16. பசு, பதி, பாசம்
பதி, பசு, பாசம் இவற்றின் தொடர்பு.
பதி = இறைவன் = சிவன்
பசு = உயிர் = சீவன்
பாசம் = தளை = பந்தம்
#2405 to #2409
#2405. பதி பசுவில் பதியில் பிறப்பறும்
அறிவுஅறிவு என்ற அறிவும் அனாதி
அறிவுக்கு அறிவாம் பதியும் அனாதி
அறிவினைக் கட்டிய பாசம் அனாதி
அறிவு பதியில் பிறப்பறுந் தானே
அறிவு என்று கூறப்படும் ஆன்மா (பசு) மிகவும் பழமையானது.
ஆன்மாவின் தலைவன் ஆன சிவன் (பதி) மிகவும் பழமை ஆனவன்.
ஆன்மவைப் பிணித்துள்ள பாசம் (தளைகள்) மிகவும் பழமையானவை.
பதி பசுவிடம் விளங்குமானால் பாசம் அகன்று விடும். பிறவிப் பிணி தொலைந்து விடும்.
#2406. பசுக்கள் தலைவனைப் பற்றி விடாவே.
பசுப்பல கோடி பிரமன் முதலாய்ப்
பசுக்களைக் கட்டிய பாசம்மூன் றுண்டு
பசுத்தன்மை நீக்கிஅப் பாசம் அறுத்தால்
பசுக்கள் தலைவனைப் பற்றி விடாவே.
பிரம்மன் முதலான பசுக்கள் பல கோடி உண்டு. அந்தப் பசுக்களைக் கட்டியுள்ள பாசங்கள் ஆணவம், கன்மம், மாயை என்ற மூன்று. பாசத்தை அறுத்து விட்டுப் பசுத் தன்மையை நீக்கினால் அந்தப் பசுக்கள் பதியாகிய தலைவனைப் விடாமல் பற்றி நிற்கும்.
தெய்வங்களும் அவர்களின் மலங்களும்
சதாசிவன் ..ஆணவம் மட்டும்
மகேசுரன் .ஆணவம் + திரோதாயீ
உருத்திரன் ..ஆணவம் + திரோதாயீ + கன்மம்
திருமால் .ஆணவம் + திரோதாயீ + கன்மம் + மாயை
நான்முகன் .ஆணவம் + திரோதாயீ + கன்மம்+ மாயை + மாயேயம்.
#2407. குன்றில் இட்ட விளக்கது வாமே.
கிடக்கின்ற வாறே கிளர்பயன் மூன்று
நடக்கின்ற ஞானத்தை நாடோ றும் நோக்கித்
தொடக்குஒன்றும் இன்றித் தொழுமின் தொழுதால்
குடக்குன்றில் இட்ட விளக்கது வாமே.
பாசத்தால் கட்டுண்டபோதும் பசுக்கள் காமியத்தோடு செய்யும் சரியை, கிரியை யோகம் என்பவற்றால் அவைகள் சாலோகம், சாமீபம், சாரூபம் என்ற மூன்று விதப் பயன்களை அடைய முடியும். இவற்றின் முடிவாகிய ஞானம் பெறுவதற்கு நாள் தோறும் பற்று இல்லாமல் தியானம் செய்யுங்கள். அப்போது குடத்தில் உள்ள விளக்கை எடுத்துக் குன்றின் மேல் வைத்தது போன்ற சிறந்த ஞானத்தை அடைவீர்கள்.
#2408. வாசம் செய் பாசத்துள் சிக்குண்ட சீவன்
பாசம்செய் தானைப் படர்சடை நந்தியை
நேசம்செய்து ஆங்கே நினைப்பர் நினைத்தாலும்
கூசம் செய்து உன்னிக் குறிக்கொள்வது எவ்வண்ணம்
வாசம்செய் பாசத்துள் வைக்கின்ற வாறே
விரிசடையுடைய சிவன் என்னும் தலைவனே சீவனுடன் பாசத்தைப் பொருந்தி உள்ளவன். ஞானியர் அவனிடம் நேசம் கொண்டு அவனையே எப்போதும் சிந்தையில் எண்ணுவர். அங்ஙனம் நினைத்துத் தியானத்தில் மூழ்குபவர் மீண்டும் எங்கனம் பாசத்தை எண்ணிப் பார்க்க முடியும்?பண்டு தொட்டு சீவனை வாசனையாகத் தொடர்ந்து வந்துள்ள பாசத்தில் சீவனை மீண்டும் விடுவது எங்கனம்?
#2409. நனவில் அதீதத்துள் தோன்றுமே.
விட்ட விடம்ஏறா வாறுபோல் வேறாகி
விட்ட பசுபாசம் மெய்கண்டோ ன் மேவுறான்
சுட்டிய கேவலம் காணும் சகலத்தைச்
சுட்டு நனவில் அதீதத்துள் தோன்றுமே.
மந்திரத்தால் நீக்கப் பட்ட விடம் கடிபட்டவனின் உடலில் மீண்டும் ஏறாது. அது போன்றே மெய்யறிவு பெற்றுப் பசுத் தன்மையையும் பாசத் தன்மையையும் நீக்கிவிட்ட ஒருவன் மீண்டும் அவற்றோடு பொருந்த மாட்டான். கேவல அவத்தையிலும், சகல அவத்தையிலும் தன்னைப் பிணித்திருந்த பாசத் தளைகளை அவன் சுட்டெரிடத்து விட்டு விழிப்பு நிலையின் துரியாதீதத்தை அடைவான்.
பதி, பசு, பாசம் இவற்றின் தொடர்பு.
பதி = இறைவன் = சிவன்
பசு = உயிர் = சீவன்
பாசம் = தளை = பந்தம்
#2405 to #2409
#2405. பதி பசுவில் பதியில் பிறப்பறும்
அறிவுஅறிவு என்ற அறிவும் அனாதி
அறிவுக்கு அறிவாம் பதியும் அனாதி
அறிவினைக் கட்டிய பாசம் அனாதி
அறிவு பதியில் பிறப்பறுந் தானே
அறிவு என்று கூறப்படும் ஆன்மா (பசு) மிகவும் பழமையானது.
ஆன்மாவின் தலைவன் ஆன சிவன் (பதி) மிகவும் பழமை ஆனவன்.
ஆன்மவைப் பிணித்துள்ள பாசம் (தளைகள்) மிகவும் பழமையானவை.
பதி பசுவிடம் விளங்குமானால் பாசம் அகன்று விடும். பிறவிப் பிணி தொலைந்து விடும்.
#2406. பசுக்கள் தலைவனைப் பற்றி விடாவே.
பசுப்பல கோடி பிரமன் முதலாய்ப்
பசுக்களைக் கட்டிய பாசம்மூன் றுண்டு
பசுத்தன்மை நீக்கிஅப் பாசம் அறுத்தால்
பசுக்கள் தலைவனைப் பற்றி விடாவே.
பிரம்மன் முதலான பசுக்கள் பல கோடி உண்டு. அந்தப் பசுக்களைக் கட்டியுள்ள பாசங்கள் ஆணவம், கன்மம், மாயை என்ற மூன்று. பாசத்தை அறுத்து விட்டுப் பசுத் தன்மையை நீக்கினால் அந்தப் பசுக்கள் பதியாகிய தலைவனைப் விடாமல் பற்றி நிற்கும்.
தெய்வங்களும் அவர்களின் மலங்களும்
சதாசிவன் ..ஆணவம் மட்டும்
மகேசுரன் .ஆணவம் + திரோதாயீ
உருத்திரன் ..ஆணவம் + திரோதாயீ + கன்மம்
திருமால் .ஆணவம் + திரோதாயீ + கன்மம் + மாயை
நான்முகன் .ஆணவம் + திரோதாயீ + கன்மம்+ மாயை + மாயேயம்.
#2407. குன்றில் இட்ட விளக்கது வாமே.
கிடக்கின்ற வாறே கிளர்பயன் மூன்று
நடக்கின்ற ஞானத்தை நாடோ றும் நோக்கித்
தொடக்குஒன்றும் இன்றித் தொழுமின் தொழுதால்
குடக்குன்றில் இட்ட விளக்கது வாமே.
பாசத்தால் கட்டுண்டபோதும் பசுக்கள் காமியத்தோடு செய்யும் சரியை, கிரியை யோகம் என்பவற்றால் அவைகள் சாலோகம், சாமீபம், சாரூபம் என்ற மூன்று விதப் பயன்களை அடைய முடியும். இவற்றின் முடிவாகிய ஞானம் பெறுவதற்கு நாள் தோறும் பற்று இல்லாமல் தியானம் செய்யுங்கள். அப்போது குடத்தில் உள்ள விளக்கை எடுத்துக் குன்றின் மேல் வைத்தது போன்ற சிறந்த ஞானத்தை அடைவீர்கள்.
#2408. வாசம் செய் பாசத்துள் சிக்குண்ட சீவன்
பாசம்செய் தானைப் படர்சடை நந்தியை
நேசம்செய்து ஆங்கே நினைப்பர் நினைத்தாலும்
கூசம் செய்து உன்னிக் குறிக்கொள்வது எவ்வண்ணம்
வாசம்செய் பாசத்துள் வைக்கின்ற வாறே
விரிசடையுடைய சிவன் என்னும் தலைவனே சீவனுடன் பாசத்தைப் பொருந்தி உள்ளவன். ஞானியர் அவனிடம் நேசம் கொண்டு அவனையே எப்போதும் சிந்தையில் எண்ணுவர். அங்ஙனம் நினைத்துத் தியானத்தில் மூழ்குபவர் மீண்டும் எங்கனம் பாசத்தை எண்ணிப் பார்க்க முடியும்?பண்டு தொட்டு சீவனை வாசனையாகத் தொடர்ந்து வந்துள்ள பாசத்தில் சீவனை மீண்டும் விடுவது எங்கனம்?
#2409. நனவில் அதீதத்துள் தோன்றுமே.
விட்ட விடம்ஏறா வாறுபோல் வேறாகி
விட்ட பசுபாசம் மெய்கண்டோ ன் மேவுறான்
சுட்டிய கேவலம் காணும் சகலத்தைச்
சுட்டு நனவில் அதீதத்துள் தோன்றுமே.
மந்திரத்தால் நீக்கப் பட்ட விடம் கடிபட்டவனின் உடலில் மீண்டும் ஏறாது. அது போன்றே மெய்யறிவு பெற்றுப் பசுத் தன்மையையும் பாசத் தன்மையையும் நீக்கிவிட்ட ஒருவன் மீண்டும் அவற்றோடு பொருந்த மாட்டான். கேவல அவத்தையிலும், சகல அவத்தையிலும் தன்னைப் பிணித்திருந்த பாசத் தளைகளை அவன் சுட்டெரிடத்து விட்டு விழிப்பு நிலையின் துரியாதீதத்தை அடைவான்.