையின் பேரில் அமுது படைத்து, படைத்து அரண்மனையின் நிதி நிலை சரிந்தது. வழக்கமாக சோழமன்னனுக்கு கப்பம் கேட்டு வந்த ஏவலர்களிடம் தன் நிலையை கூறி அனுப்பி விட்டார். கோபமடைந்த மன்னன் அமைச்சர்களுடன் தன் படையை அனுப்பி ஆழ்வாரை பிடித்து வரும்படி கூறினான். ஆனால் அனைவரும் விரட்டியடிக்கப்பட்டனர். எனவே மன்னனே பெரும் படையுடன் சென்றான். ஆனாலும் ஆழ்வார் அவர்களை புறமுதுகிட்டு ஓடச்செய்தார். ஆழ்வாரின் வீரத்தில் மகிழ்ந்த மன்னன் அவரிடம் நேரில் சென்று பேச்சுப்படி கப்பம் கட்டுவதே சிறந்தது. அதுவரை என் கைதியாக கோயிலில் தங்கியிரு என்றார். மன்னன் கூறியபடி ஆழ்வாரும் மூன்றுநாட்கள் எதுவும் சாப்பிடாமல் கோயிலில் தங்கியிருந்தார்.


பசி மயக்கத்தில் தூங்கிய ஆழ்வாரின் கனவில் தோன்றிய காஞ்சிபுரத்து பெருமாள். தன் சேவைக்கு வந்தால் அவரது கடன் தீர்க்கும் வகையில் பொருளுதவி செய்வதாக கூறினார். மன்னனின் அனுமதிபெற்று படையினருடன் காஞ்சிபுரம் சென்ற ஆழ்வார், பெருமாள் கூறிய இடத்தில் தோண்டவும், பெரும் புதையல் இருந்தது. அதை எடுத்து மன்னனுக்குரிய கடனை அடைத்து விட்டு மீதியை அமுது படைக்க வைத்துக்கொண்டார். இதையறிந்த மன்னன் ஆழ்வாரைப் பணிந்து, பணத்தை திருப்பிக்கொடுத்து அமுது படைக்கவைத்துக் கொள்ள கூறினார். இந்தப்பணமும் தீர்ந்து போகவே, ஆழ்வார் தன் அமைச்சர்களுடன் பணக்காரர்களிடம் கொள்ளையடித்து அமுதுபடைத்து வந்தார். ஒரு முறை நாராயணன் லட்சுமி தேவியுடன் மணக்கோலத்தில் வந்தார். ஆழ்வார் தன் படையினருடன் அவர்களை மிரட்டி அவர்களது நகைகளை பெற்றுக்கொண்டார். ஆனால் தன் கால் விரல் மோதிரத்தை மட்டும் நாராயணன் கழட்டவில்லை. ஆழ்வாரும் மோதிரத்தை கழட்டும்படி கூறியதற்கு, என்னால் முடியவில்லை முடிந்தால் நீயே கழட்டிக்கொள் என்றார் நாராயணன். அதேபோல் ஆழ்வாரும் குனிந்து தன் பற்களால் விரலைக்கடித்து மோதிரத்தை இழுத்தார். அப்போது நாராயணன் ஆழ்வாரின் காதுகளில் நாராயண மந்திரத்தை உபதேசித்தார்.

வந்திருப்பது நாராயணன் என்பதை அறிந்த ஆழ்வார் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டார். ஆழ்வார் திருடனாக இருந்தாலும் தன் உணவுக்கு கூட அதை எடுக்காமல் யாசித்து சாப்பிட்டார்.

பெருமாளின் 108 திருப்பதிகளில் இவர் தனியாக சென்று 46 கோயில்களையும், மற்ற ஆழ்வார்களுடன் சேர்ந்து 36 கோயில்களையும் என மொத்தம் 82 கோயில்களை மங்களாசாசனம் செய்துள்ளார். 12 ஆழ்வார்களில் இவர்தான் அதிக பெருமாள் திருத்தலங்களை மங்களாசாசனம் செய்துள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது வரலாற்றில் ஒரு சிறப்பு என்னவென்றால் இவர் மொத்தம் 82 பெருமாள் கோயில்களை மங்களாசாசனம் செய்திருந்தாலும், தான் பிறந்த சொந்த ஊரான திருக்குறையலூரில் உள்ள பெருமாள் கோயிலை மங்களாசாசனம் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



திருமங்கை ஆழ்வார் தனியாக சென்று மங்களாசாசனம் செய்த கோயில்கள்-46



1. திருப்புல்லாணி (அருள்மிகு கல்யாண ஜகன்னாதர் திருக்கோயில், திருப்புல்லாணி, ராமநாதபுரம்)
2. திருமயம் (அருள்மிகு சத்திய மூர்த்தி பெருமாள் திருக்கோயில், திருமயம், புதுக்கோட்டை)
3. திருக்கரம்பனூர் (அருள்மிகு புரு÷ஷாத்தமன் திருக்கோயில், உத்தமர் கோயில், திருச்சி)
4. கண்டியூர் (அருள்மிகு ஹரசாப விமோசனர் திருக்கோயில், கண்டியூர், தஞ்சாவூர்)
5. நைமிசாரண்யம் (அருள்மிகு தேவராஜர் திருக்கோயில், நைமிசாரண்யம், உ.பி.)

6. ஜோதிஷ்மட், திருப்பிரிதி(அருள்மிகு பரமபுருஷர் திருக்கோயில், நந்தப்பிரயாக், உ.பி.)
7. சிங்கவேள்குன்றம் (அருள்மிகு பிரகலாத வரதன்,நரசிம்மர் திருக்கோயில், அகோபிலம், கர்நூல், ஆந்திரா)
8. திருஎவ்வுள் (அருள்மிகு வீரராகவ பெருமாள் திருக்கோயில், திருவள்ளூர்)
9. தின்னனூர் (அருள்மிகு பக்தவத்சல பெருமாள் திருக்கோயில், திருநின்றவூர், திருவள்ளூர் மாவட்டம்)
10. திருத்தண்கா (அருள்மிகு விளக்கொளி பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம்)

11. திருப்பரமேஸ்வர விண்ணகரம் (அருள்மிகு பரமபதநாதன் திருக்கோயில், திருப்பரமேஸ்வர விண்ணகரம், காஞ்சிபுரம்)
12. திருப்பவள வண்ணம் (அருள்மிகு பவள வண்ணர் திருக்கோயில், திருப்பவள வண்ணம், காஞ்சிபுரம்)
13. திரு நீரகம் (அருள்மிகு உலகளந்த பெருமாள் திருக்கோயில்) காஞ்சிபுரம்
14. திரு காரகம் (அருள்மிகு உலகளந்த பெருமாள் திருக்கோயில்) காஞ்சிபுரம்
15. திருக்கார் வானம் (அருள்மிகு உலகளந்த பெருமாள் திருக்கோயில்) காஞ்சிபுரம்

16. திருக்கள்வனூர் (அருள்மிகு ஆதிவராக பெருமாள், கள்வப்பெருமாள் திருக்கோயில்கள், திருக்கள்வனூர், காமாட்சி அம்மன் கோயிலுக்குள் உள்ள சன்னதி, காஞ்சிபுரம்)
17. நிலாத்திங்கள் துண்டான் (அருள்மிகு சந்திர சூடப் பெருமாள் திருக்கோயில், நிலாத்திங்கள் துண்டான், ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்குள் உள்ள சன்னதி, காஞ்சிபுரம்)
18. திருப்புட்குழி (அருள்மிகு விஜய ராகவப் பெருமாள் திருக்கோயில், திருப்புட்குழி, காஞ்சிபுரம்)
19. திருவஹீந்தபுரம் (அருள்மிகு தெய்வநாயகன் திருக்கோயில், திருவகிந்திபுரம், கடலூர்)
20. காழிச்சீராம விண்ணகரம் (அருள்மிகு திரிவிக்ரமன் திருக்கோயில், சீர்காழி, நாகப்பட்டினம்)


21. திருக்காவளம்பாடி (அருள்மிகு கோபாலகிருஷ்ணன் திருக்கோயில், திருக்காவளம்பாடி, திருநாங்கூர், நாகப்பட்டினம்)
22. திருவெள்ளக்குளம் (அருள்மிகு ஸ்ரீ நிவாசன் திருக்கோயில், திருவெள்ளக்குளம், திருநாங்கூர், நாகப்பட்டினம்)
23. கீழைச்சாலை (அருள்மிகு தெய்வநாயகன் திருக்கோயில், திருத்தேவனார் தோகை, திருநாங்கூர், நாகப்பட்டினம்)
24. திருப்பார்த்தன் பள்ளி (அருள்மிகு தாமரையாள் கேள்வன் திருக்கோயில், திருப்பார்த்தன் பள்ளி, திருநாங்கூர், நாகப்பட்டினம்)

25. திருமணிக்கூடம் (அருள்மிகு வரதராஜ பெருமாள் திருக்கோயில், திருமணிக்கூடம், திருநாங்கூர், நாகப்பட்டினம்)

26. மணிமாடக் கோயில் (அருள்மிகு நாராயணன் திருக்கோயில், மணிமாடக் கோயில், திரு நாங்கூர், நாகப்பட்டினம்)
27. அரியமேய விண்ணகரம் (அருள்மிகு குடமாடு கூத்தன் திருக்கோயில், அரியமேய விண்ணகரம், திரு நாங்கூர், நாகப்பட்டினம்)
28. வன் புருத்÷ஷாத்தமம் (அருள்மிகு புருத்÷ஷாத்தமன் திருக்கோயில், வன் புருத்÷ஷாத்தமம், திரு நாங்கூர், நாகப்பட்டினம்
29. திருத்தேற்றி அம்பலம் (அருள்மிகு செங்கண்மால் திருக்கோயில், திருத்தேற்றி அம்பலம், திரு நாங்கூர், நாகப்பட்டினம்)
30. வைகுந்த விண்ணகரம் (அருள்மிகு வைகுண்டநாதன் திருக்கோயில், வைகுந்த விண்ணகரம், திரு நாங்கூர், நாகப்பட்டினம்
31. செம்பொன் சேய் கோயில், (அருள்மிகு பேரருளாளன் திருக்கோயில், செம்பொன்சேய் கோயில், திரு நாங்கூர், நாகப்பட்டினம்)
32. தலைசிங்க நான்மதியம் (அருள்மிகு நாண்மதியப் பெருமாள் திருக்கோயில், தலைச்சங்காடு, நாகப்பட்டினம்)
33. இந்தளூர் (அருள்மிகு பரிமள ரங்கநாதர் திருக்கோயில், திருஇந்தளூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம்)
34. தேரழுந்தூர் (அருள்மிகு தேவதிராஜன் திருக்கோயில், தேரழுந்தூர், நாகப்பட்டினம்)
35. திருச்சிறுபுலியூர் (அருள்மிகு அருள் மாகடல் திருக்கோயில், திருச்சிறுபுலியூர், திருவாரூர்)

36. நாகை (அருள்மிகு நீலமேகப் பெருமாள் திருக்கோயில், நாகபட்டினம்)
37. திருக்கண்ணங்குடி (அருள்மிகு லேகநாதப் பெருமாள் திருக்கோயில், திருக்கண்ணங்குடி, திருவாரூர்)
38. திருக்கண்ண மங்கை (அருள்மிகு பக்தவத்ஸலப் பெருமாள் திருக்கோயில், திருக்கண்ண மங்கை, திருவாரூர்)
39. திருச்சேறை (அருள்மிகு சாரநாதன் திருக்கோயில், திருச்சேறை, தஞ்சாவூர்)

40. திருநறையூர் (அருள்மிகு திருநறையூர் நம்பி திருக்கோயில், திருநறையூர், தஞ்சாவூர்)
41. திருவெள்ளியங்குடி (அருள்மிகு கோலவல்வில்லி ராமன் திருக்கோயில், திருவெள்ளியங்குடி, தஞ்சாவூர்)
42. நந்திபுர விண்ணகரம் (அருள்மிகு ஜகந்நாதன் திருக்கோயில், நந்திபுர விண்ணகரம், நாதன் கோயில், தஞ்சாவூர்)
43. ஆதனூர் (அருள்மிகு ஆண்டளக்கும் ஐயன் திருக்கோயில், ஆதனூர், தஞ்சாவூர்)
44. திருப்புள்ளபூதங்குடி (அருள்மிகு வல்வில் ராமன் திருக்கோயில், திருப்புள்ளபூதங்குடி, தஞ்சாவூர்)
45. திருக்கூடலூர் (அருள்மிகு வையம் காத்த பெருமாள் திருக்கோயில், திருக்கூடலூர், தஞ்சாவூர்)

46. திருக்கோழி (அருள்மிகு அளகிய மணவாளர் திருக்கோயில், உறையூர், திருச்சி)

திருமங்கை ஆழ்வார் மற்ற ஆழ்வார்களுடன் சென்று மங்களாசாசனம் செய்த கோயில்கள்-36


திருமங்கை ஆழ்வார், பூதத்தாழ்வார் (4)
1. திருநீர்மலை (அருள்மிகு நீர்வண்ணன் திருக்கோயில், திருநீர்மலை, சென்னை, காஞ்சிபுரம் மாவட்டம்)
2. திருவிடந்தை (அருள்மிகு லட்சுமி வராகர் திருக்கோயில், திருவிடந்தை, காஞ்சிபுரம் மாவட்டம்)
3. திருக்கடல் மல்லை (அருள்மிகு ஸ்தல சயன பெருமாள் திருக்கோயில், மகாபலிபுரம், காஞ்சிபுரம் மாவட்டம்)
4. அத்திகிரி (அருள்மிகு வரதராஜப் பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம்)


திருமங்கை ஆழ்வார், பொய்கையாழ்வார் (1)
1. காஞ்சிபுரம் (அருள்மிகு ஆதி கேசவ பெருமாள் திருக்கோயில், அஷ்டபுஜம், காஞ்சிபுரம்)
திருமங்கை ஆழ்வார், திருமழிசை ஆழ்வார் (1)
1. திரு ஊரகம் (அருள்மிகு உலகளந்த பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம்)
திருமங்கையாழ்வார், பேயாழ்வார் (1)
1. திருக்கடிகை (அருள்மிகு யோக நரசிம்மர் திருக்கோயில், சோளிங்கபுரம், வேலூர் மாவட்டம்)


திருமங்கையாழ்வார், நம்மாழ்வார் (5)
1. திருமோகூர் (அருள்மிகு காளமேகப் பெருமாள் திருக்கோயில், திருமோகூர், மதுரை)
2. திருப்புலியூர் (அருள்மிகு மாயப்பிரான் திருக்கோயில்,திருப்புலியூர்,ஆழப்புழா, கேரளா மாநிலம்)
3. திருவல்லவாழ் (அருள்மிகு திருவாழ்மார்பன் திருக்கோயில், வல்லப ÷க்ஷத்திரம், பந்தனம் திட்டா, கேரளா மாநிலம்
4. திருமூழிக்களம் (அருள்மிகு லெட்சுமணப்பெருமாள் திருக்கோயில், திருமூழிக்களம்,எர்ணாகுளம், கேரளா மாநிலம்)
5. திருநாவாய் (அருள்மிகு நாவாய் முகுந்தன் திருக்கோயில், திருநாவாய்,மலப்புரம், கேரளா மாநிலம்)


திருமங்கை ஆழ்வார், பெரியாழ்வார் (3)
1. பத்ரிநாத் (அருள்மிகு பத்ரிநாராயணர் திருக்கோயில், பத்ரிநாத், உ.பி,)
2. சாளக்கிராமம், முக்திநாத் (அருள்மிகு மூர்த்தி திருக்கோயில், சாளக்கிராமம், நேபாளம்)
3. திருக்கூடல் (அருள்மிகு கூடல் அழகர் பெருமாள் திருக்கோயில், திருக்கூடல், மதுரை)
திருமங்கை ஆழ்வார், குலசேகர ஆழ்வார் (2)
1. திருச்சித்ர கூடம் (அருள்மிகு கோவிந்த ராஜ பெருமாள் திருக்கோயில், சிதம்பரம், கடலூர் மாவட்டம்)
2. திருவாழித் திருநகரி, (அருள்மிகு லட்சுமி நரசிம்மர், தேவராஜன் திருக்கோயில், திருவாழித் திருநகரி, நாகப்பட்டினம்)


திருமங்கை ஆழ்வார், பூதத்தாழ்வார் (1)
1. திருத்தங்கல் (அருள்மிகு குண்றின்மேல் நின்ற நாராயணன் திருக்கோயில், திருத்தங்கல், விருதுநகர்)
திருமங்கை ஆழ்வார், ஆண்டாள், பெரியாழ்வார் (1)
1. திருஆய்பாடி (அருள்மிகு நவமோகனகிருஷ்ணன் திருக்கோயில், கோகுலம், உ.பி.)
திருமங்கை ஆழ்வார், பேயாழ்வார், திருமழிசை ஆழ்வார் (1)
1. திருவல்லிக்கேணி (அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோயில், திருவல்லிக்கேணி, சென்னை)
திருமங்கை ஆழ்வார், பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார் (1)
1. திருக்கோயிலூர் (அருள்மிகு திரிவிக்கிரமர் திருக்கோயில், திருக்கோயிலூர், விழுப்புரம்)
திருமங்கையாழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வார் (1)
1. திரு விண்ணகர் (அருள்மிகு ஒப்பிலியப்பன் திருக்கோயில், ஒப்பிலியப்பன்கோவில், தஞ்சாவூர்)



திருமங்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், நம்மாழ்வார்(1)
1. வெண்ணாற்றங்கரை (அருள்மிகு நீலமேகப் பெருமாள், மணிக்குன்ற பெருமாள் திருக்கோயில்கள், தஞ்சைமாமணி கோயில், தஞ்சாவூர்)
திருமங்கை ஆழ்வார், நம்மாழ்வார், ஆண்டாள், பெரியாழ்வார் (2)
1. துவாரகை (அருள்மிகு கல்யாண நாராயணன் திருக்கோயில், துவாரகை, குஜராத்)
2. திருவடமதுரை (அருள்மிகு கோவர்த்தனன் திருக்கோயில், மதுரா, உ.பி.)
திருமங்கை ஆழ்வார், பொய்கையாழ்வார், பேயாழ்வார், திருமழிசை ஆழ்வார் (1)
1. திருவெக்கா (சொன்ன வண்ணம் செய்த பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம் மாவட்டம்)
திருமழிசையாழ்வார், பெரியாழ்வார், நம்மாழ்வார் (2)
1. திருப்பேர் நகர் (அருள்மிகு அப்பக்குடத்தான் திருக்கோயில், கோயிலடி, தஞ்சாவூர்)
2. திருக்குறுங்குடி (அருள்மிகு நின்ற நம்பி திருக்கோயில், திருக்குறுங்குடி, திருநெல்வேலி)
திருமங்கை ஆழ்வார், திருமங்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசை ஆழ்வார் (1)



1. திருப்பாடகம் (அருள்மிகு பாண்டவ தூதப் பெருமாள் திருக்கோயில், திருப்பாடகம், காஞ்சிபுரம்)
திருமங்கை ஆழ்வார் ,பெரியாழ்வார், ஆண்டாள், குலசேகர ஆழ்வார், நம்மாழ்வார் (1)
1. திருக்கண்ணபுரம் (அருள்மிகு நீலமேகப் பெருமாள் திருக்கோயில், திருக்கண்ணபுரம், திருவாரூர்)
திருமங்கை ஆழ்வார், பெரியாழ்வார், குலசேகர ஆழ்வார், தொண்டரடி பொடியாழ்வார், நம்மாழ்வார் (1)
1. அயோத்தி (அருள்மிகு ரகுநாயகன் (ராமர்) திருக்கோயில், சரயு, அயோத்தி,பைசாபாத், உ.பி)
திருமங்கையாழ்வார், பூதத்தாழ்வார், பெரியாழ்வார், திருமழிசையாழ்வார், பேயாழ்வார் (1)
1. திருக்கோஷ்டியூர் (அருள்மிகு சவுமிய நாராயணப்பெருமாள் திருக்கோயில், திருக்கோஷ்டியூர், சிவகங்கை)


திருமங்கை ஆழ்வார், ஆண்டாள், பெரியாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வார் (1)
1. திருமாலிருஞ்சோலை (அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில், அழகர் கோவில், மதுரை
திருமங்கை ஆழ்வார், ஆண்டாள், பெரியாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார்,திருமழிசை ஆழ்வார், நம்மாழ்வார் (1)
1. கும்பகோணம் (அருள்மிகு சாரங்கபாணி திருக்கோயில், கும்பகோணம், தஞ்சாவூர்)
திருமங்கை ஆழ்வார், பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வார், ஆண்டாள், பெரியாழ்வார், குலசேகர ஆழ்வார், திருமழிசை ஆழ்வார், திருப்பாணாழ்வார் (2)
1. திருவேங்கடம் (அருள்மிகு வெங்கடாசலபதி திருக்கோயில், திருப்பதி, சித்தூர், ஆந்திரா)
2. திருப்பாற்கடல்
திருமங்கை ஆழ்வார், பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வார், ஆண்டாள், பெரியாழ்வார்,திருமங்கை ஆழ்வார், குலசேகர ஆழ்வார், திருமழிசை ஆழ்வார், திருப்பாணாழ்வார், தொண்டரடி பொடியாழ்வார் (1)
1. ஸ்ரீரங்கம் (அருள்மிகு ரங்கநாதன் திருக்கோயில், ஸ்ரீரங்கம், திருச்சி)


Thirumangai Alwar | Alwargal | ?????????????????

Story of Dhruva.

'Theettu' following demise of close relatives

$
0
0
I wonder what is the philosophical reason behind saying that there is a theettu for 10 days following demise of close relatives during which period no puja or lighting of puja lamp or going to temples is allowed. Also, for 1 yr close relatives are not supposed to celebrate any function or festival either. Why is this so?

Pandya , Manu and Matsya

$
0
0
Probably there was Pandya influence in Indonesia, where the word pandom means a ships' compass . Ancient compasses had a metal fish floating in oil and Ind. pandu means "guide" and is used in the National Anthem ("guide the nation" ). The Matsya fish of Manu seems to be linked to the Pandya fish symbol and paNa da ,"pandya" , heritage could suggest the fish of Vishnu . Matsya Purana was known in Indonesia.
Do you believe that Pandya was identified with Matsya so that the name of one could mean the other one - that pandya could mean the fish?

தொண்டரடி பொடியாழ்வார்

$
0
0
தொண்டரடி பொடியாழ்வார்





பயோடேட்டா
பிறந்த இடம் : திருமண்டங்குடி (தஞ்சாவூர் அருகில்)
பிறந்த காலம் : எட்டாம் நூற்றாண்டு பராபவ ஆண்டு மார்கழி மாதம்
நட்சத்திரம் : கேட்டை (தேய்பிறை சதுர்த்தசி திதி)
கிழமை : செவ்வாய்
எழுதிய நூல் : திருமாலை, திருப்பள்ளி எழுச்சி
பாடிய பாடல் : 55
வேறு பெயர் : விப்பிர நாராயணர்
சிறப்பு : திருமாலின் வனமாலையின் அம்சம்



சோழநாட்டின் திருமண்டங்குடி என்ற கிராமத்தில் வேத விசாரதர் என்பவர் சிறந்த திருமால் தாசராக விளங்கி வந்தார். இவர் எப்பொழுதும் நாராயணனின் திருநாமத்தை உச்சரித்துக் கொண்டே பூமாலைகள் தொடுத்து பெருமாளுக்கு சாற்றி வந்தார். அந்த உலகளந்த பெருமாளின் கருணையால் மார்கழி மாதம் கேட்டை நட்சத்திரத்தில் திருமாலின் வைஜயந்தி வனமாலையின் அம்சமாக ஒரு புதல்வர் பிறந்தார். பெற்றோர்களும் அவருக்கு விப்பிர நாராயணர் என்று பெயர் சூட்டினார்கள். சகல கலைகளையும் கற்றுணர்ந்த விப்பிரநாராயணருக்காக விண்ணுலகிலிருந்து, திருமாலின் சேனைத்தலைவரான சேனை முதலியர் பூமிக்கு வந்து உண்மைப்பொருளை உணர்த்தி சென்றார். இதன் பிறகு விப்பிர நாராயணருக்கு அரங்கனைப்பற்றிய சிந்தனையே மேலோங்கி இருந்தது. இதனால் திருமணம் செய்யாமல் பிரம்மச்சரிய விரதத்தையே உயர்வாக எண்ணி வாழ்ந்து வந்தார்.



ஒரு முறை திருமாலின் திருத்தலங்கள் அனைத்தையும் பார்த்து வர ஆசைப்பட்டு முதலில் ஸ்ரீரங்கம் சென்று அரங்கனை தரிசித்தார். அவர் பெருமையை கேட்டறிந்தார். அரங்கனைப்பார்த்த மகிழ்ச்சியில் திருமால் பெருமைக்கு நிகரில்லை எனவே பெருமானே போதும் வேறெதுவும் வேண்டியதில்லை என்று நினைத்து, பச்சை மாமலைபோல் மேனி ! பவள வாய்க் கமலச் செங்கண், அச்சுதா ! அமரா ! ஆயர்தம் கொழுந்தே எனும் இச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே என்று நெஞ்சுருகி பாடினார்.

ஸ்ரீரங்கத்துப்பெருமாளுக்கு சேவை செய்வதற்காக கோயிலிலேயே தோட்டம் அமைத்து பூக்களை பறித்து பெருமாளுக்கு தினமும் மாலை தொடுத்து கொடுப்பார். அதன் பின் பிற வீடுகளுக்கு சென்று உணவு வாங்கி அருந்துவார். இவருக்கு ஆண் பெண் என்ற வித்தியாசம் எல்லாம் கிடையாது. அனைவரிடமும் சமமாக பழகுவார். இதை சோதிக்க நினைத்தார் பரந்தாமன்.


திருக்கரம்பனூரில் தேவி, தேவதேவி என இரு தாசிகள் இருந்தனர். இவர்கள் உறையூர் அரசசபையில் ஆடி பாடி பரிசுகள் பல பெற்று திரும்பும் வழியில் விப்பிர நாராயணரின் தோட்டத்தின் அழகில் மயங்கி அதை பராமரிப்பவர் சந்திக்க சென்றார்கள். ஆனால் இவர்கள் வந்ததையோ, இவர்களது பேச்சையோ கவனிக்காமல் பெருமாளுக்கு பூமாலை தொடுப்பதிலேயே கவனமாக இருந்தார். இவரது கவனத்தை திருப்பி தன் மீது எப்போதும் மாறாத அன்புவைக்க சபதம் ஏற்றாள். அதேபோல் பெருமாளுக்கு தானும் சேவை செய்வதாக கூறி கொஞ்சம் கொஞ்சமாக விப்பிர நாராயணரின் மனதில் இடம் பிடித்தார். தேவதேவி இல்லாமல் தான் இல்லை என்ற நிலைக்கு மாறி விட்டார். தன் குடும்பத்தை பார்க்க சென்ற தேவதேவியுடன் விப்பிரநாராயணனும் சென்றார். அவரிடம் இருந்த செல்வம் எல்லாம் தீர்ந்ததால் தேவ தேவியில் தாயாருக்கு அவர் மீது வெறுப்பு ஏற்பட்டது.எனவே வெளியே சென்று தோட்டத்தில் அமர்ந்தார். அப்போது பெருமாள் ஒரு பொன் கிண்ணத்தை விப்பிர நாராயணன் கொடுத்ததாக தேவதேவியின் தாயாரிடம் கொடுத்தார். மறுநாள் கோயிலில் தங்ககிண்ணம் காணாமல் தேவதேவியின் தாயாரையும், விப்பிரநாராயணனையும் விசாரித்து விட்டு இவரை மட்டும் சிறையிலடைத்தான் மன்னன். மன்னனின் கனவில் பெருமாள் தோன்றி விப்பிரநாராயணனின் பெருமைகளை கூறி அவரை விடுவிக்க கூறினார்.

அதன்பின் விப்பிரநாராயணன் தொண்டரடிப்பொடியாழ்வாராக நெடுங்காலம் பெருமாளை பாடி இறைவனுடன் கலந்தார். பெருமாளின் 108 திருப்பதிகளில் தொண்டரடி பொடியாழ்வார் தனியாக மங்களாசாசனம் செய்யாமல் , பிற ஆழ்வார்களுடன் சேர்ந்து மொத்தம் 2 கோயில்களை மங்களாசாசனம் செய்துள்ளார்.


தொண்டரடி பொடியாழ்வார், பெரியாழ்வார், குலசேகர ஆழ்வார், நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார்



1. அயோத்தி (அருள்மிகு ரகுநாயகன் (ராமர்) திருக்கோயில், சரயு, அயோத்தி,பைசாபாத், உ.பி)
தொண்டரடி பொடியாழ்வார், பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வார், ஆண்டாள், பெரியாழ்வார், திருமங்கை ஆழ்வார், குலசேகர ஆழ்வார், திருமழிசை ஆழ்வார், திருப்பாணாழ்வார்




1. ஸ்ரீரங்கம் (அருள்மிகு ரங்கநாதன் திருக்கோயில், ஸ்ரீரங்கம், திருச்சி)




Thondaradipodi Alwar | 12 Alwars | ???????? ????????????

பேயாழ்வார்

$
0
0
பேயாழ்வார்





பயோடேட்டா
பிறந்த ஊர் : மயிலாப்பூர்
பிறந்த நாள் : ஏழாம் நூற்றாண்டு
நட்சத்திரம் : சதயம் (ஐப்பசி வளர்பிறை தசமி திதி)
கிழமை : வியாழன்
எழுதிய நூல் : மூன்றாம் திருவந்தாதி
பாடல்கள் : 100

சிறப்பு :
செவ்வல்லி மலரில் பிறந்தவர், திருமாலின் கட்கம் என்னும் வாளின் அம்சம்

இவர் சென்னையிலுள்ள ஆதிகேசவப்பெருமாள் கோயில் அருகிலுள்ள குளத்தில் அதிசயமாக மலர்ந்த செவ்வரளிப்பூவில் பிறந்தவர். சிறுவயது முதல் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கினார். அவர் மனம் எப்போதும் பரமனின் திருவடியையே நாடி நின்றது. திருமாலின் திருப்புகழை பாமாலையாக்கி நாள்தோறும் தொடுப்பார் இவர். அப்பொழுது இவர் கண்களில் ஆனந்த வெள்ளம் கரை புரண்டோடும்.

திருமாலின் திருப்பாதம் பணியுங்கள். உங்கள் வினைகள் ஓடிப்போகும். அத்துடன் மீண்டும் உங்களை தொடாது.

இதையே

அகநன்று, இது தீது என்று ஐயப்படாதே
மது நன்று தண் துழாய் மார்வன்-பொது நின்ற
பொன்அம் கழலே தொழுமின் ! முழு வினைகள்
முன்னம் கழலும் முடிந்து

என்ற பாடலால் உணர்த்தியுள்ளார். இவர் நூறு பாசுரங்கள் கொண்ட மூன்றாம் திருவந்தாதியை அருளினார். முதலாழ்வார்கள் எனப்பட்ட பூதத்தாழ்வார், பொய்கையாழ்வார், பேயாழ்வாரில் இவர் தான் அதிகமான ஸ்தலங்களைப்பாடியுள்ளார். அத்துடன் பதினைந்து திவ்ய தேசங்களை மங்களாசாசனம் செய்துள்ளார். திருக்கோவிலூரில் உள்ள ஒரு வைணவரின் வீட்டில் விளக்கு வெளிச்சத்தில் நாராயணன் நிற்பது முதலில் பேயாழ்வாருக்கு தான் தெரிந்தது. இப்படி பரமனைக் கண்ட பரவசத்தில் திருக்கண்டேன். பொன்மேனி கண்டேன் என்று துவங்கி நூறு பாடல்களை பாடினார். மேலும் திருவேங்கடம் சென்ற இவர் பெருமானை சிவனும், விஷ்ணுவும் கலந்த உருவாக கண்டார்.


பெருமாள் மேல் ஆராக்காதல் கொண்டு வேறு எதையும் நினைக்காமல் வாழ்ந்தார். பேயனாயொழிந்தே ஏனம்பிரானுக்கே என்று பாடியருளினார். பக்தி பரவசத்தில் அதுவே ஒரு வெறிபோல் தோன்றும்படி அவர் அழுவார். தொழுவார். ஆடிக் காண்பார். இறை பக்தியில் தன்னை முழுதும் மறந்து போனதால் இவர் பேயர் போலும் பித்தர் போலும் திரிந்தார். இதனாலேயே இவர் பேயாழ்வார் என் அழைக்கப்பட்டார். பெருமாளின் 108 திருப்பதிகளில் பேயாழ்வார் தனியாக சென்று 1 கோயிலையும், பிற ஆழ்வார்களுடன் சேர்ந்து 11 கோயில்களையும் என மொத்தம் 12 கோயில்களை மங்களாசாசனம் செய்துள்ளார்.


பேயாழ்வார் தனியாக சென்று மங்களாசாசனம் செய்த கோயில்-1



1. வேளுக்கை (அருள்மிகு அழகிய சிங்கர் திருக்கோயில், வேளுக்கை, காஞ்சிபுரம்)


பேயாழ்வார் மற்ற ஆழ்வார்களுடன் சென்று மங்களாசாசனம் செய்த கோயில்கள்-11


பேயாழ்வார், திருமங்கையாழ்வார் (1)

1. திருக்கடிகை (அருள்மிகு யோக நரசிம்மர் திருக்கோயில், சோளிங்கபுரம், வேலூர் மாவட்டம்)




பேயாழ்வார், திருமழிசை ஆழ்வார், திருமங்கை ஆழ்வார் (1)



1. திருவல்லிக்கேணி (அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோயில், திருவல்லிக்கேணி, சென்னை)

பேயாழ்வார், திருமங்கையாழ்வார், நம்மாழ்வார் (1)

1. திரு விண்ணகர் (அருள்மிகு ஒப்பிலியப்பன் திருக்கோயில், ஒப்பிலியப்பன்கோவில், தஞ்சாவூர்)


பேயாழ்வார், பொய்கையாழ்வார், திருமங்கை ஆழ்வார், திருமழிசை ஆழ்வார் (1)



1. திருவெக்கா (சொன்ன வண்ணம் செய்த பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம் மாவட்டம்)


பேயாழ்வார், திருமங்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், திருமழிசை ஆழ்வார் (1)



1. திருப்பாடகம் (அருள்மிகு பாண்டவ தூதப் பெருமாள் திருக்கோயில், திருப்பாடகம், காஞ்சிபுரம்)


பேயாழ்வார், பூதத்தாழ்வார், பெரியாழ்வார், திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார் (1)



1. திருக்கோஷ்டியூர் (அருள்மிகு சவுமிய நாராயணப்பெருமாள் திருக்கோயில், திருக்கோஷ்டியூர், சிவகங்கை)



பேயாழ்வார், ஆண்டாள், பெரியாழ்வார், பூதத்தாழ்வார், திருமங்கை ஆழ்வார், நம்மாழ்வார் (1)



1. திருமாலிருஞ்சோலை (அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில், அழகர் கோவில், மதுரை

பேயாழ்வார், ஆண்டாள், பெரியாழ்வார், திருமங்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், திருமழிசை

ஆழ்வார், நம்மாழ்வார் (1)



1. கும்பகோணம் (அருள்மிகு சாரங்கபாணி திருக்கோயில், கும்பகோணம், தஞ்சாவூர்)


பேயாழ்வார், பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், நம்மாழ்வார், ஆண்டாள், பெரியாழ்வார், திருமங்கை ஆழ்வார், குலசேகர ஆழ்வார், திருமழிசை ஆழ்வார், திருப்பாணாழ்வார் (2)



1. திருவேங்கடம் (அருள்மிகு வெங்கடாசலபதி திருக்கோயில், திருப்பதி, சித்தூர், ஆந்திரா)

2. திருப்பாற்கடல்

பேயாழ்வார், பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், நம்மாழ்வார், ஆண்டாள், பெரியாழ்வார், திருமங்கை ஆழ்வார், குலசேகர ஆழ்வார், திருமழிசை ஆழ்வார், திருப்பாணாழ்வார், தொண்டரடி பொடியாழ்வார் (1)

1. ஸ்ரீரங்கம் (அருள்மிகு ரங்கநாதன் திருக்கோயில், ஸ்ரீரங்கம், திருச்சி)


Peyalwar | 12 Alwarkal | ??????????

கிராம கோவில்கள், குலதெய்வ வழிபாடு எவ்வாற

$
0
0
கிராம கோவில்கள், குலதெய்வ வழிபாடு எவ்வாறு தோன்றின

சமுதாயத்தில, கோவில் வழிபாட்டு உரிமை மறுக்கப்பபட்டபொது அல்லது, வழிபடும் முறை பிடிக்காமல் போனதால், தமக்கென்று தனி தெய்வம் தனி வழிபாட்டு முறை தேவை என மக்கள் முடிவெடுத்ததன் விழைவு இந்த கிராம தெய்வங்கள் குல தெய்வ வழிபாடுகள் தோன்றியதாகச் சொல்லப்படுகிறது.



தன்னுடனோ அல்லது முன்போ பிறந்து தன் குலத்தை, இனத்தை, ஊரை, நாட்டை காக்க நடந்த போரில் உயிரை விட்ட, ஒரு மனிதரை வணங்கும் முறை குல தெய்வ வழிபாடாகும். இவ்வாறு இறந்த ஒருவரை புதைத்து நடுகல் நட்டு, பள்ளிப்படை எனும் கோவில் அமைத்து தன் குலம, பரம்பரை வணங்குவதற்கு ஏற்படுத்திக்கொண்ட தனி வழிபாடு முறை என சொல்லப்படுகிறது.


உதாரணமாக, அய்யனார் தெய்வம். சாஸ்தா எனும் ஹரிஹரனே அய்யனார் என சொல்லப்படுகிறது. ஆனால் கிராமங்களில் வணங்கப்படும் அய்யனாருக்கும் உருவ தோற்றத்திலும் வழிபாட்டு முறையிலும் வேறுபாடு இருக்கிறது. அய்யன் என்ற சொல்லுக்கு மேன்மைதங்கியவர், மதிக்கத்தக்கவர், வணங்கத்தக்கவர் என்ற பொருளும் உண்டு. ஆகவே, ஹரிஹரனோ அல்லது அய்யனாரோ மனிதனாகப் பிறந்து மடிந்து போனவர் என்று கருதப்படுகிறது. சில ஊர்களில், ஒரு சாரர் களிமண் குதிரை செய்து கோவிலில் கொண்டு வைத்தப்பிறகே மற்றவைகள்.



இதேபோன்று, மதுரை வீரன் தெய்வம். இந்த வீரன் தாழ்ந்த குலம் என சொல்லப்படும் ஒரு இனத்தில் பிறந்தவர் என்றும், குலத்தையும் நாட்டையும் காத்து நின்றவர் என சொல்லப்படுகிறது. அரசனின் மகளை காதலித்து திருமணம் செய்ததால் கொல்லப்பட்டார். பிறகு இந்த வீரன் இந்த இனத்தின் வழிபாட்டுக்குரியவராக மாறி தெய்வமானார். நம்பிக்கையின் அடிப்படையில் வேறு இனத்தவரும் தொழில் செய்பவரும் வணங்க தொடங்கினர்.


ஒருகாலகட்டத்தில் தற்பொது உள்ளதுபோல, கௌரவம் மரியாதை, கருத்து வேறுபாடு, பூசல்கள் ஏற்பட்டபோது ஜமீன்தாரர்கள், மன்னர்கள் தலையிட்டு பிடிக்காதவர்களுக்கு தனி வழிபாடு ஏற்படுத்தி கொடுத்துள்ளனர். இவர்களும் வணங்கத்தக்க ஒருவரை சாமியை ஏற்றனர். இதனைப்போலவே மற்றவர்களும் பார்த்து பின்பற்ற தொடங்கினர். இவ்வாறாக கிராம தெய்வங்களும் குலதெய்வங்களும் தோன்றியிருக்கலாம் என சொல்லப்படுகிறது.


பெண் தெய்வங்களைப் பொருத்தவரை, தன் குலத்தில் பிறந்து ஏதோ ஒரு காரணத்தால் இறந்துபோன ஒரு பெண்ணை, தன் குலத்தை காத்து நிற்பாள் என்ற நம்பிக்கையுடன் வணங்கத்தொடங்கினர். திருநெல்வேலி மாவட்டத்தில் வணங்கப்படும் பெரும்பாலான பெண் தேவதைகள் அப்போதைய ஜமீன்தார்களால் வஞ்சித்து கொலைசெய்யப்பட்டவர்கள் என ஒரு ஆய்வு கூறுகிறது.


இந்த முறையில்தான் கிராமக்கோவில்களும் குலதெய்வம் வழிபாடுகளும் தோன்றியிருக்கும் என பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன. இந்தப்பதிவும் பல ஆய்வுகளின் தொகுப்பு ஆகும். சம்பந்தப்பட்டவர்களுக்கு எங்களது நன்றி.

அன்புடன்,
கண்ணன் சாமிநாதன் With திரு. J.ரகுராமன் சார்.


Kannan swaminathan- Kootan Choru

Why indians eat with their hands

$
0
0
WHY INDIANS EAT WITH THEIR HANDS

You may have often wondered why people eat with their hands in Kerala. Eating food with your hands feeds not only the body but also the mind and the spirit. That is the Vedic wisdom behind Kerala's famous Banana Leaf Experience whose pleasure can only be appreciated fully, it is said, if one eats with hands and not fork and spoon.



Traditionally, Indians -- not just in Kerala -- have always eaten with their hands but the experience and its virtues have been elevated to a gastronomic art by the chefs at Vivanta by Taj Bekal, a picturesque 26-acre resort in the northern Kasaragod district of Kerala, flanked by the famous backwaters and the Lakshadweep Sea.


And to lend logic to the eating-by-hand experience for fussy foreigners, especially Westerners who would think twice before scooping up curry with their fingers, the maitre d'hotel lays before each guest at Latitude - the multi-cuisine restaurant with an accent on regional Kerala cuisine and a scenic view of serene waters and swaying palm fronds - captured pithily in printed paper the "Vedic wisdom behind eating with your hands".

"Our hands and feet are said to be the conduits of the five elements. The Ayurvedic texts teach that each finger is an extension of one of the five elements. The thumb is agni (fire) -- you might have seen children sucking their thumb, this is nature's way of aiding the digestion at an age when they are unable to chew; the forefinger is vayu (air), the middle finger is akash (ether -- the tiny intercellular spaces in the human body), the ring finger is prithvi (earth) and the little finger is jal (water)," the paper explains.


The 'banana leaf experience' has been redefined by the hotel from the traditional 'sadya', or banquet, in Malayalam, says Ashok Pillai, the executive sous chief. Sadya is traditionally a vegetarian meal served on a banana leaf on special occasions, during weddings and other celebrations. All the dishes are served on the leaf and eaten with hands sans cutlery, the palm and fingers being cupped to form a ladle.


A sadya can have about 24-28 dishes served as a single course and is usually served for lunch as it is quite heavy on the stomach. Preparations begin at dawn and the dishes are made before 10 in the morning on the day of the celebration. "At Vivanta by Taj at Bekal we have given a twist to the experience by adding delectable preparation of fish or meats as per request," Samir Khanna, the affable general manager, told IANS during a recent trip.


The centerpiece of sadya is navara, a medicinal rice type, that is one of the native genetic resources of Kerala and famed for its use in Ayurveda. Navara is used as a nutritional rice and health food and is said to be therapeutic for conditions such as arthritis, paralysis, ulcers, urinary tract infections, neuralgic and neurological disorders.


For a novitiate to Kerala cuisine, the food does not stop coming, and the helpings are as much as you can ingest. Most people stop at the second helping and react in surprise when waiters with buckets of curry offer to ladle more on the leaf-plate.


Foreigners, after their initial cultural reservations about eating with their hands, awkwardly slurp and lap up the food, any messiness be damned. As a concession to non-vegetarians, karimeen or pearl spot, the local fish, is served fried or in curry form.


Since the "experience" requires some preparation, those guests who want to partake of it need to intimate the chef in advance and tables are laid out separately in the restaurant for those who are eating on the banana leaf.


**************************************************
Our hands and feet are said to be the conduits of the five elements. The Ayurvedic texts teach that each finger is an extension of one of the five elements. Through the thumb comes space; through the forefinger, air; through the mid-finger, fire; through the ring finger, water and through the little finger it is earth.


Each finger aids in the transformation of food, before it passes on to internal digestion. Gathering the fingertips as they touch the food stimulates the five elements and invites Agni to bring forth the digestive juices. As well as improving digestion the person becomes more conscious of the tastes, textures and smells of the foods they are eating, which all adds to the pleasure of eating.

Indian people eat with their bare hands, actually with the right hand (left hand is considered unclean as it is used for wiping the bottom etc.)


This may sound barbaric and uncivilized to non-Indians, especially westerners, but when you shed all the prejudices and biases, you realize that it actually provides significant benefits besides being a cultural custom.


The most common benefit heard is that when eating with your hands, you are able to verify the temperature of the food before putting it into your mouth and in this way to avoid the burning of your mouth in case the food is too hot.

But there is another benefit, an energetic one:



When the food passes your hand before it enters your body, it undergoes an energetic cleansing, similar to the one some do before eating by placing their palms above the food.


Energetic cleansing of food is highly important. As with any other material, food absorbs the energies of the people through which it passed: the seller in the market, the cooks, the waiters, and so on. Naturally, all these people carry their own accumulated mental charge, negative and positive, expressed energetically in pains, feelings, emotions, impressions, thoughts, reactive patterns and conditionings. Energetic cleansing of the food assures that most of these energies will not infiltrate your body with the food and make their effects from the inside.


The kind of food you eat decides the kind of utensils you use. There is no one size fits all. If it is a burger or a sandwich, you better eat it with bare hands smile emoticon. Imagine sitting in McDonalds joint and eating every fry with fork and trying to cut the burger with a knife.


Fork usage primarily came from Italy where eating hot pasta with bare hands was a problem. During the Renaissance, Italian culture became the in trend thing and the table manners of eating with fork & knife spread elsewhere. Fork & knife, make real sense when you have bulk meat that you want to cut. Also, when the foodstuffs are little more homogenized, these devices work better.


Indian foods are so diverse in form and structure that no group of metallic devices would really do the complete job. You need to use all the dexterity of your fingers to manage the food. It is not without reason that we are given opposing thumbs wink emoticon [The papad in the center of the plate has to be broken (like Tortilla chips) and fork would not work in this case.]

A SMALL JOKE FOR SHARING :-The Indian president, Dr. Radhakrishnan, met Britain's Prime Minister Winston Churchill and they sat down for lunch. Before sitting, Dr. Radhakrishnan washed his hands and as the meal was served, he used his hands in eating the meal. Churchill told Dr. Radhakrishnan, "Why are you using your hands? Use spoon and fork, they are more hygienic".


Dr.Radhakrishnan's repartee was, "Since nobody has used my hand to eat before, my hand is more hygienic than any spoon you can find."


This is the most apt reason WE have found for eating with bare hands!!



COIMBATORE VENKATA SUBBA RAO RAGHAVENDRA RAO

Source:


http://www.quora.com/Why-do-a-good-number-of-Indians-eat-us…

.http://food.ndtv.com/…/vedic-wisdom-behind-eating-with-you…/
http://www.foodrepublic.com/…/rules-eating-your-hands-india…

image of lord muruga

$
0
0
Recently i have received a 100 year old (may be more than that) idol from my aged relative which I was told as lord muruga with valli deivanai. I have a doubt. The posture of muruga is holding both his hands on the hip. (like panduranga) There is no vel . I doubt whether it is the idol of perumal.There is no changu chakra also. How to find. Can anyone help me.

Why are eclipses spiritually charged periods?

$
0
0
Eclipses are considered profoundly spiritual periods when routine sadhana is supposed to procure 1000-fold results. Thus those who are very spiritual never miss these periods to appeal to the divine.

But, I have searched widely on the net on a reasoning for the same and couldn't find one.

Why are eclipses spiritually charged periods, does anyone know?

அறுபத்துமூவர் விழாவும் அன்னதானமும்

$
0
0
அறுபத்துமூவர் விழாவும் அன்னதானமும்

தமிழகத்தில் சங்க காலம் தொட்டே, பசிப்பிணி தீர்க்கும் அறத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அறம், பக்தி இயக்க காலகட்டத்தில், வேறு பரிணாமம் கொண்டது. சைவத்தில், சிவனடியார்களுக்கும், வைணவத்தில், பாகவதர்களுக்கும் அன்னம் அளிப்பதை அவ்வச்சமயத்தவர், பெரும்பேறாக கருதினர்.

பெரியபுராணத்தில் குறிப்பிடப்பட்ட, 63 நாயன்மார்களில் பெரும்பாலோர், அன்னதானம் அளித்தவர்கள் தான். அவர்கள் வழங்கும் உணவை உண்பதற்காக, இறைவனே, வந்தான் என, பெரியபுராணம் விதந்து கூறும். பசித்த வயிற்றுக்கு அன்னம் அளிப்பதையே பெரியபுராணம் ஒருவகையில் முன்னிறுத்துகிறது எனலாம். பூம்பாவையை உயிர்ப்பித்த போது, பத்து பாடல்கள் பாடிய திருஞானசம்பந்தர், அதன்பின், மண்ணினில் பிறந்தார் பெறும் பயன் மதிசூடும் அண்ணலார் அடியார் தமை அமுது செய்வித்தல் கண்ணினால் அவர் நல்விழாப் பொலிவு கண்டார்தல் உண்மையாம் எனில் உலகர் முன் வருக என உரைப்பார் என கூறிய பின், பூம்பாவை உயிர்பெற்று வந்ததாக, சேக்கிழார் உரைப்பார்.

சைவ சமயம் கொண்டாடும், உண்மை பொருள்கள் என, அவர் வகைப்படுத்தும் இரண்டு தலையாய அறங்களுள், முதன்மையானதாக, அடியார்களுக்கு அன்னம் வழங்குவதையே அவர் முன்னிறுத்துகிறார். அதன் தொடர்ச்சியாகவே, இன்றும், மயிலாப்பூர் அறுபத்து மூவர் திருவிழாவில், அன்னதானம் அனைவராலும் விருப்பத்தோடும், பக்தியோடும் செய்யப்படுகிறது. தற்போது, அறுபத்து மூவர் விழா அன்று அன்னதானம் செய்வோரின் எண்ணிக்கை, அதிகரித்து கொண்டே செல்கிறது. அந்த அறத்தில் ஈடுபடும் ஒரு சில அமைப்புகள் பற்றிய விவரங்கள்:

ஸ்ரீ சிவஞான சம்பந்த சுவாமிகள் தண்ணீர் பந்தல்: கடந்த, 1860ம் ஆண்டு துவங்கப்பட்ட அமைப்பு இது. தொடர்ந்து, 157வது ஆண்டாக, அன்னதானம் செய்து வருகின்றனர். இந்த அமைப்பின், ஸ்ரீநிவாசன் கூறுகையில்,'' ஐந்தாம் நாள் சுக்கு காப்பியில் துவங்கி, அறுபத்து மூவர் விழா வரை தொடர்ந்து, காலை முதல் இரவு வரை, அன்னதானம் செய்கிறோம். நீர்மோர், பானகம், இனிப்பு, சாம்பார் சாதம், பொங்கல், புளி சாதம் ஆகியன வழங்குகிறோம். கைக்குழந்தையோடு வருவோருக்கு மட்டும், பாலாடையுடன் கூடிய பால் வழங்குகிறோம்,'' என்றார்.

வியாசர்பாடி விநாயக முதலியார் சித்திரச் சத்திரம்: கடந்த, 1852ல் இந்த சித்திரச் சத்திரத்தைக் கட்டிய வியாசர்பாடி விநாயக முதலியார், தொடர்ந்து அன்னதானமும் செய்து வந்தார். அது இன்றும் தொடர்கிறது. அறுபத்து மூவர் விழா அன்று லட்டு, சாம்பார் சாதம், பொங்கல், புளி சாதம், ரோஸ் மில்க், நீர்மோர் ஆகியவை இந்த சத்திரத்தில் வழங்கப்படுகின்றன.

மயிலை உழவாரப் பணிக்குழு: பல ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இந்த குழு, திருவிழா பத்து நாட்களிலும், கோவில் அருகே, நீர்மோர், பானகம் கொடுக்கிறது. அறுபத்து மூவர் விழா அன்று, சாம்பார் சாதம், தயிர் சாதம் வழங்குகிறது.

திருமுறை அபிஷேக குழு: கடந்த 40 ஆண்டுகளாக செயல்படும் இந்த அமைப்பின், கண்ணன் கூறுகையில்,''அறுபத்து மூவர் விழா அன்று, 25க்கும் அதிகமான அன்ன வகைகளை வழங்குகிறோம். ஒரு லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். காலை 8:00 மணி முதல் இரவு 11:00 மணி வரை தொடர்ந்து அன்னதானம் நடக்கும். கோவிலுக்கு தேவையான அபிஷேகப் பொருட்களும் கொடுத்து வருகிறோம்,'' என்றார். இந்த அமைப்புகள் தவிர, பல தனி நபர்கள், வங்கிகள், தனியார் நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள், கூட்டமைப்புகள் ஆகியவையும், அறுபத்து மூவர் திருவிழா அன்று, அன்னதான புண்ணியத்தில் ஈடுபடுகின்றனர்.

ஆருத்ரா என்றால் நடராஜர்; அதனால் சிவன் எனக்கு பிடிக்கும். குடும்பத்தோடு, மயிலாப்பூர் திருவிழாவிற்கு வருவோம். அதேபோல், நாயன்மார்களின் குருபூஜைஅன்றும், கோவிலுக்கு வருவேன். கபாலீஸ்வரர் கோவி லில் உள்ள, அறுபத்து மூவர் சிலைகள் எனக்கு பிடிக்கும்.

ஆருத்ரா, 6, தாம்பரம்

கர்நாடக சங்கீதம் கற்பதற்காகத் தான், சென்னை வந்தேன். இரண்டு மாதங்களாக சென்னையில் தான் உள்ளேன். அதிக முறை வந்தது, கபாலீஸ்வரர் கோவிலுக்கு தான். தற்போது திருவிழா நடந்து வருகிறது. திருவிழா, இன்னும் அழகாக இருக்கிறது.

கேத்ரினா, 28, ரஷ்யா
- நமது நிருபர் -

| ????????????? ???????? ??????????? | Dinamalar



மயிலை அறுபத்து மூவர்

Please open the link to read

http://isatsang.blogspot.in/2014/03/blog-post_11.html

எல்லார்க்கும் நன்றாம் பணிதல்

$
0
0

எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்

செல்வர்க்கே செல்வம் தகைத்து. குறள் 125:
பணிவுடையவராக ஒழுகுதல்பொதுவாக எல்லோர்க்கும்
நல்லதாகும்; அவர்களுள் சிறப்பாகச் செல்வர்க்கே மற்றொரு
செல்வம் போன்றதாகும் என்பது பொதுப் பொருளாகும்.


பணிதல் என்னும் குணம் பொருட்செல்வம் உள்ளவரிடத்தில்
குடிகொண்டி இருப்பதினால் மற்றவர்களுக்கு கிடைக்கப்பெறும்
பயன் நிரந்தரமானதாக இருக்காது. பொருட் செல்வம் என்பது
வந்து போகும் தன்மையுடையது. அவ்வாறே அதன் பயனும்
இருக்கும். மாறாக


செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை.
என்னும் வள்ளுவரின் வாக்கிற்கேற்ப செவிவழி செல்வத்தை
தரவல்ல கல்விச் செல்வத்தை தன்னகத்தே கொண்டவரிடத்தில்
தன்னடக்கம் நிறைந்திருந்தால், அந்தகைய பணிவின் காரணம்
அநேகர் அவரை நாடி வந்து, அவரிடம் உள்ள அருட் செல்வதை
தம் தம் செவிவழி செல்வமாக அடையப்பெற்று தாங்களும்
பயனுருவார்கள். ஆகவே
செல்வர்க்கே செல்வம் தகைத்து
என்னும் வள்ளுவரின் வாக்கிற்கேற்ப கல்விச்செல்வத்தை
தனனகத்தே கொண்டவரின் பணிவின் காரணம்,செவிவழி
செல்வமும் அவரை வந்தடையும். மேலும் இங்கு எல்லோருக்கும்
நன்றாம் பணிதல் என்று வள்ளுவர் குறிப்பிடுவது, இத்தகைய
செவிச் செல்வத்தை அடைய வேண்டுபவர்க்கும் பணிதல் என்பது
மிகவும் முக்கியம் என்னும் பொருள்படவே வள்ளுவர் இக்குறளை
நமக்கு அருளியுள்ளார்.


Sairam
Attached Images

Our Daily practices / customs

$
0
0
Most of us believe that the two halves of a broken coconut should not be joined again. What is the reason behind this practice. What are the various other similar practices / customs which most of us still follow, without knowing the reasons?

image of lord muruga

திருஷ்டிகளும் பரிகாரங்களும்!

$
0
0
திருஷ்டிகளும் பரிகாரங்களும்!




சின்ன வயதில் பாட்டியோ அம்மாவோ நமக்கு கடுகு மிளகா உப்பு போன்றவற்றை நம்மை உட்காரவைத்து சுற்றி அடுப்பில் போடுவார்கள். ஊர்கண்ணே உலை வச்சிடுச்சு! இந்த மிளகா போல எரிஞ்சி போகட்டும் என்றோ அல்லது உப்பு போல கரைந்து போகட்டும் என்றோ சொல்வார்கள்.
உண்மையில் திருஷ்டி என்பது என்ன?


த்ருஷ்டி என்பது சம்ஸ்கிருத சொல். தமிழில் கண். திருஷ்டி கழித்தலை தமிழர்கள் கண்ணேறு கழித்தல் என்று கூறுவார்கள். எல்லாருடைய பார்வையும் நல்லவையாக இருக்கும் என்று சொல்ல முடியாது. அவர்கள் எண்ணம் தீயதாக கூட இருக்கலாம் அல்லவா? அந்த தீயதை போக்கும் விதமாக பல்வேறு திருஷ்டி கழிக்கும் பழக்கங்கள் உள்ளது.

அதில் சிலவற்றினை இப்போது பார்ப்போம். இதனை எழுத எனக்கு பழைய குமுதம் பக்தி இதழ் உதவியது. அதிலிருந்து என்பாணியில் சில திருஷ்டி கழித்தலை தொகுத்து தந்துள்ளேன்.

குழந்தைகளும் திருஷ்டியும்.


தாய் பத்து மாதம் சுமந்து பல்வேறு தியாகங்களை செய்து பிள்ளை பெறுகிறாள். அந்த பிள்ளை அழகாய் இருந்து விட்டாலோ எல்லோரும் அதை தூக்கி வைத்து கொண்டாடுவர். அத்தகைய பிள்ளைக்கு திருஷ்டி ஏற்படாமலா போகும். அதற்கு ஏற்படும் திருஷ்டிகளை போக்கும் முறைகளை பார்ப்போம்.

திருஷ்டி பொட்டு.

பிறக்கும் குழந்தை எல்லாம் அழகுதான். அழகோ அழகுன்னு எல்லாரும் கொஞ்சறப்போ ஏற்படுற திருஷ்டிக்கு பரிகாரம் தான் கருப்பு திருஷ்டி பொட்டு. எளிமையான இது எல்லோராலும் செய்யக்கூடிய ஒன்று.நெற்றியிலும் கன்னத்திலும் இடப்படும் மைப்பொட்டு குழந்தையின் திருஷ்டியை போக்கும். கோயில்கள்ல தருகின்ற ஹோம ரட்சையை வைத்தால் இன்னும் கூடுதல் பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை!.


குழந்தை பிறந்த பிறகு தலைக்கு ஊற்றும் நாட்களில் அல்லது மாலை வெளைகளில் சிறிதளவு ஆரத்தி கரைத்து அதில் குழந்தை கையில் உள்ள கறுப்புவளையலை கழற்றி போட்டு சுற்றிப்போடுதல் மரபு. இப்படி சுத்திப்போடுவதால் வளைய வரும் திருஷ்டிகள் வளையலோடு போய்விடுமாம்.


சரியாக சாப்பிடாம அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு திருஷ்டி சுத்திப்போடறது எப்படி?

இப்படிசாப்பிடாம அடம் பிடிக்கிறதுக்கு கண்திருஷ்டி கூட காரணமா இருக்கும்னு சொல்லுவாங்க! ஒருகைப்பிடி உப்பை எடுத்து கையை நல்லா மூடிகிட்டு தாய் மடியில குழந்தையை இருத்தி இடமிருந்து வலமா மூணுதடவையும் வலமிருந்து இடமா மூணு தடவையும்சுத்தி அப்படியே குழந்தையின் அம்மாவுக்கும் சுத்தி அந்த உப்பை தண்ணியில போட்டுடுங்க. தண்ணியில உப்பு கரையரா மாதிரி திருஷ்டி எல்லாம் கரைஞ்சி குழந்தை சாப்பிட ஆரம்பிக்கும்.


கொஞ்சம் பெரிதான குழந்தைங்களா இருந்தா கொஞ்சமா சாதம் வடிச்சி சிகப்பு மஞ்சள் வெள்ளை கலர்கள்ல அஞ்சு உருண்டைகள்செஞ்சி ஞாயிற்று கிழமைகள்ல மதியம் 12 மணிக்கு இதே மாதிரி சுத்தி வெவ்வேறு திசைகளில் எறிந்து விடலாம். அப்புறம் குழந்தையோட கை கால்களை கழுவிட்டு நாமும் கழுவிகிட்டு உள்ள வரலாம். இந்த பரிகாரம் திருஷ்டி எந்த திசையில் இருந்தாலும் விலகிப் போகசெய்யும்.


குழந்தைங்களுக்கு சோறூஊட்டிய பின் தட்டில் மிச்சமிருக்கும் சாப்பாட்டில் குழந்தையை கைகழுவ வைத்து அதை சுற்றி போடலாம். சாப்பிட போகும் முன் ஒரு உருண்டை சாதம் தட்டில் ஓரமாக எடுத்து வைத்து அந்த உணவை காகத்திற்கு போட செய்யுங்கள். இதுவும் ஒரு பரிகாரமே.

குழந்தை எதையாவது பார்த்து பயந்து திருஷ்டி பட்டு அதனால் சாப்பிடாமல் மெலிந்து போகும் அப்போது சிறிய குழந்தையாக இருந்தால் பூந்துடைப்ப குச்சியை கொளுத்தி திருஷ்டி சுத்தி போடுதல் பழக்கம். குழந்தையை தாயின்மடியில் அமரவைத்து பூந்துடைப்ப குச்சிகள் எட்டினைஎடுத்து பெருக்கும் பகுதி உள்ள முனைகளை பிடித்துக்கொண்டு மறுமுனையால் குழந்தையின் தலையை இடமிருந்து வலமாகவும் வலமிருந்து இடமாகவும் மூன்று முறை சுற்றி பிறகு தலையில் இருந்து பாதம் வரை தொடுவது போல் தடவி வீட்டின் தென்கிழக்கு மூலையில் சாய்த்து வைத்து கொளுத்துங்கள் பட்பட்டென்று சத்தத்துடன் குச்சிகள் எரிந்து சாம்பலாக திருஷ்டியும் சாம்பலாகும்.
இதே ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளாக இருந்தால் சில பொருட்களை சேகரம் செய்து கொண்டு பரிகாரம் செய்யலாம்.

புதிய சட்டி ஒன்று, ஊமத்தங்காய், படிகாரம் தெருமண் , இவைகளை சேகரித்துக் கொண்டு பயந்த பிள்ளையை தெருவாசலில்கிழக்கு முகமாக நிறுத்தி மண்சட்டிக்குள் ஊமத்தங்காய், படிகாரம், தெருமண் இவை மூன்றையும் போட்டு மண்சட்டியை பயந்த பிள்ளையின் தலைக்கு இடமிருந்து வலமாகவும் வலமிருந்து இடமாகவும் மூன்று முறை சுற்றி தலை முதல் பாதம் வரை இறக்கி அப்படியே எடுத்துச் சென்று முச்சந்திகள் கூடும் இடத்தில் போட்டு உடையுங்கள். கையோடு ஒரு துடைப்பம் எடுத்துச் சென்று ஓரமாக பெருக்கித் தள்ளுங்கள். இதனால் யாருக்கும் பாதிப்பு ஏற்படாமல் போகும். பின்னர் வீடு திரும்பி கைகால் கழுவி தலையில் சிறிது தண்ணீர் தெளித்துக் கொண்டு வீட்டிற்குள் நுழையவும் . பிள்ளையையும் அவ்வாறே செய்ய செய்து உள்ளே அழைத்துச் செல்லவும்.

கீழே விழுந்து அடிபட்டுக் கொண்டால் குழந்தை கீழே விழும் சமயம் நீங்கள் அங்கிருந்தால் கீழேகிடக்கும் செங்கள் துண்டு அல்லது மண்ணாங்கட்டியால் குழந்தையின் தலையை மும்முறை சுற்றி தூக்கி போட்டு உடைத்து திருஷ்டி கழிக்கலாம்.


திடீரென வரும் காய்ச்சல் திருஷ்டியால இருக்குமோ என்றால் குழந்தையை கரித்துண்டுகள் மீது நிற்க சொல்லி குழந்தையின் பாட்டி அம்மா சித்தி போன்ற பெண்மணிகள் மிளகாய் 7 சிறியதுண்டு படிகாரம் கொஞ்சம் உப்பு இவற்றை ஒரு அலுமினிய பாத்திரத்தில் போட்டு திருஷ்டி சுற்றவும். பின்னர் குழந்தையை நகரச் சொல்லி அந்தகரித்துண்டுகளையும் எடுத்து பாத்திரத்தில் போட்டுக் கொள்ளவும்வீட்டின் பின்புறம் கொட்டான்குச்சி அல்லது கரித்துண்டுகளை பற்ற வைத்து அதில் இந்த பொருட்களை போட்டு விடவும். பின்னர் பாத்திரத்தை கழுவி நீங்களும் கை கால் கழுவிக் கொண்டு உள்ளே வரவும்.

மாதம் ஒருமுறை மூன்று கண் கொட்டாங்கச்சி எடுத்து அதை அடுப்பில் பற்றவைத்து ஒரு தட்டில் வைத்து சுற்றி தெருவில் ஓரமாக போடலாம்.


படிகார கட்டியை கையில் எடுத்து சுற்றி அடுப்பு நெருப்பில் போட அது உப்பி வரும். அதை தெருவில் போட திருஷ்டி கழியும்.

இதைவிட எளிதான ஒரு முறை கற்பூரத்தை ஒரு தட்டில் ஏற்றி குழந்தைக்கு சுற்றி வாசலில் ஓரமாக போடுதல் இதனால் கற்பூரம் கரைவது போல திருஷ்டி கழியும் என்பது நம்பிக்கை.


இன்னும் சில வீடுகளில் கடுகுமிளகாய், உப்பு சிறிது தெருமண், தலைமுடி இவற்றி னை கையில் எடுத்துக் கொண்டு குழந்தையை உட்காரவைத்து ஊருகண்ணு, உறவு கண்ணு, நாய் கண்ணு, நரிக் கண்ணு, நோய்கண்ணு, நொள்ள கண்ணு கண்டக்கண்ணு, கள்ளக் கண்ணு, அந்த கண்ணு, இந்த கண்ணு எல்லாம் கண்ணும் கண்டபடி தொலையட்டும் கடுகு போல வெடிக்கட்டும் என்று இடமிருந்துவலமாகவும் வலமிருந்து இடமாகவும் சுற்றி அடுப்பில்போடுவார்கள்.
இதுவும் ஒரு எளிமையான திருஷ்டி பரிகாரமே!


** பொதுவான திருஷ்டிகளும் அதற்கான பரிகாரங்களையும் கூறப்போகிறேன். நம்பிக்கை உள்ளோர் தொடருங்கள்!


கல்லடி பட்டாலும் படலாம்! கண்ணடி படக்கூடாது! என்பர். அந்த கண்ணடிதான் திருஷ்டி எனப்படுகிறது. மற்றவர் நம்மை பார்க்கும் பார்வையில் ஒரு தீய தாக்கம் ஏற்பட்டு அதனால் பாதிப்பு ஏற்பட்டால் திருஷ்டி பட்டுடிச்சி என்பர். கண்ணேறு என்பது திருஷ்டியின் தூய தமிழ் பெயர்.பிறரோட பார்வை மட்டும் அல்ல நம்மோட பார்வையே கூட சில சமயம் பாதிப்புக்களை ஏற்படுத்தலாம்.


நல்ல வளப்பமாக ஆரோக்கியமாக வாழும் ஒருவர் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு இளைத்துப் போகலாம். எப்படி இருந்த மனுசன் இப்படி ஆயிட்டாரே என்று பேசிக்கொள்வார்கள். உடல் ஆரோக்கியம் குன்றிய அவருக்கு எப்படி திருஷ்டி சுற்றுவது? மூன்று தெருக்கள் கூடுமிடத்திலிருந்து சிறிது மண் எடுத்துக் கொள்ளுங்கள் ஒன்பது காய்ந்தமிளகாய் ஒருபிடி உப்பு, கொஞ்சம் கடுகு ஆகியவற்றையும் எடுத்துக் கொண்டு ஒரு கொட்டாங்குச்சி அல்லது இரும்பு பாத்திரத்தில் போட்டுக்கொண்டு முச்சந்தி மண்ணையும் அதனோடு போட்டு உடல் நலம் குன்றியவரை கிழக்குப்பார்த்து அமரச் செய்து இடமிருந்து வலமாக மூன்றுமுறையும் வலமிருந்து இடமாக மூன்றுமுறையும் சுற்றி கண்பட்ட திருஷ்டிகள் கடுகுபோல வெடிக்கட்டும் என்று சொல்லியவாறு சுற்றி கடவுளை வேண்டி கரி அடுப்பு பற்றவைத்து அந்த தணலில் போடுங்கள். பிறகு கால்களை கழுவிக் கொண்டு விபூதி பூசிக் கொண்டு உடல் நலம் பாதிக்கப்பட்டவருக்கும் பூசி விடுங்கள். விரைவில் குணமடைவார்.


பொறாமையினால் வரும் திருஷ்டி!

உங்களுடைய உழைப்புக்கும் திறமைக்கும் கிடைத்த புகழினால் கூட திருஷ்டி உண்டாகும். பரபரப்பாக செயல்பட்ட நீங்கள் சட்டென மந்தமாக செயல்பட நேரிடும் திடீர் மந்தம் இந்த திருஷ்டியினால்தான் ஏற்படும். இதற்கு பரிகாரம் படிகாரம் சுற்றிப்போடுவதுதான். கடையில் பெரிய படிகாரக் கட்டி ஒன்றை வாங்கிக் கொள்ளுங்கள். திருஷ்டிக்கு ஆளானவரை கிழக்கு நோக்கி உட்காரவைத்து படிகார கட்டி ஒன்றினால் இடமிருந்து வலம், வலமிருந்து இடம் மூம்மூன்று முறை சுற்றி தலையில் இருந்து பாதம் வரை மேலிருந்து கீழாக இறக்கி வீட்டின் பின்புறம் தணல் பற்றவைத்து அதில் படிகாரத்தை போட்டுவிடுங்கள். மறுநாள் அந்த படிகாரக் கட்டி பூத்திருக்கும் அதை முச்சந்தியில் போட்டுவிட்டு திரும்பி பாராமல் வீட்டுக்கு வந்து கைகால் கழுவி கடவுளை வேண்டி விபூதி பூசிக் கொள்ளுங்கள்.
படிகாரத்தை நீரிலும் போடலாம். அப்படி செய்தால் அதனை பிறர் கால் படாத இடத்தில் ஊற்றவும்.

உங்கள் வியாபாரத்தலம் அல்லது அலுவலகத்தில்!

முறையாக திட்டம் தீட்டியும் அலுவலகம் அல்லது தொழிலிடத்தில் இறங்குமுகமா? அந்த திருஷ்டிக்கு பரிகாரம் இதுதான். வளர்பிறை சனிக்கிழமை அல்லதுஞாயிற்றுகிழமையில் கடற்கரைக்கு சென்று பெரிய கேன் அல்லது பாட்டிலில் கடல் நீரை எடுத்துக் கொள்ளுங்கள் அதை துணியில் வடிகட்டி வடிகட்டிய நீரை எடுத்துச் சென்று உங்கள் அலுவலகம், தொழிலிடத்தில் குறிப்பாக உங்கள் அறையில் தெளியுங்கள் முடிந்தால் கழுவியும் விடலாம். இதில் முக்கியமான விசயம் இதை பிறரைக் கொண்டு செய்யக் கூடாது. பாதிக்கப்பட்டவரே செய்ய வேண்டும். இவ்வாறு மாதம் ஒரு முறை செய்து பாருங்கள் திருஷ்டி விலகி தொழில் சிறப்பாக வளரும்.


வந்த திருஷ்டிக்கு பரிகாரம் பார்த்தோம்! இனி திருஷ்டி வராம இருக்க பரிகாரம்.

சிறப்பாக வியாபாரம் நடக்க பரிகாரம்! உங்களுடைய வியாபாரத் தலம் அல்லது அலுவலகத்தில் கறுப்பு கம்பளிக் கயிற்றில் படிகாரத்துடன் ஊமத்தங்காய், அல்லது தும்மட்டிக்காய் சேர்த்துக் கட்டி அத்துடன் ஏழு மிளகாய்களை கோர்த்து கடைசியாக சிறிய படிகாரத்தையும் சேர்த்துக் கட்டி வாசலில் தொங்கவிடுங்கள். இந்த படிகாரம் கொஞ்சம் கரைந்ததும் அல்லது நாளானதும் மீண்டும் புதியதாய் கட்டுங்கள். இதில் முக்கிய விசயம் கடையை திறந்ததும் இரண்டு ஊதுபத்தி ஏற்றி கடவுளை வணங்கவும். மூடும் போது வாசலில் கற்பூரம் ஏற்றவும். அப்புறம் உங்க வியாபாரம் செழிக்கும்.
மாதா மாதம் கழிக்கும் திருஷ்டி!

அமாவாசையன்னிக்கு திருஷ்டி கழிக்கறேன் பேர்வழின்னு தேங்காயையும் பூசணிக்காயையும் உடைச்சு நடு ரோட்டுல போடறீங்க! அதுமுறையா செய்யக்கூடிய ஒன்று! எப்படின்னு கேட்டுக்கங்க!

அமாவாசையன்னிக்கு தேங்காய் உடைக்கிறவங்க அன்னைக்கு காலையிலேயே தேங்காயை எடுத்து சாமி படத்துகிட்டே வைச்சிடனும் மஞ்சள் தூளை தண்ணியிலே கரைச்சி அதை தேங்காய் பக்கத்துல வைச்சிடுங்க தேங்காயை உடைக்கிறதுக்கு முன்னாடி அதை கையில் எடுத்துகிட்டு மனசார கடவுளை வேண்டி திருஷ்டி போகணும்னு வேண்டிகிட்டு அதை உடைக்கிறவர் கிட்ட தேங்காயையும் மஞ்சள் தண்ணீரையும் கொடுத்திடுங்க தேங்காயில் கற்பூரம் ஏற்றி சுற்றி வாசல்ல ஒரு ஓரமா உடையுங்க. உடைபடற தேங்காய் மத்தவங்க எடுத்து உபயோகப்படுத்தனும். குறைந்தபட்சம் ஈ எறும்பாவது சாப்பிடனும். அதுதான் நல்லது. தேங்காயை உடைச்சதும் மஞ்சள் தண்ணீரை கொஞ்சம் தலையிலயும் உடம்புலயும் தெளிச்சிகிட்டு சுத்தி போட்டவறை உள்ளே வரச் சொல்லுங்க. உள்ளே வந்ததும் தண்ணீர் ஒரு டம்ளர் குடிக்க கொடுங்க! இப்படி ஒவ்வொரு அமாவாசையும் செய்யுங்க வாணிபம் வளர்பிறையா வளரும்.


பூசணிக்காய் உடைப்பது என்றாலும் முதலில் சாமி படத்தில் வைத்து வேண்டிக் கொள்ளவும். மஞ்சள் கரைத்த தண்ணீரையும் உடன் வைக்கவும். உடைப்பதற்கு அரை மணி நேரம் முன்னதாக பூசணிக்காயை ஒரு இடத்தில் துளையிட்டு அந்த இடத்தில் மஞ்சள் குங்குமம் போட்டு சில சில்லறைகளையும் போடுங்கள். பூசணிக்காயை உடைக்க போகும் நபர் வலதுகையில் கறுப்பு கயிறு ஒன்றை கட்டிவரச் சொல்லி பூசணிக்காயை நீங்கள் கையில் எடுத்து கடவுளை நினைத்து மனசார திருஷ்டி கழிய வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள். பின்னர் சுற்றுபவரிடம் கொடுத்து சுற்றி கடை வாசலில் ஓரமாக உடைக்கச் சொல்லுங்கள். பின்னர் மஞ்சள் தண்ணீரை தெளித்துக் கொண்டு அவரை உள்ளே வரச்சொல்லுங்கள்.கை கால் கழுவிகொண்டு வந்ததும் குடிக்க தண்ணீர் கொடுத்து அமரச் செய்யுங்கள்.

உடைத்த பூசணிக்காய் சிதறலாமே தவிர நசுங்க கூடாது! அதனால்தான் அதற்குள் காசுகளை போடும் பழக்கம் வந்தது. காசுகளை எடுப்பவர்கள் அதை எடுத்துக் கொண்டு குப்பையில் போட்டுவிடுவார்கள். மேலும் அவர்களுக்கு எந்த பாதிப்பும் வரக் கூடாது என்பதற்காக மஞ்சள் குங்குமம் அதில் போடப்பட்டது. ஓரமாக உடைத்த பூசணிக்காய்களை குப்பையில் அள்ளி போடச்சொல்லுங்கள். பூசணிக்காய்க்கு திருஷ்டிகள் அனைத்தையும் ஈர்த்துக் கொள்ளும் ஆற்றல் உண்டு அதனை சுற்றுபவர் திருஷ்டிகளை அதனுள் ஈர்த்து போய் சிதறச் செய்கிறார். எனவே அவருக்கு தட்சணை கொடுங்கள். சுற்றும் நபர் வெளி நபராக இருப்பின் முதலிலேயே தட்சணை கொடுத்துவிட வேண்டும். அவர் மஞ்சள் நீரை தெளித்து கொண்டு அப்படியே சென்று விட வேண்டும் உங்கள் ஊழியராய் இருந்தால் மஞ்சள் நீர் தெளித்துக் கொண்டு கால் கழுவிக் கொண்டு உள்ளே வரலாம்.



எளிமையான எலுமிச்சம் பழ திருஷ்டி கழித்தல்!

கடையை திறந்ததும் கடவுளை கும்பிட்டு ஒரு எலுமிச்சம் பழத்தினை இரண்டாக வெட்டி அதில் குங்குமம் தடவி வருவோர் கண்பார்வை படும் படி வைக்கவும் கடை மூடும் சமயம் அதை எடுத்து தலையைச் சுற்றி அதைஇடம் வலமாக மாற்றி எறியுங்கள். அல்லது கடையை மூடும் போது ஒரு எலுமிச்சம் பழத்தில் கற்பூரம் வைத்து உங்களுக்கும் கடைக்கும் சேர்த்து சுற்றி அதை நசுக்கி இட வலமாக மாற்றி எறியுங்கள். எலுமிச்சம் பழம் தீய சக்திகளை திருஷ்டியின் பாதிப்புக்களை நெருங்கவிடாமல் செய்யும். எளிமையானதும் கூட.

Baskar Jayaraman
Smnksree

Celebration of wedding anniversaries

$
0
0
Generally wedding anniversaries are celebrated as per the date in that particular month like 25th May; Instead, Is it more appropriate and proper to celebrate this marriage anniversary also as per the Nakshathram & thithi it performed in the Tamil month like we celebrate the Janma nakshathram for Birthday.

குல தெய்வம்

$
0
0
குலதெய்வ வழிபாடு

ஒவ்வொரு குடும்பத்தினரும் ஒவ்வொரு தெய்வத்தை தமது குல தெய்வமாக ஏற்றுக் கொண்டு இருப்பார்கள். அதாவது நம்முடைய ஐம்பது தலைமுறைக்கு முன்னர் இருந்த நம்முடைய தாத்தாவுக்குத் தாத்தா என நீண்டு கொண்டு போகும் பெரும் பெரும் பெரிய தாத்தா (இருபது தலைமுறையின் தாத்தா) வணங்கி வழிபாட்டு வந்திருந்த தெய்வத்தையே அவர் வழி வருபவர்கள் குல தெய்வமாக ஏற்றுக் கொண்டு உள்ளார்கள்.


அவர் குடும்பத்தில் பிறக்கும் ஆண் மகன்கள் மூலம் பெருகும் ஆண் வழி குடும்பத்தினர் அனைவருமே அதே தெய்வத்தைத்தான் வணங்கி வருவார்கள். எந்த ஒரு குடும்பத்தில் ஆண் மகனே இல்லையோ அதோடு அந்த குடும்பத்தின் வம்சம் பெருகுவது இல்லை என்பதினால் குலதெய்வம் முடிந்து விடும் என்பார்கள். ஏன் என்றால் பெண்கள் புகுந்த வீட்டுக்குச் சென்றதும் அவர்கள் அந்தக் குடும்பத்தின் குல தெய்வத்தையே ஏற்க வேண்டும்.

ஒரு தெய்வம் என்பது இன்னொரு தெய்வத்திடம் இருந்து அதாவது பரமாத்மனிடம் இருந்து வந்ததுதான். அதாவது உலகெங்கும் பல்வேறு ரூபங்களில் பல்வேறு தரப்பினர் வணங்கும் தெய்வங்கள் அனைத்துமே பரமாத்மனிடம் இருந்து வந்தவையே ஆகும்.

ஒரு வம்சம் என்பது எத்தனை ஆண்டுகள் அல்லது எத்தனை குடும்பத்தினர்வரை பொருந்தும்? ஒருவருக்கு பிறந்த மகன், அவனுக்குப் பிறந்த மகன், அவனுக்குப் பிறந்த மகன் என ஆண் குழந்தை மட்டுமே ஒரு வம்ச கணக்கில் வரும். ஒருவருடைய சராசரி வயது 50 என்றால் கூட அவருடைய தாத்தாவின், தாத்தாவின் பெரும் தாத்தாவின் காலம் என 13 ஜென்மங்களுக்கு முந்தய காலம் எனக் கணக்கிட்டால் கூட 13 x 50 = 650 ஆண்டுகள் என வரும். நம்மில் யாருக்காவது 650 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த சந்ததியினர் யார் என்பது தெரியுமா? யாருக்காவது அவர்களுடைய குடும்பத்தில் 13 ஆம் வம்சத்தின் பெரிய தாத்தா யார் என்பது தெரியுமா? இதையெல்லாம் யார் குறித்து வைத்துக் கொண்டு வருகிறார்கள்? அதனால்தான் ஒரு குல தெய்வம் ஏழேழு ஜென்மம் அதாவது 49 ஜென்மங்களுக்கு அதாவது 13 ஜென்ம காலத்துக்கு ஒரு வம்சத்தைக் காப்பாற்றும் என்ற வார்த்தை வந்தது. மகள் என்பவள் திருமணம் ஆனதும் புகுந்த வீட்டிற்குச் சென்று விடுவதினால் அவளுக்கு தாய்-தந்தையின் குல தெய்வத்தை தனது குல தெய்வமாக ஏற்க பாத்யதை இல்லை. அவள் புகுந்த வீட்டின் குலதெய்வமே அவள் குல தெய்வம் ஆகி விடும்.

எந்த ஒரு வம்சத்திலுமே 13 வம்சாவளியினருக்கு மேல் அவர்கள் தொடர்ந்து வணங்கும் குல தெய்வம் இருக்க முடியாது என்பது தெய்வக் கணக்கு. ஏதாவது ஒரு கட்டத்தில் வழி வழியாக வந்தவர்களின் வம்சத்தினருக்கு குழந்தைப் பேறு இல்லாமலோ, அகால மரணங்களினாலோ, ஆண் வம்ச விருத்தி அடையாமலோ அல்லது ஏதாவது காரணத்தினால் வம்சம் அழிந்து விடும். ஆகவே ஒரு வம்சத்தின் குல தெய்வம் என்பது 13 ஜென்மத்துக்கு - வம்சாவளிகளுக்கு மட்டுமே தொடர்ந்து கொண்டு இருக்கும் என்று கூறுகிறார்கள்.





ஒருமுறை ஒரு தேவதையோ அல்லது தெய்வமோ ஒரு வம்சத்தினரை தத்து எடுத்துக் கொண்டு விட்டால் அதன்பின் அந்த வம்சத்தின் ஏழேழு தலை முறைக்கும் அவர்களே பாதுகாப்பாக இருந்தவாறு அந்த வம்சத்தினரின் குல தெய்வமாக பொறுப்பேற்றுக் கொள்வார்கள். அந்த வம்சத்தினரின் வீடுகளில் நடைபெறும் நல்லவை மற்றும் கெட்டவை என்ற அனைத்து அம்சங்களிலும் சடங்குகளுக்கும் அந்தந்த தேவதைகளும் தெய்வங்களும் மட்டுமே பொறுப்பு ஏற்பார்கள்.

குல தெய்வங்களுக்கு சில குறிப்பிட்ட காரியங்கள் தரப்பட்டு உள்ளன. அவற்றை செய்தப் பின் அவர்கள் தாம் செய்ததையும், அவற்றுக்கான காரணங்களையும், முறையான வழிப்பாதை மூலம் அவரவர்களைப் படைத்தவர்கள் மூலம் பரப்பிரும்மனிடம் அனுப்பும். அங்குதான் ஒரு கம்பியூட்டர் போல அனைவரது கணக்குகளும் வைக்கப்பட்டு அடுத்தப் பிறவி நிர்ணயிக்கப்படுகின்றது. ஆகவே குலதெய்வ வழிபாடு என்பதும் இந்த பிரபஞ்சத்தையே படைத்த பரபிரும்ம வழிபாடே.

Santhipriya's pages: March 2014
Viewing all 5709 articles
Browse latest View live